search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாகிஸ்தான் குற்றச்சாட்டு"

    எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் இந்திய விமானப்படை அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டி உள்ளது. #IAFAttack #PakistanAccusesIAF
    இஸ்லாமாபாத்:

    புல்வாமா தாக்குதலை நடத்திய பயங்கரவாத அமைப்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை இன்று அதிகாலை கடும் தாக்குதல் நடத்தி உள்ளது. ஜம்மு காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை விமானங்கள் குண்டுகள் வீசின. இந்த தாக்குதலில் பயங்கரவாத முகாம்கள் அழிந்துவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.



    இந்நிலையில், முசாபராபாத் செக்டாரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் இந்திய விமானப்படை அத்துமீறி நுழைந்ததாக பாகிஸ்தான் குற்றம்சாட்டி உள்ளது. இந்திய விமானப்படையின் தாக்குதலில் உயிரிழப்போ பொருட்சேதமோ ஏற்படவில்லை என்றும் ராணுவத்தின் ஊடகப் பிரிவு தலைவர் ஆசிப் கபூர் கூறியுள்ளார். இதற்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் விமானப்படை உடனடியாக புறப்பட்டதால் இந்திய விமானம் திரும்பி சென்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

    புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவி வருவது குறிப்பிடத்தக்கது. #IAFAttack #PakistanAccusesIAF
    ரஷியாவிடம் இருந்து ஏவுகணை வாங்கும் இந்தியாவின் முடிவு தெற்கு ஆசியாவை சீர்குலைக்கும் என்று பாகிஸ்தான் குற்றம் சாட்டி உள்ளது. #S400missiles
    இஸ்லாமாபாத்:

    நாட்டின் வான்பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ரஷியாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணை அமைப்பை இந்தியா வாங்குகிறது. இதனால் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கும் பாகிஸ்தான் தற்போது வெளிப்படையாக குற்றம் சாட்டியிருக்கிறது. ரஷியாவிடம் இருந்து எஸ்-400 ரக ஏவுகணை வாங்கும் இந்தியாவின் முடிவு, தெற்கு ஆசியாவை சீர்குலைக்கும் என்றும், மீண்டும் ஆயுத போட்டிக்கு வழிவகுக்கும் எனவும் கூறியுள்ளது.

    இது குறித்து அந்த நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கடந்த 1998-ல் இரு நாடுகளும் அணுகுண்டு சோதனை நடத்தியதை தொடர்ந்து, இந்த பிராந்தியத்தில் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும் என்ற பரிந்துரையை பாகிஸ்தான் வைத்ததுடன், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை அமைப்பை வாங்கும் இந்தியாவின் முடிவுக்கும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் இந்த பரிந்துரை நிராகரிக்கப்பட்டதால் எந்தவகையான ஏவுகணைகளையும் செயலிழக்க செய்யும் வலிமையை அடைவதற்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டது’ என்று கூறப்பட்டு உள்ளது.

    மேலும், இந்த பிராந்தியத்தை சீர்குலைக்கும் எந்தவகையான ஆயுதங்களையும் எதிர்க்கும் வலிமை தங்களுக்கு இருப்பதாக பாகிஸ்தான் தொடர்ந்து நம்புவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.  #S400missiles
    ஜம்மு காஷ்மீர் மக்கள்மீது இந்திய ராணுவம் ரசாயன தாக்குதல் நடத்தியது என்ற பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. #JammuKashmir #ChemicalWeapons
    புதுடெல்லி:

    ஜம்மு காஷ்மீரில் வசித்து வரும் பொதுமக்கள் மீது ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது என பாகிஸ்தான் குற்றம் சாட்டியது.

    இந்நிலையில், பாகிஸ்தான் சுமத்திய குற்றச்சாட்டுக்கு இந்திய வெளியுறவு துறை சார்பில் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் கூறுகையில், ஜம்மு காஷ்மீரில் வசிக்கும் இந்தியர்கள் மீது ராணுவத்தினர் ரசாயன ஆயுதங்கள் மூலம் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர் என்ற பாகிஸ்தானின் குற்றச்சாட்டில் அடிப்படை ஆதாரம் எதுவும் இல்லை.

    சர்வதேச அளவில் இந்தியாவின் பெயரை கெடுக்கும் நோக்கில் பாகிஸ்தானின் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறது. ஆனால் அதில் பாகிஸ்தான் வெற்றி பெறப்போவதில்லை என தெரிவித்துள்ளார். #JammuKashmir #ChemicalWeapons
    ×