search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாளை மறுநாள்"

    • தீரன் சின்னமலை நினைவு நாளை முன்னிட்டு நாளை மறுநாள் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.
    • இந்த உள்ளூர் விடுமுறை வங்கிகளுக்கு பொருந்தாது.

    ஈரோடு:

    சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாளை முன்னிட்டு நாளை மறுநாள் (வியாழக்கிழமை) ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.

    இந்த உள்ளூர் விடுமுறை வங்கிகளுக்கு பொருந்தாது. மேலும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு, மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும்.

    சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாள் அரசு வேலை நாளாக உள்ளதால் இவ்விடு முறையை ஈடு செய்யும் பொருட்டு ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வரும் 12-ந் தேதி (சனிக்கிழமை) பணிநாளாக அறிவித்து ஆணையிடப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

    • மின் பாதைக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றப்படுகிறது.
    • மின் கம்பங்கள் மாற்றும் பணிகள் நடைபெற உள்ளது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மின் விநியோக செயற்பொறியாளர் ஜவகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கன்னியாகுமரி மற்றும் கேப் கன்னியாகுமரி உபமின் நிலையத்தில் நாளை மறுநாள் (24-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதனால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் கன்னியாகுமரி, கோவளம், ராஜாவூர், மைலாடி, வழுக்கம்பாறை, கீழ மணக்குடி, அழகப்பபுரம், சுசீந்திரம், சின்னமுட்டம், கொட்டாரம், சாமிதோப்பு, அஞ்சுகிராமம், கோழிக்கோட்டுபொத்தை, வாரியூர், அகஸ்தீஸ்வரம், மருங்கூர், தேரூர், தென்தாமரைகுளம், ஊட்டுவாள்மடம், ஆரோக்கியபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அன்றைய தினம் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    இந்த நேரத்தில் மின் பாதைக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றப்படுகிறது. மேலும் மின் கம்பங்கள் மாற்றும் பணிகள் நடைபெற உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • 7-ந் தேதி கோணத்தில் மின் நிறுத்தம்
    • மீனாட்சிபுரம் விநியோக உதவி செயற்பொறியாளர் தகவல்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் வல்லன் குமார விளை துணை மின் நிலையத்தில் இருந்து மின்னூட்டம் பெறும் பகுதிகளில் அவசர பரா மரிப்பு பணிகள் 6-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடை பெற உள்ளது.

    இதன் காரணமாக அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஆயுதப்படை முகாம் சாலை, இருளப்பபுரம், பட்டகசாலியன் விளை, பார்க்ரோடு மூவேந்தர் நகர், பொன்னப்ப நாடார் காலனி, ஹோலிகிராஸ் நகர், தாமஸ் நகர், ஜோஸ் காலனி, புன்னை நகர் பகுதி களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    மறவன் குடியிருப்பு, தொல்லவிளை, குருசடி, கோணம் தொழிற் பேட்டை, வடக்கு கோணம், கலைநகர் ஆகிய பகுதிகளில் 7-ந்தேதி அவசர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே மேற்கண்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    மேற்கண்ட தகவலை மீனாட்சிபுரம் விநியோக உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    ×