search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரி, சுசீந்திரம் பகுதிகளில் நாளை மறுநாள் மின்தடை
    X

    கோப்பு படம் 

    கன்னியாகுமரி, சுசீந்திரம் பகுதிகளில் நாளை மறுநாள் மின்தடை

    • மின் பாதைக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றப்படுகிறது.
    • மின் கம்பங்கள் மாற்றும் பணிகள் நடைபெற உள்ளது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மின் விநியோக செயற்பொறியாளர் ஜவகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கன்னியாகுமரி மற்றும் கேப் கன்னியாகுமரி உபமின் நிலையத்தில் நாளை மறுநாள் (24-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதனால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் கன்னியாகுமரி, கோவளம், ராஜாவூர், மைலாடி, வழுக்கம்பாறை, கீழ மணக்குடி, அழகப்பபுரம், சுசீந்திரம், சின்னமுட்டம், கொட்டாரம், சாமிதோப்பு, அஞ்சுகிராமம், கோழிக்கோட்டுபொத்தை, வாரியூர், அகஸ்தீஸ்வரம், மருங்கூர், தேரூர், தென்தாமரைகுளம், ஊட்டுவாள்மடம், ஆரோக்கியபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அன்றைய தினம் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    இந்த நேரத்தில் மின் பாதைக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றப்படுகிறது. மேலும் மின் கம்பங்கள் மாற்றும் பணிகள் நடைபெற உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×