search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நியமிக்கக் கூடாது"

    இடைக்கால டி.ஜி.பி.க்களை மாநில அரசுகள் நியமிக்கக் கூடாது. புதிய டி.ஜி.பி.யாக நியமிக்க தகுதியானவர்களின் பெயர்களை மத்திய பணியாளர் தேர்வாணையத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #SupremeCourt #ActingDGP
    புதுடெல்லி:

    மாநில அரசுகள் தங்களுக்கு வேண்டியவர்களையும், தங்களது அரசியல் கண்ணோட்டத்துக்கு ஏற்ப செயல்படுபவர்களையுமே போலீஸ் டி.ஜி.பி.க்களாக நியமிப்பதாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக, ஓய்வுபெறும் நிலையில் உள்ளவர்களை டி.ஜி.பி.யாக நியமித்து விட்டு, பிறகு பணிநீட்டிப்பு வழங்குவதாகவும் புகார் நிலவி வருகிறது. இதை எதிர்த்து, ஓய்வுபெற்ற டி.ஜி.பி.க்கள் பிரகாஷ் சிங், என்.கே.சிங் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனுக்களை தாக்கல் செய்தனர். அம்மனுக்கள் மீது கடந்த 2006-ம் ஆண்டு, சுப்ரீம் கோர்ட்டு வரலாற்று சிறப்புமிக்க உத்தரவுகளை பிறப்பித்தது.

    அவற்றில், டி.ஜி.பி., போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட அதிகாரிகளின் நியமனம் தகுதி அடிப்படையிலும், வெளிப்படையாகவும், குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பதவியில் இருக்கும்வகையிலும் அமைய வேண்டும் என்ற உத்தரவும் அடங்கும்.

    போலீஸ் மீது மாநில அரசுகள் செல்வாக்கு செலுத்துவதை தடுக்க மாநில பாதுகாப்பு ஆணையம் அமைக்க வேண்டும், போலீஸ் அதிகாரிகள் மீதான புகார்களை விசாரிக்க போலீஸ் புகார் ஆணையம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட உத்தரவுகளையும் பிறப்பித்தது.

    ஆனால், இந்த உத்தரவுகளை மாநில அரசுகள் அமல்படுத்தவில்லை என்று கூறி, பா.ஜனதா பிரமுகர் அஸ்வினி குமார் உபாத்யாயா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். தனது மனுவை அவசர மனுவாக கருதி விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

    இதுபோல், 2006-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவில் திருத்தம் செய்யக்கோரி, மத்திய அரசு சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு, நேற்று அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தது.

    நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறி இருப்பதாவது:-

    மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள், எந்த போலீஸ் அதிகாரியையும் இடைக்கால டி.ஜி.பி.யாக நியமிக்கக் கூடாது.

    டி.ஜி.பி., போலீஸ் கமிஷனர் ஆகிய பதவிகளில் நியமிக்க தகுதியான அதிகாரிகளின் பெயர்களை மத்திய பணியாளர் தேர்வாணையத்துக்கு (யு.பி.எஸ்.சி.) அனுப்பி வைக்க வேண்டும். பணியில் உள்ள டி.ஜி.பி. ஓய்வுபெறுவதற்கு 3 மாதங்களுக்கு முன்பே இதை செய்ய வேண்டும்.

    அப்பெயர்களில், மிகவும் தகுதிவாய்ந்த 3 பேர் கொண்ட பட்டியலை மத்திய பணியாளர் தேர்வாணையம் இறுதி செய்யும். அந்த 3 பேரில் ஒருவரை மாநில, யூனியன் பிரதேச அரசுகளே தேர்வு செய்து, டி.ஜி.பி.யாக நியமித்துக் கொள்ளலாம். அப்படி நியமிக்கப்படுபவருக்கு, குறைந்தபட்சம் 2 ஆண்டுகளாவது பதவிக்காலம் மிச்சம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

    ஆகவே, போலீஸ் அதிகாரிகள் நியமனம் தொடர்பாக, மாநில அரசுகள் ஏதேனும் சட்டமோ, விதிமுறைகளோ வகுத்திருந்தால், அந்த சட்டமும், விதிமுறைகளும் நிறுத்தி வைக்கப்பட வேண்டும்.

    இருப்பினும், இந்த உத்தரவில் திருத்தம் செய்யக்கோரி மாநில அரசுகள் எங்களை அணுகலாம்.

    இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.  #SupremeCourt #ActingDGP #Tamilnews 
    பா.ஜனதா பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை கவர்னர் கர்நாடக சட்டமன்றத்துக்கு ஆங்கிலோ இந்திய நியமன எம்.எல்.ஏ.வை நியமிக்கக்கூடாது என சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) மனு தாக்கல் செய்தன. #KarnatakaCMRace #AngloIndianMLA
    புதுடெல்லி:

    கர்நாடக மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் மற்றும் ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் இணைந்து சுப்ரீம் கோர்ட்டில் ஒரு இடைக்கால மனு தாக்கல் செய்தன. அதில், பா.ஜனதா கட்சி பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை கவர்னர் வஜூபாய் வாலா கர்நாடக சட்டமன்றத்துக்கு ஆங்கிலோ இந்திய நியமன எம்.எல்.ஏ.வை நியமிக்கக்கூடாது.



    இது சட்டமன்றத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக எடுக்கப்படும் சட்டவிரோத முயற்சி. இது நியாயமற்றதும், ஜனநாயக நடைமுறையை கேலிக்கூத்தாக்குவதும் ஆகும் என்று கூறப்பட்டு இருந்தது.

    இந்த கட்சிகள் ஏற்கனவே எடியூரப்பா முதல்-மந்திரி பதவி ஏற்க தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்த மனுவுடன் சேர்த்து இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுக்கப்படுகிறது. முன்னதாக காலையில் நீதிபதி ஏ.கே.சிக்ரி தலைமையிலான அமர்வு எடியூரப்பா பதவி ஏற்க தடை விதிக்க மறுத்துவிட்டது. #KarnatakaCMRace #AngloIndianMLA
    ×