என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Panchavadi Anjaneya Temple"

    • இன்று விசேஷ லட்சார்ச்சனையும், பூர்வாங்க பூஜைகளும் தொடங்குகிறது.
    • மாலை 4.30 மணிக்கு சீதாராம திருக்கல்யாணம் வைபவம் நடக்கிறது.

    சென்னை:

    திண்டிவனம்- புதுச்சேரி சாலையில் மத்திய திருப்பதி என்று அழைக்கப்படும் பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் ராமநவமி விழா நேற்று தொடங்கி, வருகிற 6-ந்தேதி சீதாராம திருக்கல்யாண வைபவத்துடன் விழா நிறைவடைகிறது.

    விழா நாட்களில் யாகசாலையில் விசேஷ ஹோமங்கள் மற்றும் ஏழு கால சிறப்பு பூஜைகள் நடக்கிறது. கோவிலில் உள்ள ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி சன்னதியில் இன்று (வியாழக்கிழமை) காலை விசேஷ லட்சார்ச்சனையும், பூர்வாங்க பூஜைகளும் தொடங்குகிறது.

    அக்னிமதனம் என்று அழைக்கப்படும் அக்னியை உருவாக்கி உரிய பூஜைகளுக்குப் பின் யாகம் வளர்க்கப்படுகிறது.

    தொடர்ந்து, ராமநவமியையொட்டி 6-ந்தேதி காலை 8.45 மணிக்கு சீதா சமேத ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி மற்றும் 36 அடி விஸ்வரூப ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேய சாமிக்கு 2 ஆயிரம் லிட்டர் பால், பன்னீர், சந்தனம் போன்ற திரவியங்களால் அன விசேஷ திருமஞ்சனம் நடக்கிறது.

    7-ம் கால பூஜைகளுக்கு பிறகு திருமஞ்சனமும், புஷ்பங்களால் அபிஷேகமும் நடக்கிறது. காலை 9 மணிக்கு சிறப்பு நாதஸ்வரம் மற்றும் கவிஞர் சுப்பு ஆறுமுகத்தின் மகள் பாரதி திருமகன் குழுவினரின் வில்லிசை ராமாயண நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு சீதாராம திருக்கல்யாணம் வைபவம் நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் எம்.கோதண்டராமன், கூடுதல் தலைவர் ஆர்.யுவராஜன், செயலாளர்கள் எஸ்.நரசிம்மன் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

    • நாடு முழுவதிலும் உள்ள பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் என்ற பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று அனைத்து கோவில்களிலும் வெகு விமர்சையாக நடைபெற்றது.
    • மத்திய திருப்பதி என்றழைக்கப்படும் இந்த கோவிலில் விசேஷ பூஜைகளுடன் வண்ண வண்ண பூக்கள் மற்றும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வைகுண்ட ஏகாதசி உற்சவ சொர்க்கவாசல் நடை திறப்பு நிகழ்ச்சி நடந்தது.

    புதுச்சேரி:

    நாடு முழுவதிலும் உள்ள பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் என்ற பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி  அனைத்து கோவில்களிலும் வெகு விமர்சையாக நடைபெற்றது.

    இதன் ஒரு பகுதியாக பஞ்சவடியில் வலம்புரி மகாகணபதி, பட்டாபிஷேக ராமச்சந்திர மூர்த்தி, ஸ்ரீவாரி வெங்கடாசலபதி மற்றும் 36 அடி விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் சாமி அமைந்துள்ள இந்த கோவிலில் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வெங்கடாஜலபதி சுவாமி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

    மத்திய திருப்பதி என்றழைக்கப்படும் இந்த கோவிலில் விசேஷ பூஜைகளுடன் வண்ண வண்ண பூக்கள் மற்றும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வைகுண்ட ஏகாதசி உற்சவ சொர்க்கவாசல் நடை திறப்பு நிகழ்ச்சி நடந்தது.

    முன்னதாக மூலவர் ஸ்ரீவாரி வெங்கடாஜலபதி சுவாமிக்கு விசேஷ திருமஞ்சனம், தீபாரா தனை மற்றும் சாற்றுமுறை நிகழ்ச்சியும் ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு மோகினி அலங்காரம் நடைபெற்றது.

    வெங்கடாஜலபதி கோவில் முழுவதும் திராட்சை பழங்களால் அலங்கரிக்கப்பட்ட பழத்தோட்டம் போன்ற அலங்காரம் பக்தர்களை கவர்ந்தது. தொடர்ந்து  5 மணிக்கு சொர்க்கவாசல் நடைதிறப்பு ஸ்ரீதேவி பூமிதேவி சமேத சீனிவாச பெருமாள் பரமபத வாசல் (சொர்க்கவாசல் வழியாக) எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    தொடர்ந்து புஷ்ப வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று முதல் 7 நாட்களுக்கு சொர்க்கவாசல் திறந்திருக்கும்.

    ×