search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயிர்கடன்"

    • பெரம்பலூர் மாவட்டத்தில்தான் அதிக அளவில் பயிர்க்கடன் வழங்கப்பட்டு உள்ளது
    • 70-வது அகில இந்திய கூட்டுறவு வார விழாவில் அமைச்சர் சிவசங்கர் பெருமிதம்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்ட கூட்டுறவுத் துறையின் சார்பில் கர்ணம் சுப்ரமணியம் சகுந்தலா திருமண மண்டபத்தில் 70-வது அகில இந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. விழாவில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கலந்துகொண்டு 68 பயனாளிகளுக்கு ரூ.4.30 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு கடன் உதவிகளை வழங்கினார்.விழாவுக்கு மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கினார். பெரம்பலூர் எம்.எல்.ஏ. பிரபாகரன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். விழாவில் அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது:-

    பெரம்பலூர் மாவட்டத்தில் வட்டியில்லாப் பயிர்க்கடன் நவம்பர் 15 -ந் தேதி முடிய ரூ.245.08 கோடி 29,524 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலமாக நடப்பாண்டில் அக்டோபர் 2023 முடிய 41,405 விவசாயிகளுக்கு ரூ.30.22 கோடி மதிப்புள்ள 12975.366 டன் உர விற்பனை செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பயிர் கடன், டாம்கோ, டாப்செட்கோ கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்கள் வழங்கியதில் பெரம்பலூர் மாவட்டம் தமிழகத்திலேயே முதலிடத்தில் உள்ளது..இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் பெரம்பலூர் நகர்மன்றத் தலைவர் அம்பிகா ராஜேந்திரன், பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மீனா அண்ணாதுரை, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைபதிவாளர் பாண்டியன், மாவட்ட ஊராட்சிக்குழுத் துணைத்தலைவர் முத்தமிழ்ச்செல்வி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் கருணாநிதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • நடப்பாண்டில் விவசாய பயிர்கடன் ரூ.17 ஆயிரம் கோடி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
    • அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மித்ராவயல் கால்நடை கிளை நிலையத்தில் தரம் உயர்த்தப்பட்ட பார்வை கால்நடை மருந்தகத்தினை அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி மேம்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக விவ சாய பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத் திடும் பொருட்டு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப் பட்டு வருகிறது. தற்போது இயற்கை விவசாயம் பெரு மளவில் மதிக்கப்பட்டு போற்றப்பட்டும் வருகிறது.

    மேலும் விவசாயிகளின் நண்பனாக திகழ்ந்து வருவது கால்நடைகளாகும். கால் நடைகளின் உடல்நலத்தினை சரிவர பேணிக்காப்ப தற்கென தமிழக அரசால் கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப் பட்டு வருகிறது.

    அதன்படி கால்நடை களுக்கான மருத்துவ முகாம்கள் மற்றும் கால்நடை மருந்தகங்கள், கால்நடைக ளுக்கான காப்பீடுகள் உள்ளிட்ட திட்டங்களின் மூலம் கால்நடைகளை பேணிப்பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

    மேலும், விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் பல்வேறு வங்கி கடனுதவி களும் வழங்கப்பட்டு வருகிறது. அதில் நடப் பாண்டில் கூட்டுறவு துறையின் சார்பில் 1 லட்சத்து 4 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கிட இலக்கு நிர்ணயித்துள்ளார்கள். அதில் விவசாய கடன் மற்றும் பயிர் கடனுதவி களுக்கு மட்டும் ரூ.17 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் வழங்கப்பட உள்ளது.

    அதேபோன்று கால்நடை வளர்ப்போர்களுக்கு பயனுள்ள வகையில் ரூ.14 ஆயிரம் வட்டியில்லா கடனு தவியாகவும் வழங்கப்படு கிறது. இத்திட்டங்களை விவசாயிகள் முறையாக அறிந்து கொள்வதற்கென கிராமப்புறப்பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த ப் பட்டும் வருகிறது.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    இந்நிகழ்ச்சியில், தேவ கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பால்துரை, சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் சரண்யா, கால்நடைப் பரா மரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர்(பொ) கார்த்திகேயன், உதவி இயக்குநர் (காரைக்குடி) பாலசுப்பிரமணி, முன்னாள் அமைச்சர் தென்னவன், ஆவின் பால்வள தலைவர் சேங்கைமாறன், மித்ராவயல் ஊராட்சி மன்ற தலைவர் ஐஸ்வர்யா, காரைக்குடி வட்டாட்சியர் தங்கமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படுகிறது
    • அதிகாரி தகவல்

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் ஆயிரம் கோடி ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கப்பட உள்ளதாக கூட்டுறவு இணைப்பதிவாளர் நடராஜன் தெரிவித்தார்.

    திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சரகத்தில் 71 சங்கங்கள், திருவண்ணாமலை சரகத்தில் 88 சங்கங்கள் என 160 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.

    மாவட்டத்தில் 37 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், 4 நகர கூட்டுறவு வங்கிகளும், 8 தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளும், ஊரக வளர்ச்சி வங்கிகளும் செயல்பாட்டில் உள்ளன.

    கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு ஓராண்டிற்கு வட்டியில்லா பயிர்க்கடன், கால்நடை பராமரிப்பு மூலதன கடன் மற்றும் மாற்றுத் திறனாளி களுக்கான கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

    மேலும் குறைந்த வட்டியில் விவசாயம் அல்லாத நகைக்கடன், தானிய ஈட்டுக் கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன், தாட்கோ. டாப்செட்கோ, டாம்கோ கடன்களும் வழங்கப்படுகிறது.

    திருவண்ணாமலை மாவட்டத்திற்கு 2023-24 ஆம் நிதியாண்டில் ஆயிரம் கோடிக்கு பயிர்க்கடன் வழங்கப்பட உள்ளது. 205 கோடி ரூபாய் வட்டியில்லா கால்நடை பராமரிப்பு மூலதன கடன், 876 கோடி நகை கடன், 202 கோடி ரூபாய்க்கு மகளிர் சுய உதவிக் குழு கடன், மாற்றுத்திறனாளிகளுக்கு 4 கோடி ரூபாய் கடன், மத்திய கால முதலீட்டு கடன் 25 கோடி, இதர கடன்கள் 38.80 கோடி ஆகியவைகள் குறைந்த வட்டியில் வழங்கப்பட உள்ளது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தேவையான கடன் உதவிகளை அருகில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அதன் அருகில் உள்ள கிளைகள், கூட்டுறவு நிறுவனங்களில் குறைந்த வட்டியில் பெற்று பயன்பெற வருமாறு கூட்டுறவு சங்கங்களின் இணைப்ப திவாளர் நடராஜன் அழைப்பு விடுத்துள்ளார்.

    • கள்ளிக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் இதுவரை ரூ.3.78 கோடி விவசாயிகளுக்கு பயிர்க்கடனாக வழங்கப்பட்டுள்ளது.
    • நிகழ்ச்சிக்கு கூட்டுறவு இணை பதிவாளர் சித்ரா தலைமை தாங்கினார்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கள்ளிக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 69 ஆவது கூட்டுறவு வார விழா நடைபெற்றது.

    கூட்டுறவு இணை பதிவாளர் சித்ரா தலைமை தாங்கி பேசும்போது,

    திருவாரூர் மாவட்டத்தில் இதுவரையில் விவசாயிகளுக்கு பயிர் கடனாக ரூ. 288 கோடியும், கால்நடை பராமரிப்பு துறை சார்பில் ரூ.6.60 லட்சம் கடனாக வழங்கப்பட்டுள்ளது.

    கள்ளிக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் இதுவரை ரூ.3. 78 கோடி விவசாயிகளுக்கு பயிர்க்கடனாக வழங்கப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவி குழுக்கள் மற்றும் விவசாயிகள் மாற்றுத்திறனாளி தொழில் தொடங்க உள்ளிட்ட 17.81 லட்சம் கடன் வழங்கப்பட்டு உள்ளது என்றார்.

    சரக துணை சார்பதிவாளர் ராமசுப்பு முன்னிலை வகித்தார்.கள்ளிக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் செந்தில்நாதன் வரவேற்று பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் மாரி முத்து எம்.எல்.ஏ, கலந்து கொண்டு பயனாளிகளுக்கு கடன் தொகைகளை வழங்கி னார். இதில் முத்துப்பேட்டை ஒன்றிய தி.மு.க. செயலாளர் மனோகரன், கள்ளிக்குடி ஊராட்சி மன்ற தலைவர் சுசீலா செந்தில்நாதன், சரக துணை பதிவாளர் பிரபா, கள மேலாளர்கள் சசிகலா மற்றும் கார்த்தி முன்னோடி விவசாயிகள் ஜெயராமன், ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முடிவில் வங்கி செயலாளர் வி.கமலராஜன் நன்றி கூறினார்.

    ×