search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணிகள் தொடக்கம்"

    • அவிநாசிலிங்கேஸ்வரா் கோவில் கும்பாபிஷேகம் 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 -ந் தேதி நடைெபறவுள்ளது.
    • சிவாச்சாரியா்கள், அறங்காவலா் குழுவினா், உபயதாரா், கோவில் அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
    • கிருஷ்ணகிரியில் ரூ.6 லட்சம் செலவில் குடிநீர் இணைப்பு பணிகள் நடந்தன.
    • அசோக்குமார் எம்.எல். ஏ., தொடங்கி வைத்தார்.

    கிருஷ்ணகிரி ஒன்றியம் அகசிப்பள்ளி ஊராட்சி புளியந்தோப்பு கொத்தாலன் கொட்டாய் கிராமத்தில், மாநில நிதிக்குழு மானியம் திட்டத்தில், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.6 லட்சம் மதிப்பில், ஏற்கனவே உள்ள ஆழ்துளைக் கிணறு முதல் சின்டெக்ஸ் டேங்க் வரை குழாய் அமைத்து 25 வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்ப டுகிறது. இதற்கான பணியை கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார், பூமி பூஜை செய்து நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அப்பகுதி மக்களிடம் குறைகளைக் கேட்ட றிந்தார்.

    இந்த நிகழ்ச்சியில், கிழக்கு ஒன்றிய செயலாளர் கன்னியப்பன், மேற்கு ஒன்றிய செயலாளர் சோக்காடி ராஜன், மாவட்ட கவுன்சிலர் ஜெயா ஆஜி, ஊராட்சி மன்ற தலைவர் நாராயணன், ஒன்றிய கவுன்சிலர் ராதா சென்றாயன், ஊர்கவுண்டர் திம்மராயன், கோவிந்தன், மாதன், ரமேஷ், குமார், மாது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கீழ்நிலைத் தொட்டி வேண்டுமென சூலூர் எம்.எல்.ஏ.விடம் பொது மக்கள் மற்றும் ஊராட்சி தலைவர் குமரவேல் கோரிக்கை வைத்தனர்.

    சூலூர்,

    பீடம் பள்ளி பகுதியில் குடிநீர் தேவைக்காக கீழ்நிலைத் தொட்டி வேண்டுமென சூலூர் எம்.எல்.ஏ.விடம் பொது மக்கள் மற்றும் ஊராட்சி தலைவர் குமரவேல் கோரிக்கை வைத்தனர்.

    இதை அடுத்து சட்டப்பேரவை உறுப்பினர் நிதியில் இருந்து ரூ. 15 லட்சம் நிதியை சூலூர் எம்.எல்.ஏ. வி.பி. கந்தசாமி ஒதுக்கீடு செய்தார்.

    இந்த கீழ்நிலை தொட்டிக்கான பணிகள் தொடக்க விழா நேற்று நடந்தது. அதோடு கோவை மாவட்ட ஊராட்சி தலைவர் சாந்திமதி அசோகன் மாவட்ட ஊராட்சி தலைவர் நிதியிலிருந்து ரூ.10 லட்சம் நிதியை பீடம் பள்ளி மயானம் செல்லும் பாதையை தார் சாலையாக மாற்ற ஒதுக்கீடு செய்துள்ளார் அதற்கான துவக்க பணிகள் இதொடக்க நிகழ்ச்சியும் நடந்தது.

    நிகழ்ச்சியில் சூலூர் எம்.எல்.ஏ. வி.பி. கந்தசாமி, கோவை மாவட்ட ஊராட்சி தலைவர் சாந்திமதி அசோகன், அ.தி.மு.க. அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் தோப்பு அசோகன், பீடம் பள்ளி ஊராட்சித் தலைவர் குமரவேல், ஒன்றிய குழு உறுப்பினர் ராஜலட்சுமி, முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் குட்டியப்பன், இடம் பள்ளி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

    • மொரட்டுப்பாளையம் ஊராட்சி தலைவர் என்.பிரபு உடனடி நடவடிக்கை எடுப்பதாக மக்களுக்கு வாக்குறுதி அளித்தார்.
    • சாமிநாதன், முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஊர்பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    பெருமாநல்லூர்:

    ஊத்துக்குளி தாலுகா, மொரட்டுப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட திம்மநாயக்கன்பாளையத்தில் இருந்து சிவசக்தி நகர், எம்.எஸ்.நகர், பொன்னியகவுண்டனூர், செம்பாவள்ளம், ஆர்.எஸ்.புதூர் வழியாக காங்கயம் சாலை வரை உள்ள சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும் குழியுமாக காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள். இந்த சாலை அமைத்து 25 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது.இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் மனு அளித்தனர். இதைத்தொடர்ந்து மொரட்டுப்பாளையம் ஊராட்சி தலைவர் என்.பிரபு உடனடி நடவடிக்கை எடுப்பதாக மக்களுக்கு வாக்குறுதி அளித்தார். அதன் அடிப்படையில் தற்போது கிராம சாலைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரூ. 3 கோடி மதிப்பீட்டில் சாலை மறுசீரமைப்பு பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. விழாவுக்கு ஊராட்சி தலைவர் என்.பிரபு தலைமை தாங்கினார். இதில் ஊராட்சி செயலாளர் சாமிநாதன், முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஊர்பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    ×