search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தோடர் இன மக்கள்"

    • கவர்னர் ஆர்.என்.ரவி வருகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    • தனது 4 நாள் சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு 18-ந் தேதி சென்னை திரும்புகிறார்.

    ஊட்டி:

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 4 நாள் சுற்றுப்பயணமாக நீலகிரி மாவட்ட த்திற்கு இன்று வருகிறார்.

    இதற்காக அவர் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு மதியம் 2.30 மணிக்கு கோவை விமான நிலையம் வருகிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் கோத்தகிரி சாலை வழியாக ஊட்டிக்கு செல்கிறார்.

    அங்கு ஊட்டி தாவரவி யல் பூங்கா பகுதியில் உள்ள ராஜ்பவனில் தங்கி ஓய்வெ டுக்கிறார். அதனை தொட ர்ந்து நாளை (16-ந் தேதி) ஊட்டி அடுத்த முத்தநாடு மந்து பகுதிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி செல்கிறார்.

    அப்போது அங்கு வசி த்து வரும் தோடர் இன மக்களை சந்தித்து, அவர்களுடன் சிறிது நேரம் கலந்து ரையாடுகிறார்.

    தொடர்ந்து நாளை மறுநாள் (17-ந் தேதி) ஊட்டியில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கவர்னர் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மாலை ஊட்டிக்கு வருகை தரும் கவர்னர் ஆர்.என்.ரவி வருகிற 18-ந் தேதி வரை ஊட்டியில் தங்கி இருக்கிறார்.

    தனது 4 நாள் சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு 18-ந் தேதி சென்னை திரும்புகிறார். அன்று காலை ஊட்டியில் இருந்து கார் மூலமாக புறப்படும் அவர், அங்கிருந்து கோவை விமான நிலையம் வந்து, விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார்.

    கவர்னர் ஆர்.என்.ரவி வருகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    ஊட்டி ராஜ்பவன், கவர்னர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    மாவட்டம் முழுவதும் 400 போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக கவர்னர் மாளிகை உள்ள தாவரவியல் பூங்கா பகுதியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
    • விளையாட்டு போட்டிகளும் நடைபெற்றது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் ஆண்டு முழுவதும் அனைத்து பண்டிகைகளும் கொண்டாடப்படுவது வழக்கமான ஒன்றாகும்.

    இதன் ஒரு கட்டமாக ஊட்டி அருகே உள்ள பகல்கோடு மந்து, சூட்டிங் மட்டம் சுற்றுலா தளத்தில், நீலகிரியின் ஆதி பழங்குடியினர்களான தோடர் இன மக்கள் தமிழர்களின் பாரம்பரிய பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.

    அங்கு அவர்கள் அடுப்பு வைத்து புதிய பானையில் பொங்கல் வைத்து சூரிய பகவானை வழிபட்டனர்.இதனை தொடர்ந்து தோடர் இன மக்களின் பாரம்பரிய படி பூஜைகள் செய்து கடவுளுக்கு பொங்கல் படைத்து கொண்டாடினர்.

    இதனையடுத்து சுற்றுலா தலத்திற்கு வந்திருந்த சுற்றுலா பயணிகளுக்கு பொங்கல் வழங்கி மகிழ்ந்தனர். மேலும் தங்களுடைய பாரம்பரிய கலாசார உடையுடன் நடனமாடியது அங்கு வந்திருந்த சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது.

    ஊட்டியில் இன்று காவல்துறை சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

    ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள ஆயுதப்படை பிரிவு வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    அவர் விழா மைதானத்திற்கு வரும் பொழுது அனைத்து காவலர்களுடன் இணைந்து நடனம் ஆடியபடியே மேடைக்கு வந்தார். இது அங்கிருந்த அனைவரையும் உற்சாகப்படுத்தியது.

    இந்த விழாவில் காவல்துறையினர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டனர். தொடர்ந்து காவல்துறை குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகளும் நடைபெற்றது.

    ×