என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பட்டாசு பறிமுதல்"
- அனுமதியின்றி வைத்திருந்ததாக ரூ.20 லட்சம் பட்டாசு பறிமுதல் செய்யப்பட்டது.
- சின்னகாமன்பட்டி கிராம நிர்வாக அதிகாரி ரவிராஜ் கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள விஸ்வநத்தம் கிராமம் ஆர்.எஸ்.ஆர். நகரில் சரவணன் என்பவருக்கு சொந்தமான லாரி டிரான்ஸ்போர்ட் நிறு வனம் செயல்பட்டு வருகிறது.
இங்கு அதிகாரிகள் நடத்திய திடீர் ஆய்வில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள 526 பெட்டிகளில் பட்டாசுகள் அனுமதியின்றி வைத்திருந்ததாக தெரிகிறது.
இதுகுறித்து சின்னகாமன் பட்டி கிராம நிர்வாக அதிகாரி ரவிராஜ் கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் டிரான்ஸ்போர்ட் நிறுவன உரிமையாளர் சரவணன் மீது வழக்குப்பதிவு செய்து, பட்டாசு பெட்டிகளையும் பறிமுதல் செய்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- பட்டாசு கடை நடத்த கடுமையான கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் விதித்தது.
- யாராவது அனுமதியின்றி விற்பனை செய்கிறார்களா? என்று அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
ஓசூர்:
தமிழக-கர்நாடகா மாநில எல்லையான பகுதியான கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள அத்திப்பள்ளியில் ஒரு பட்டாசு கடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட வெடிவிபத்தில் 16 பேர் பலியாகினர்.
இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் பட்டாசு கடை நடத்த கடுமையான கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் விதித்தது.
மேலும், விதிமுறைகளை மீறி யாராவது பட்டாசுகளை பதுக்கி விற்பனை செய்தல், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்து இருந்தது.
மேலும் மாவட்டத்தில் யாராவது அனுமதியின்றி விற்பனை செய்கிறார்களா? என்று அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் அருகே ஜுஜுவாடி திருவள்ளுவர் நகரில் முறையான அரசு அனுமதியின்றி, 85 அட்டைப் பெட்டிகளில் பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்ததாக அதே பகுதியை சேர்ந்த சின்னதுரை (வயது40) என்பவரை சிப்காட் போலீசார் கைது செய்து, பட்டாசு பெட்டிகளை பறிமுதல் செய்தனர்.
இதேபோல், நேற்று தொடர் நடவடிக்கையாக அதே பகுதியில், போலீசார் அதிரடி ஆய்வு செய்து, தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் 32 அட்டைப்பெட்டிகளில் பட்டாசுகளை அனுதியின்றி பதுக்கிவைத்திருந்ததாக வெங்கட விஜயன் (28) என்பவரை போலீசார் கைது செய்து, பட்டாசு பெட்டிகளை பறிமுதல் செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்