search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டாசு வழக்கு"

    பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது தொடர்பான விசாரணையை வருகிற 29-ந்தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். #FireWorks #SupremeCourt
    புதுடெல்லி:

    தீபாவளி மற்றும் தசரா பண்டிகையின்போது அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பதால் காற்று மாசு அடைந்து குழந்தைகளுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுவதால் டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, தீபாவளி நேரத்தில் பட்டாசு வெடிக்க குறிப்பிட்ட நேரம் விதித்து அனுமதி வழங்கியதுடன், பல்வேறு நிபந்தனைகளுடன் பட்டாசு தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு அனுமதி வழங்கியது.



    இதையடுத்து பட்டாசு தயாரிப்பாளர்கள் மற்றும் தமிழக அரசு தரப்பில் சில விளக்கங்கள் கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்கள் நேற்று நீதிபதி ஏ.கே.சிக்ரி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மூல மனுதாரர் தரப்பு வக்கீல், தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க சற்று கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை வருகிற 29-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர். #FireWorks #SupremeCourt
    கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு பட்டாசு வெடித்த வழக்கில் அர்ஜூன் சம்பத் உள்பட 5 பேருக்கு தலா ரூ. 1000 அபராதம் விதித்து நீதிபதி வேலுச்சாமி தீர்ப்பளித்தார். #ArjunSampath
    கோவை:

    பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு கடந்த 2016-ம் ஆண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாதானது. இதனை பலர் வரவேற்றனர். சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்நிலையில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டாடும் விதமாக இந்து மக்கள் கட்சி நிறுவனத்தலைவர் அர்ஜூன் சம்பத் உள்பட 5 பேர் கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை தெரிவித்தனர்.

    இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் அர்ஜூன் சம்பத் உள்பட 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். வழக்கு விசாரணை கோவை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் எண் 3-ல் நடைபெற்று வந்தது.

    இந்நிலையில் இன்று காலை தீர்ப்பு வழங்கப்பட்டது. கலெக்டர் அலுவலகம் முன்பு பட்டாசு வெடித்த அர்ஜூன் சம்பத் உள்பட 5 பேருக்கும் தலா ரூ. 1000 அபராதம் விதித்து நீதிபதி வேலுச்சாமி தீர்ப்பளித்தார். #ArjunSampath
    ×