search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நூதன முறையில் திருட்டு"

    • ராணி நகையை திருடிவிட்டு வெளியே வரவும் தயாராக நின்ற காரில் ஏறி தப்பிச் சென்றது தெரியவந்தது.
    • கைது செய்யப்பட்ட மதன்ராஜிடம் 4½ பவுன் தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டது.

    சூலூர்,

    சூலூர் அருகே கலங்கல் செல்லும் பாதையில் வசிக்கும் கண்ணன் (44) தனது வீட்டின் கீழ் தளத்தில் நகைக்கடை நடத்தி வருகிறார். கடந்த 13-ந் தேதி கடையில் உரிமையாளர் கண்ணன் மற்றும் தங்க வேலை செய்யும் ஆசாரி சீனிவாசன் ஆகியோர் இருந்தனர். அப்போது பர்தா அணிந்த பெண் ஒருவர் கடைக்கு வந்து தன்னிடம் 13 பவுன் பழைய தங்க நகை உள்ளது, அதை மாற்றி எனக்கு 10 பவுன் புதிய தங்க நகை தருமாறு கேட்டார்.

    நகைக்கடை உரிமையாளர் 13 பவுன் பழைய தங்க நகையை உரசி பார்க்க திரும்பிய போது அங்கிருந்த புதிய 10 பவுன் தங்க நகைகளை எடுத்துக்கொண்டு தயாராக இருந்த காரில் அந்த பெண் தப்பி ஓடி விட்டார்.

    இதையடுத்து கண்ணன் சூலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சூலூர் போலீசார் கண்காணிப்பு காமிரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

    விசாரணையில் நகை கடையில் 10 பவுன் நகையை திருடிச் சென்றது சேலம் மாவட்டம் மணியனூர் காந்தி நகரைச் சேர்ந்த மதன்ராஜ் (வயது 40) மற்றும் அவரது உறவுப் பெண் காட்பாடியைச் சேர்ந்த ராணி (35) என்பது தெரியவந்தது. 2 பேரும் திட்டமிட்டே அந்த நகைக்க டைக்கு சென்றுள்ளனர்.

    மதன்ராஜ் காருடன் வெளியே தயாராக நின்றுள்ளார். ராணி நகையை திருடிவிட்டு வெளியே வரவும் தயாராக நின்ற காரில் ஏறி தப்பிச் சென்றது தெரியவந்தது. இவர்களில் மதன்ராஜ் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 4½ பவுன் தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டது.

    ராணி தலைமறைவாக உள்ளார். அவரை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள்.

    • வங்கி அதிகாரி பேசுவதாக கூறி மோசடி
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    செங்கம் தாலுகா கல்லரைப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் வரதன் மகன் சுரேஷ். இவர் நேற்று திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

    நான் கூலி வேலை செய்து வருகிறேன். தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் சேமிப்பு கணக்கு வைத்து உள்ளேன். கடந்த 23-ந் தேதி மாலையில் எனது செல்போனுக்கு வங்கியில் இருந்த அதிகாரி பேசுவதாக கூறி உனது ஏ.டி.எம். கார்டு தேதி முடிவடையும் நிலையில் உள்ளது. புதியதாக கார்டு பெற வேண்டும். அதற்கு உங்கள் ஏ.டி.எம். கார்டின் பின்புறம் உள்ள குறியீடு எண்ணை கொடுக்குமாறு கேட்டார். நானும் அவர் கூறியதை உண்மை என்று நம்பி எனது ஏ.டி.எம். கார்டு பின்புறம் உள்ள குறியீடு எண்ணை அவருக்கு கொடுத்தேன்.

    அதன்பிறகு அவர் எனது செல்போனுக்கு தகவல் வரும். அந்த குறியீடு எண்ணை கூறுமாறு சொன்னார்.

    அவர் கூறியவாறே நான் அந்த எண்ணை அவரிடம் கூறினேன். அப்போது எனது வங்கி கணக்கில் ரூ.1 லட்சத்து 57 ஆயிரம் தொகை இருப்பு இருந்தது.

    அதன்பிறகு சில நாட்கள் கழித்து நேற்றுமுன்தினம் நடமாடும் ஏ.டி.எம். வங்கி அலுவலரிடம் எனது ஆதார் எண்ணை வைத்து பணம் எடுக்க முயன்ற போது வங்கி கணக்கில் பணம் இல்லை என தகவல் சொன்னார்.

    இது குறித்து நேற்று தேவனாம்பட்டில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு சென்று கிளை மேலாளரை சந்தித்து விவரம் கூறிய போது எனது வங்கி கணக்கு ஸ்டேட் மெண்டடை என்னிடம் கொடுத்து போலீசில் புகார் அளிக்க கூறினார்.

    எனவே இந்த புகார் மனுவினை பரிசீலித்து எழுத படிக்க தெரியாத என்னை ஏமாற்றி எனது வங்கி கணக்கில் இருந்து நூதன முறையில் பணத்தை எடுத்த நபர் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டு தர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    ×