search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயிர்க்காப்பீடு"

    • கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் குறுவை பருவத்துக்கு பயிர்க்காப்பீடு அறிவிக்கப்படவில்லை.
    • குறுவைக்கு தேவையான யூரியா தட்டுப்பாடு என்ற நிலையை தாண்டி முற்றிலும் இல்லை என்கிற நிலைக்கு சென்றுவிட்டது

    குத்தாலம்:

    குத்தாலம்ஒன்றியம் பெரம்பூரில் மாற்றுக்க ட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் விழா அ.தி.மு.க மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் தலைமையில் நடைபெற்றது.

    மாவட்ட அவைத் தலைவர் பி.வி.பாரதி, மாவட்ட துணை செயலாளர் செல்லையன், மாவட்ட மகளிரணி செய லாளர் சக்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தெற்கு ஒன்றிய செயலாளர் இளங்கோவன் வரவேற்றார்.

    இதில், பெரம்பூர், சேத்தூர், அனந்தநல்லூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து தி.மு.க மூத்த நிர்வாகி ஜெயபால் தலைமையில் தி.மு.க உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் 150 பேர் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. முன்னிலையில் தங்களை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர்.அவர்களுக்கு சால்வை அணிவித்து கட்சியில் இணைத்துக்கொண்ட ஓ.எஸ்.மணியன் பேசுகை யில், தி.மு.க ஆட்சி 5 ஆண்டுகளுக்கு நீடிக்காது. தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் குறுவை பருவத்து க்கு பயிர்க்காப்பீடுஅறிவிக்க ப்படவில்லை. குறுவைக்கு தேவையான யூரியா தட்டு ப்பாடு என்கிற நிலையை தாண்டி முற்றிலும்இல்லை என்கிற நிலைக்கு சென்றுவி ட்டது என்றார்.

    இந்நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர்கள் மகேந்திரன், சந்தோஷ்குமார்,ஜனா ர்த்தனன், ஊராட்சிமன்றத் தலைவர் சேத்தூர் மணிக ண்டன் மற்றும் ஆண்டவர், செந்தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட ஒன்றிய நிர்வா கிகள் பலர் கலந்து கொ ண்டனர்.

    ×