search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிதி பற்றாக்குறை"

    2019-20ம் நிதியாண்டில் தமிழக அரசின் நிதி பற்றாக்குறை ரூ.44,176 கோடியாக இருக்கும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #TamilNaduBudget #TNBudget2019 #Budget2019 #OPS
    சென்னை:

    தமிழகத்தில் 2019-2020-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை (நிதிநிலை அறிக்கை) தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை இன்று கூடியது. காலை 10 மணிக்கு நிதித்துறை அமைச்சரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-



    2019-20ம் நிதியாண்டில் தமிழக அரசின் வரி வருவாய் ரூ.1,97,721 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் நிதி பற்றாக்குறை ரூ.44,176 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

    உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அரசு தீவிர முனைப்பு காட்டி வருகிறது. நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிகளுக்கு ரூ.284 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு மாற்று வீடுகள் கட்டித் தரப்படும். இதற்காக பட்ஜெட்டில் ரூ.1700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.  #TamilNaduBudget #TNBudget2019 #Budget2019 #OPS
    நிதி பற்றாக்குறையால் சிக்கித் தவிக்கும் மத்திய அரசு ரிசர்வ் வங்கியிடம் 3.6 லட்சம் கோடி ரூபாய் எதிர்பார்ப்பதாக வெளியான தகவலுக்கு நிதி விவகார செயலாளர் விளக்கம் அளித்துள்ளார். #RBI #DEASecretary
    புதுடெல்லி:

    பிரதமர் மோடியின் தவறான பொருளாதார கொள்கையால் மத்திய அரசு கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் குற்றம்சாட்டியிருந்தார்.

    இந்த நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக மத்திய அரசு  ரிசர்வ் வங்கியிடம் இருந்து 3.6 லட்சம் கோடி ரூபாய் கேட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

    இந்நிலையில், இதுதொடர்பாக மத்திய அரசின் நிதி விவகார செயலாளர் சுபாஷ் சந்திரா கார்க் இன்று விளக்கம் அளித்துள்ளார்.



    'மத்திய அரசின் பொருளாதார கணிப்புகள் சரியான பாதையில் சென்று கொண்டுள்ளது. ஆனால், ஊடகங்களின் வாயிலாக சில தவறான தகவல்களும், கணிப்புகளும் வெளியிடப்படுகின்றன.

    கடந்த 2013-14 நிதியாண்டில் 5.1 சதவீதமாக இருந்த நிதி பற்றாக்குறை 2014-15-க்கு பின்னர் படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் வெளிச்சந்தையில் இருந்து வாங்கும் கடன்களில் 70 ஆயிரம் கோடி ரூபாய் குறைந்துள்ளது. 2018-19 நிதியாண்டின் முதல் காலாண்டுக்குள் நிதி பற்றாக்குறை 3.3 சதவீதமாக குறையும்.

    ரிசர்வ் வங்கிக்கான சரியான பொருளாதார மூலதனக் கொள்கையை வகுப்பது தொடர்பாகதான் இப்போது ரிசர்வ் வங்கியுடன் நாங்கள் ஆலோசனை நடத்தி வருகிறோம்’ என தனது டுவிட்டர் பக்கத்தில் கார்க் குறிப்பிட்டுள்ளார். #RBI #DEASecretary
    பாகிஸ்தானில் கடுமையான நிதி பற்றாக்குறையால் தள்ளாட்டம் போடும் ரெயில்வே துறையை நிர்வகிப்பதற்காக சில நிலங்களை விற்க பிரதமர் இம்ரான் கான் தீர்மானித்துள்ளார். #PakistanRailways #PakistansellRailwaysland
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் பிரதமராக பொறுப்பேற்றுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரரும், தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான் கான், பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    ஆடம்பரமான பிரதமர் மாளிகையில் தங்காமல் தனது சொந்த வருமானத்தில் கட்டிய வீட்டில் வாழ்ந்துவரும் இம்ரான் கான், மந்திரிகள் மற்றும் அரசு உயரதிகாரிகள் பயன்படுத்தி வந்த சொகுசு கார்களை விற்று அந்த பணத்தை அரசு கருவூலத்தில் சேர்க்குமாறு உத்தரவிட்டிருந்தார்.

    வெளிநாடுகளில் இருந்து உயர்ரக கார்கள், செல்போன் மற்றும் அழகு சாதனங்கள் இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. 

    முன்னாள் பிரதமர் அப்பாசியின் தவறான திட்டங்களாலும் வைத்துச் சென்ற கடன் சுமையாலும் அரசு நிர்வாகத்தை நடத்த பணம் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளதாக இம்ரான் கான்தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், சுமார் 3700  கோடி ரூபாய் நிதி பற்றாக்குறையில் அந்நாட்டு ரெயில்வே துறை நிர்வாகம் சிக்கி தவிக்கிறது. புதிய ரெயில்கள் மற்றும் சம்பள செலவினங்களால் பல ஆண்டுகளாக இந்த பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

    எனவே, பாகிஸ்தான் முழுவதும் தனியாரிடம் சிக்கியுள்ள ரெயில்வே நிலங்களை மீட்டு, அவற்றில் முக்கிய பகுதியில் உள்ள நிலங்களை விற்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அந்நாடின் ரெயில்வே மந்திரி ஷேக் ரஷீத் அஹமத் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, அவசர சட்டம் இயற்றுமாறு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த திட்டத்துக்கு சம்மதம் தெரிவித்துள்ள இம்ரான் கான், நாட்டிலுள்ள முக்கிய பெருநகரங்களில் ரெயில்வே துறைக்கு சொந்தமான, பயம்படுத்தப்படாத காலி நிலங்கள் தொடர்பான பட்டியலை இன்னும் 15 நாட்களில் தயாரிக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக ஷேக் ரஷீத் அஹமத் குறிப்பிட்டுள்ளார்.

    ரெயில்வே நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் வேளையில் ரெயில் பாதைகளின் ஓரங்களில் வாழும் ஏழை, எளிய மக்களின் குடிசைகள் பாதிக்காதவாறு நடவடிக்கை எடுக்குமாறு இம்ரான் கான் அறிவுறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார். #PakistanRailways #PakistansellRailwaysland
    ×