search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புன்னை நகர் பகுதியில் நாளை மறுநாள் மின்தடை
    X

    கோப்பு படம் 

    புன்னை நகர் பகுதியில் நாளை மறுநாள் மின்தடை

    • 7-ந் தேதி கோணத்தில் மின் நிறுத்தம்
    • மீனாட்சிபுரம் விநியோக உதவி செயற்பொறியாளர் தகவல்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் வல்லன் குமார விளை துணை மின் நிலையத்தில் இருந்து மின்னூட்டம் பெறும் பகுதிகளில் அவசர பரா மரிப்பு பணிகள் 6-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடை பெற உள்ளது.

    இதன் காரணமாக அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஆயுதப்படை முகாம் சாலை, இருளப்பபுரம், பட்டகசாலியன் விளை, பார்க்ரோடு மூவேந்தர் நகர், பொன்னப்ப நாடார் காலனி, ஹோலிகிராஸ் நகர், தாமஸ் நகர், ஜோஸ் காலனி, புன்னை நகர் பகுதி களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    மறவன் குடியிருப்பு, தொல்லவிளை, குருசடி, கோணம் தொழிற் பேட்டை, வடக்கு கோணம், கலைநகர் ஆகிய பகுதிகளில் 7-ந்தேதி அவசர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே மேற்கண்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

    மேற்கண்ட தகவலை மீனாட்சிபுரம் விநியோக உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×