என் மலர்
உள்ளூர் செய்திகள்

அனுமதியின்றி வைத்திருந்த பட்டாசு பறிமுதல்
- அனுமதியின்றி வைத்திருந்ததாக ரூ.20 லட்சம் பட்டாசு பறிமுதல் செய்யப்பட்டது.
- சின்னகாமன்பட்டி கிராம நிர்வாக அதிகாரி ரவிராஜ் கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள விஸ்வநத்தம் கிராமம் ஆர்.எஸ்.ஆர். நகரில் சரவணன் என்பவருக்கு சொந்தமான லாரி டிரான்ஸ்போர்ட் நிறு வனம் செயல்பட்டு வருகிறது.
இங்கு அதிகாரிகள் நடத்திய திடீர் ஆய்வில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள 526 பெட்டிகளில் பட்டாசுகள் அனுமதியின்றி வைத்திருந்ததாக தெரிகிறது.
இதுகுறித்து சின்னகாமன் பட்டி கிராம நிர்வாக அதிகாரி ரவிராஜ் கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் டிரான்ஸ்போர்ட் நிறுவன உரிமையாளர் சரவணன் மீது வழக்குப்பதிவு செய்து, பட்டாசு பெட்டிகளையும் பறிமுதல் செய்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story






