search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்
    X

    ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்

    பயிற்சியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன் தொடங்கி வைத்து பயிற்சியின் நோக்கம் குறித்து எடுத்துரைத்தார்.

    நன்னிலம்:

    நன்னிலம் வட்டாரத்தில் 1 முதல் 3-ம் வகுப்பு வரை கற்பிக்கும் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் ஐந்து நாள் பயிற்சி தொடங்கியது. பயிற்சியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன் தொடங்கி வைத்து பயிற்சியின் நோக்கம் குறித்து எடுத்துரைத்தார்.

    அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செந்தமிழ்ச்செல்வன், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மங்கையர்கரசி, வட்டார கல்வி அலுவலர்கள் மணி, முருக பாஸ்கர் கலந்து கொண்டு பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தனர்.

    129 ஆசிரியர்கள் பயிற்சியில் பங்கேற்றனர்வட்டார வளமைய மேற்பார்வை யாளர் நடேஷ் துரை வரவேற்றுப் பேசினார். முடிவில் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் புஷ்பா நன்றி கூறினார்.

    Next Story
    ×