என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » dea secretary
நீங்கள் தேடியது "DEA Secretary"
நிதி பற்றாக்குறையால் சிக்கித் தவிக்கும் மத்திய அரசு ரிசர்வ் வங்கியிடம் 3.6 லட்சம் கோடி ரூபாய் எதிர்பார்ப்பதாக வெளியான தகவலுக்கு நிதி விவகார செயலாளர் விளக்கம் அளித்துள்ளார். #RBI #DEASecretary
புதுடெல்லி:
பிரதமர் மோடியின் தவறான பொருளாதார கொள்கையால் மத்திய அரசு கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக மத்திய அரசு ரிசர்வ் வங்கியிடம் இருந்து 3.6 லட்சம் கோடி ரூபாய் கேட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
'மத்திய அரசின் பொருளாதார கணிப்புகள் சரியான பாதையில் சென்று கொண்டுள்ளது. ஆனால், ஊடகங்களின் வாயிலாக சில தவறான தகவல்களும், கணிப்புகளும் வெளியிடப்படுகின்றன.
கடந்த 2013-14 நிதியாண்டில் 5.1 சதவீதமாக இருந்த நிதி பற்றாக்குறை 2014-15-க்கு பின்னர் படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் வெளிச்சந்தையில் இருந்து வாங்கும் கடன்களில் 70 ஆயிரம் கோடி ரூபாய் குறைந்துள்ளது. 2018-19 நிதியாண்டின் முதல் காலாண்டுக்குள் நிதி பற்றாக்குறை 3.3 சதவீதமாக குறையும்.
ரிசர்வ் வங்கிக்கான சரியான பொருளாதார மூலதனக் கொள்கையை வகுப்பது தொடர்பாகதான் இப்போது ரிசர்வ் வங்கியுடன் நாங்கள் ஆலோசனை நடத்தி வருகிறோம்’ என தனது டுவிட்டர் பக்கத்தில் கார்க் குறிப்பிட்டுள்ளார். #RBI #DEASecretary
பிரதமர் மோடியின் தவறான பொருளாதார கொள்கையால் மத்திய அரசு கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சமீபத்தில் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக மத்திய அரசு ரிசர்வ் வங்கியிடம் இருந்து 3.6 லட்சம் கோடி ரூபாய் கேட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இதுதொடர்பாக மத்திய அரசின் நிதி விவகார செயலாளர் சுபாஷ் சந்திரா கார்க் இன்று விளக்கம் அளித்துள்ளார்.
'மத்திய அரசின் பொருளாதார கணிப்புகள் சரியான பாதையில் சென்று கொண்டுள்ளது. ஆனால், ஊடகங்களின் வாயிலாக சில தவறான தகவல்களும், கணிப்புகளும் வெளியிடப்படுகின்றன.
கடந்த 2013-14 நிதியாண்டில் 5.1 சதவீதமாக இருந்த நிதி பற்றாக்குறை 2014-15-க்கு பின்னர் படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் வெளிச்சந்தையில் இருந்து வாங்கும் கடன்களில் 70 ஆயிரம் கோடி ரூபாய் குறைந்துள்ளது. 2018-19 நிதியாண்டின் முதல் காலாண்டுக்குள் நிதி பற்றாக்குறை 3.3 சதவீதமாக குறையும்.
ரிசர்வ் வங்கிக்கான சரியான பொருளாதார மூலதனக் கொள்கையை வகுப்பது தொடர்பாகதான் இப்போது ரிசர்வ் வங்கியுடன் நாங்கள் ஆலோசனை நடத்தி வருகிறோம்’ என தனது டுவிட்டர் பக்கத்தில் கார்க் குறிப்பிட்டுள்ளார். #RBI #DEASecretary
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X