search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாத்திரம்"

    • எம்.ஜி.ஆர். நகரில் குடியிருக்கும் மக்களுக்கு பட்டா மாற்றம் செய்துதர வேண்டும்.
    • வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை ஒன்றியம் மணக்கரம்பை ஊராட்சி எம்.ஜி.ஆர். நகரில் குடியிருக்கும் மக்களுக்கு பட்டா மாற்றம் செய்திட வேண்டும், வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்நை ஆதிதிராவிடர் நல வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

    மாநகர குழு ராஜன் தலைமை தாங்கினார். கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட செயலாளர் சின்னை.பாண்டியன் விளக்க உரையாற்றினார்.

    போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அடுப்பு, பாத்திரம், பாய், தலையணை உள்ளிட்டவற்றுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • கண்ணந்தகுடியில் அடுத்தடுத்து 3 வீடுகள் தீப்பிடித்து எரிந்தது.
    • ரூ.10 ஆயிரம் மற்றும் சமையலுக்கு தேவையான பாத்திரங்களும் வழங்கினர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அருகே கள்ளிக்குடியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென ஒரு வீடு தீப்பிடித்து எரிந்தது.

    அதேபோல், தண்டலச்சேரி அருகே கண்ணந்தகுடியில் அடுத்தடுத்து 3 வீடுகள் தீப்பிடித்து எரிந்தது.

    இந்நிலையில், திருத்துறைப்பூண்டி நூற்றாண்டு அரிமா சங்கம் சார்பில் சங்கத்தின் தலைவர் லயன் முகம்மது இக்பால்தீன், செயலாளர் தங்கமணி, மாதவன், செல்வ முத்துக்குமரன், துரை ராயப்பன், சீனிவாச பாபு, ராஜ் மோகன் மற்றும் உறுப்பினர்கள் நேரில் சென்று தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.10 ஆயிரம் மற்றும் சமையலுக்கு தேவையான பாத்திரங்களும் வழங்கினர்.

    இதில் ஊர் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    • வேத மந்திரங்கள் முழங்க இன்னிசை மேளத்துடன் மணமக்களுக்கு திருமணம் நடைபெற்றது.
    • 2 கிராம் தங்கத்துடன் பாத்திரம், டம்ளர், மிக்ஸி உள்பட 30 வகையான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தமிழக அரசின் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் தஞ்சாவூர் அருகே உள்ள புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் அரசு சார்பில் 3 ஏழை ஜோடிகளுக்கு இலவசமாக திருமணம் செய்து வைக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சிக்கு எம்.எல்.ஏ.க்கள் துரை சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சூரியநாராயணன், உதவி ஆணையர்கள் நாகையா, கவிதா, கண்காணி ப்பாளர்கள் சந்திரசேகரன், பாலசுப்ரமணியன், இ.ஓ. மாதவன், மேற்பார்வை யாளர்கள் ரங்கராஜன், செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வேத மந்திரங்கள் முழங்க இன்னிசை மேளத்துடன் மணமக்களுக்கு திருமணம் நடைபெற்றது. இதில் 2 கிராம் தங்கத்துடன் பாத்திரம், டம்ளர் , மிக்ஸி உள்பட 30 வகையான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து கோவிலுக்கு வந்தவர்களுக்கு திருமண விருந்து கொடுக்கப்பட்டது.

    ×