search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நன்னிலம்"

    • மாதாந்திர பராமரிப்பு பணி நாளை நடக்கிறது.
    • புத்தகரம், வவ்வாலடி, பாக்கம் கோட்டூர், ஆகிய ஊர்களுக்கும் மின்சாரம் இருக்காது.

    திருவாரூர்:

    திருவாரூர் உதவி செயற்பொறியாளர் இயக்குதலும் பராமரித்தலும் பிரபா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நன்னிலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை(சனிக்கிழமை) நடக்கிறது.

    இதையொட்டி இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான நன்னிலம், நல்ல மாங்குடி, வடகுடி, கம்மங்குடி, குலக்குடி, ஆலங்குடி, முடிகொண்டான், திருக்கண்டீஸ்வரம், சோத்தக்குடி, தூத்துக்குடி, சன்னாநல்லூர், பனங்குடி, ராசாகருப்பூர், மூலமங்கலம், ஆண்டிப்பந்தல், குவலைக்கால், விசலூர், மூங்கில்குடி, காக்கா கோட்டூர், ஆணைகுப்பம், மாப்பிள்ளைக்குப்பம், சலிப்பேரி, தட்டாத்திமூளை, கீழ்குடி, சிகார்பாளையம், நாடாக்குடி, வீதி விடங்கன், பூங்குளம், புளிச்சக்காடி, ஏனங்குடி, புத்தகரம், வவ்வாலடி, ஆதலையூர், பாக்கம் கோட்டூர், ஆகிய ஊர்களுக்கும் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பயிற்சியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன் தொடங்கி வைத்து பயிற்சியின் நோக்கம் குறித்து எடுத்துரைத்தார்.

    நன்னிலம்:

    நன்னிலம் வட்டாரத்தில் 1 முதல் 3-ம் வகுப்பு வரை கற்பிக்கும் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் ஐந்து நாள் பயிற்சி தொடங்கியது. பயிற்சியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன் தொடங்கி வைத்து பயிற்சியின் நோக்கம் குறித்து எடுத்துரைத்தார்.

    அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செந்தமிழ்ச்செல்வன், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மங்கையர்கரசி, வட்டார கல்வி அலுவலர்கள் மணி, முருக பாஸ்கர் கலந்து கொண்டு பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தனர்.

    129 ஆசிரியர்கள் பயிற்சியில் பங்கேற்றனர்வட்டார வளமைய மேற்பார்வை யாளர் நடேஷ் துரை வரவேற்றுப் பேசினார். முடிவில் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் புஷ்பா நன்றி கூறினார்.

    • நன்னிலம் அருகே கல்லூரி மாணவி மாயமானார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான பெண்ணை தேடி வருகின்றனர்.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அடுத்துள்ள கோட்டூர், கேணிக்கரையை சேர்ந்தவர் 19 வயது பெண்.

    இவர் தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார். சம்பவத்தன்று இவரது பெற்றோர் கோவிலுக்கு சென்றனர். வீட்டில் மாணவி மட்டும் இருந்தார்.

    ஆனால் கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பிய பெற்றோர் அங்கு மகளை காணாதது கண்டு அதிர்ச்சியடைந்தனர். பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து பேரளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான பெண்ணை தேடி வருகின்றனர்.

    • மருத்துவமனையில், சிறப்பாக பணியாற்ற கூடிய பல இளம் மருத்துவர்கள், பணியாற்றினாலும் அவர்கள் தங்குவதற்கு போதுமான குடியிருப்பு வசதிகள் இல்லாமல், சிரமம் அடைந்து வருகிறார்கள்.
    • நன்னிலத்தில் மருத்துவ குடியிருப்பை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகாவில், தலைமை இடத்தில் அமைந்துள்ள, அரசு மருத்துவமனை, தாலுக்கா தலைமை மருத்துவமனை ஆகும். இம்மருத்துவமனையில், முதுகலை மருத்துவர்கள், சிறப்பு மருத்துவர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள், குழந்தை மருத்துவர்கள், சித்த மருத்துவர், பல் மருத்துவர், உள்ளிட்ட மருத்துவர்கள் பணியாற்றி வருகிறார்கள். இங்கு அறுவை சிகிச்சை கூடம், எக்ஸ்ரே கருவி, பரிசோதனை நிலையங்கள் அமைந்துள்ளன.

    இம் மருத்துவமனைக்கு சொந்தமான, மருத்துவ குடியிருப்பு ஒன்று, மருத்துவமனைக்கு எதிரே உள்ள, மடவிளாகம் தெருவில் அமைந்துள்ளது. இந்த மருத்துவ குடியிருப்பில், மகப்பேறு மருத்துவ நிபுணர்கள், குடியிருப்பில் தங்கி, இம்மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ளார்கள். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு, இருந்த ஒரு பெண் மருத்துவர், பணி மாறுதலுக்கு சென்றபின்பு, மருத்துவமனைக்கு வந்த மருத்துவர்கள் யாரும், இந்த குடியிருப்பில் தங்காமல், குடியிருப்பு பயன்பாடு இல்லாமல், மூடி கிடந்த நிலையில், தற்போது இந்த குடியிருப்பு, முற்றிலுமாக சிதலமடைந்து, சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.

    மருத்துவமனையில், சிறப்பாக பணியாற்ற கூடிய பல இளம் மருத்துவர்கள், பணியாற்றினாலும் அவர்கள் தங்குவதற்கு போதுமான குடியிருப்பு வசதிகள் இல்லாமல், சிரமம் அடைந்து வருகிறார்கள். இந்த குடியிருப்பை புதுப்பித்து மருத்துவர்கள் தங்கும் வகையில், ஏற்பாடு செய்து தரப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×