search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பத்திரமாக மீட்பு"

    இமாச்சல பிரதேசம் மாநிலத்தில் கனமழையில் சிக்கிய 50 ஐஐடி மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #HimachalFloods #HimachalRains
    சிம்லா:

    இமாச்சல பிரதேச மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அம்மாநிலத்தில் பெரும்பாலான இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வெள்ளத்தில் தத்தளிப்பவர்களை ராணுவம் மீட்டு வருகிறது. காட்டாற்று வெள்ளம் காரணமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, ரூர்கே ஐ.ஐ.டி.யில் இருந்து 50 மாணவர்கள் ஸ்பிதி மாவட்டத்தில் உள்ள லகுல் மலையில் பயிற்சி செய்து கொண்டிருந்தனர். அந்த மாணவர்கள் திடீரென காணாமல் போய்விட்டனர். அவர்கள் நிலச்சரிவில் சிக்கி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. 
     
    மாயமான மாணவர்கள் உள்பட அனைவரையும் கண்டுபிடிக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், விரைவில் அவர்கள் மீட்கப்பட்டு விடுவார்கள் என்றும் மாநில முதல் மந்திரி ஜெய்ராம் தாகூர் தெரிவித்துள்ளார்.



    இந்நிலையில், நிலச்சரிவில் சிக்கி மாயமான 50 ஐ ஐ டி மாணவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என இந்திய விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு தேவையான முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

    மேலும், நிலச்சரிவில் சிக்கியுள்ள பலரை மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதாக மீட்புக்குழுவினர் கூறினர். #HimachalFloods #HimachalRains
    ஹால்டியா துறைமுகம் அருகே சரக்கு கப்பலில் நிகழ்ந்த தீ விபத்து காரணமாக கப்பலில் இருந்த மாலுமி உள்பட 22 ஊழியர்களும் பத்திரமாக மீட்கப்பட்டு துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டனர். #ContainerShip #Fire #SailorsRescued
    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலம் ஹால்டியா துறைமுகம் அருகே வங்கக்கடலில் ‘எம்.வி. எஸ்.எஸ்.எல். கொல்கத்தா’ என்ற சரக்கு கப்பல் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டு இருந்தது. அந்த கப்பலில் நேற்று முன்தினம் இரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த கப்பலில் இருந்த ஊழியர்கள், கடற்படை அதிகாரிகளிடம் உதவி கேட்டனர். இதையடுத்து கடற்படை கப்பல் மற்றும் சரக்கு விமானத்தில் வீரர்கள் சரக்கு கப்பல் இருந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். பலத்த காற்று மற்றும் மோசமான தட்பவெப்பநிலை காரணமாக மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டது.

    எனினும் அந்த கப்பலில் இருந்த மாலுமி உள்பட 22 ஊழியர்களும் பத்திரமாக மீட்கப்பட்டு துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் அந்த கப்பலில் பிடித்த தீயை அணைக்கும் பணி நடந்தது.  #ContainerShip #Fire #SailorsRescued #tamilnews

    ×