search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவில்"

    • மத்திய திருப்பதி என்று அழைக்கப்படுகிறது.
    • புதுவையில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது.

    புதுவையில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவில். மத்திய திருப்பதி என்று அழைக்கப்படும் இங்கு வலம்புரி ஸ்ரீமகாகணபதி, பட்டாபிஷேக ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி, ஸ்ரீவாரி வெங்கடாசலபதி மற்றும் 36 அடி விஸ்வரூப ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். அக்கோவிலில் ஸ்ரீவாரி வெங்கடாசலபதிக்கு புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் சிறப்பு சேவைகள் நடப்பது வழக்கம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமை காலையில் திருமஞ்சனமும், சனிக்கிழமை காலையில் ஸ்வர்ணபுஷ்ப சிறப்பு சங்கல்பம் மற்றும் விசேஷ அர்ச்சனை நடைபெறும்.

    அதன்படி, புரட்டாசி மாதத்தின் 2-வது சனிக்கிழமையான நேற்று வெங்கடாசலபதி சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவையொட்டி காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீபஞ்சமுக ஜெயமாருதி சேவா டிரஸ்டின் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் கோதண்ட ராமன், செயலாளர் நரசிம்மன், உப தலைவர் யுவராஜன், அறங்காவலர்கள் பழனியப்பன், செல்வம், கோவில் நிர்வாக அதிகாரி பாலசுப்ரமணியன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • இந்த கோவிலில் கடந்த 2020-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது.
    • சன்னதிகளில் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும்.

    பஞ்சமுக ஸ்ரீஜெயமாருதி சேவா டிரஸ்ட் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் கோதண்டராமன் விடுத்துள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மத்திய திருப்பதி என்று அழைக்கப்படும் பஞ்சவடியில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் கடந்த 2020-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி வருகிற 7-ந்தேதி வருஷாபிஷேக விழா (கும்பாபிஷேக தினம்) கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் காலை சீனிவாச பெருமாள் சன்னதிக்கு பின்புறம் உள்ள யாகசாலையில் காலை 7 மணி முதல் கடம் பிரதிஷ்டை செய்யப்பட்டு விசேஷ ஹோமங்கள் நடக்கிறது.

    காலை 9 மணி அளவில் ஸ்ரீவலம்புரி மகா கணபதி, ஸ்ரீசீதா சமேத பட்டாபிஷேக ராமர், ஸ்ரீவாரி வெங்கடாஜலபதி மற்றும் 36 அடி உயரமுள்ள விஸ்வரூப ஜெய மங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆகியோருக்கு பால், பன்னீர், சந்தனம் போன்ற மங்கல திரவியங்களால் விசேஷ திருமஞ்சனம் நடைபெறுகிறது.

    அதைத்தொடர்ந்து கடம் புறப்பாடுடன் அனைத்து சன்னதிகளிலும் புனிதநீர் தெளிக்கப்படும். பகல் 11 மணிக்கு அலங்காரத்துடன் சன்னதிகளில் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×