search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பரங்கிப்பேட்டை"

    • இந்த பூஜையில் கலந்து கொண்டால் எதிரிகள் விலகி நன்மை கிடைக்கும் என்பது ஐதீகமாக உள்ளது.
    • முருகப்பெருமான் ஆறுமுகம் கொண்டவராக இங்கு காட்சி தருகிறார்.

    திருமண தடை நீக்கும் முத்துக்குமாரசாமி கோவில்!

    கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் முத்துக்குமாரசாமி கோவில் உள்ளது.

    முருகப்பெருமான் ஆறுமுகம் கொண்டவராக இங்கு காட்சி தருகிறார்.

    ஆயிரம் ஆண்டுகள்பழமை வாய்ந்த இந்த கோவில் பல்வேறு பலன்களை தரும் ஸ்தலமாக உள்ளது.

    சுவேதா நதி (வெள்ளாறு), வங்காள விரிகுடா கடலையொட்டி இந்த கோவில் அமைந்திருக்கிறது.

    முத்துக்குமாரசாமி கோவிலில் ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் சத்ருசம்கார பூஜை நடத்தப்படுகிறது.

    இந்த பூஜையில் கலந்து கொண்டால் எதிரிகள் விலகி நன்மை கிடைக்கும் என்பது ஐதீகமாக உள்ளது.

    மேலும் திருமண தடை நீங்குதல், வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைத்தல், நாகதோஷம் விலகுதல் போன்ற சிறப்புபலன்கள் இந்த கோவிலில் கிடைக்கிறது.

    பதவி இறக்கம் செய்யப்பட்டவர்கள், வேலை இழந்தவர்கள் போன்றோர் முத்துக்குமாரசாமியை வழங்கினால் மீண்டும் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

    கோவில் தினமும் காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    இந்திரன் இங்கு வழிபட்டு அருள் பெற்றதாகவும், இடும்பன் இங்கு வாகனமாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

    இந்த கோவிலில் நவராத்திரி, கந்தசஷ்டி, திருகார்த்திகை, தைப்பூசம், சிவராத்திரி,பங்குனிஉத்திரம் சிறப்பாக நடைபெறுகிறது.

    கந்தசஷ்டி விழாவின் போது தெய்வானை திருக்கல்யாணமும், தைப்பூச விழாவில் வள்ளி திருக்கல்யாணமும் நடக்கிறது.

    தைப்பூசத்தன்று முருகன் சுவேதா நதிக்கும், மாசி மகத்தன்று வங்காள விரிகுடா கடலுக்கும் சென்று தீர்த்தவாரி செய்கிறார்.

    இமயமலையில் இருப்பதாக சொல்லப்படும் பாபாஜியின் தந்தை சுவேதநாத அய்யர் இந்த கோவிலில் தான் அர்ச்சகராக பணியாற்றினார்.

    இந்த கோவிலில் இருந்து சற்று தூரத்தில் பாபாஜியின் அவதார தல கோவில் அமைந்துள்ளது.

    தமிழகத்தில் உள்ள குடவறை கோவில்களில் முத்துக்குமாரசாமி கோவிலும் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    கடலூர் மாவட்டம் பரங்கி பேட்டை அருகே கூத்தாண்டவர்கோவில் திருவிழா நடைபெற்றது. இதில் திருநங்கைகள் ஆடி, பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    பரங்கிப்பேட்டை:

    கடலூர் மாவட்டம் பரங்கி பேட்டை அருகில் உள்ள கொத்தட்டை கிராமத்தில் பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர்கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் ஆண்டு தோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம் அதே போல் இந்த ஆண்டு திரு விழாவிற்கான கொடியேற்றும் நிகழ்ச்சி இந்த மாதம் 21-ந்தேதி நடைபெற்றது. அதன் பின்னர் 25-ந் தேதி அர்ச்சுணன் திரவுபதி திருக்கல்யாயணம் மற்றும் சாமி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருநங்கைகளுக்கு தாலிகட்டும் நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் திருநங்கைகள் வந்திருந்தனர்.

    மேலும் மும்பை, கொல்கத்தா, புனே, டெல்லி, கேரளா, கர்நாடகா, உள்ளிட்ட வெளி மாநிலங்களை சேர்ந்த திருநங்கைகளும் ஏரளமானோர் கலந்து கொண்டனர். அவர்கள் தங்களை புதுபெண்கள் போல அலங்கரித்து கொண்டு கோவிலுக்கு சென்றனர். கோவிலில் பூசாரிகள் மூலம் தாலி கட்டிக் கொண்டனர். பின்னர் திருநங்கைகள் அனைவரும் ஆடி, பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


    இதைத்தொடர்ந்து இன்று மாலை 5 மணி அளவில் அரவாண் களப்பலி நிகழ்ச்சி நடக்கிறது. இந்நிகழ்ச்சியில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொள்கிறார்கள்.

    விழா ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர்கள் தில்லை கோவிந்தன், ராஜேந்திரன், சிவராஜ் ஆகியோர் செய்துள்ளனர். அந்த பகுதியில் பரங்கிப்பேட்டை இன்ஸ் பெக்டர் செல்வம் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ×