என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நிச்சயதார்த்த விழா"
- மாப்பிள்ளை வீட்டார் தரப்பில் ஆத்திரமடைந்து சாம்பாரை பெண் வீட்டார் மீது ஊற்றியதாக கூறப்படுகிறது.
- மண்டப வாசலில் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தெற்கு ரத வீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருமண நிச்சயதார்த்த விழாவில் மணமகன் வீட்டார் மற்றும் மணப்பெண் வீட்டார் இருவரும் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நிச்சயதார்த்த விழாவிற்கு வந்தவர்களுக்கு நடந்த விருந்தில் பாயாசம் பரிமாறியுள்ளனர். அப்பொழுது பாயாசம் சரியில்லை எனக் கூறி பெண் வீட்டார் தட்டி கேட்டு, தகாத வார்த்தையால் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் மாப்பிள்ளை வீட்டார் தரப்பில் ஆத்திரமடைந்து சாம்பாரை பெண் வீட்டார் மீது ஊற்றியதாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டு, ஒருவரையொருவர் தாக்கியதாக தெரிகிறது. மண்டப வாசலில் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
மோதல் தொடர்பாக தகவல் அறிந்த சீர்காழி போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று இரு தரப்பையும் சமாதானம் செய்து இரு தரப்பையும் அனுப்பி வைத்தனர்.
- பண்ருட்டிஅருகே நிச்சயதார்த்த விழாவில் உணவு சாப்பிட்ட 59 பேருக்கு வாந்தி- மயக்கம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- தகவல் அறிந்த அதிகாரதிகள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து, நலம் விசாரித்தனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டிஅருகேஉள்ள மேலிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் கமலக்கண்ணன். அவரது மகள் கமலாவதி(வயது28). இவருக்கும் விழுப்புரம் மாவட்டம்பேரங்கியூர் கிராமத்தைச் சேர்ந்தவாலிபர் ஒருவருக்கும் நிச்சயதார்த்த விழா பேரங்கியூரில் நடைபெற்றது. இதில் மேலிருப்பு,பேரங்கியூர் மற்றும் சுற்று வட்டாரகிராமங்களை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியை யொட்டி விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு,அங்குஉணவு பரிமாறப்பட்டது. இதை சாப்பிட்டு விட்டு உறவினர்கள் அவரவர் வீடுகளுக்கு சென்று விட்டனர்.இந்த நிலையில் நிகழ்ச்சியில் உணவு சாப்பிட்டு விட்டு வந்த பலருக்கு வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட 59 பேர் பண்ருட்டி, முண்டியம்பாக்கம் அரசுஆஸ்பத்திரியில்அனுமதிக்கப்பட்டனர். பண்ருட்டி, கடலூரில்உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் இருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா தாமரை பாண்டியன் முத்தாண்டிக்குப்பம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜாராமன் மற்றும் போலீசார், கடலூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த பகுதிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.தகவல் அறிந்த அதிகாரதிகள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து, நலம் விசாரித்தனர். நிகழ்ச்சியில் உணவு சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்