search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழில்நுட்ப பயிற்சி"

    • நெல் விதைகள், உயிர் உரங்கள் உள்ளிட்டவற்றின் மானிய விவரம் குறித்து கூறப்பட்டது.
    • நெல் பயிரில் விதை நேர்த்தி செய்யும் தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கம் அளிக்கபட்டது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டார வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை அட்மா திட்டத்தின் கீழ் கிராம அளவில் வேளாண் முன்னேற்ற குழுக்களுக்கு பயிற்சி மூலங்குடி கிராமத்தில் நடைபெற்றது.

    பயிற்சிக்கு மூலங்குடி ஊராட்சி மன்ற தலைவர் வேல் தலைமை தாங்கினார். வட்டார வேளாண்மை அலுவலர் செல்வி அனுஷா முன்னிலை வகித்தார்.

    நிகழச்சியில் வட்டார தொழில் நுட்ப மேலாளர் ராஜா கலந்து கொண்டு, நெல் பயிரில் விதை நேர்த்தி செய்யும் தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.

    தொடர்ந்து பேசிய விதைச்சான்று அலுவலர் சதீஷ் விதை பண்ணை அமைக்கும் வழிமுறைகள், தரமான விதை உற்பத்தி பற்றி விளக்கினார்.

    நிகழ்ச்சியில் திட்ட ஒருங்கிணைப்பு அலுவலர் மணிகண்டன், விதைகள், உயிர் உரங்கள், நுண்ணூட்ட கலவைகள் உள்ளிட்டவற்றின் மானிய விவரம் குறித்து விளக்கம் அளித்தார்.

    முடிவில் விவசாயி குமரேசன் நன்றி கூறினார் தெரிவித்தார்.

    • வேளாண் அலுவலர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது.
    • முடிவில் மதுரை விற்பனைக் குழு மேலாளர் கோகிலா நன்றி கூறினார்.

    மதுரை

    வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் மதுரை விற்பனை குழுவின் சார்பில் இ-நாம் திட்ட வலைதளத்தில் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் கீழ் பரிவர்த்தனைகள் மற்றும் பண்ணை வர்த்தகம் மேற்கொள்வது குறித்து வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை விரிவாக்க அலுவலர்க ளுக்கான தொழில்நுட்ப பயிற்சி மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் சங்கீதா தலைமை வகித்தார். விற்பனைக்குழு செயலாளர் மெர்சி ஜெயராணி வரவேற்றார்.

    கூட்டத்தில் இ-நாம் திட்டம் குறித்தும் இத் திட்டத்தின் கீழ் பரிவர்த்தனைகள் மேற்கொள்வது குறித்தும், விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் அடையும் பலன்கள் குறித்தும் செயல்முறை விளக்கங்கள் வழங்கப்பட்டது.

    இ-நாம் திட்டத்தின் கீழ் பரிவர்த்தனைகளை அதிகரித்திட வேளாண்மை, தோட்டக்கலைத்துறை மற்றும் விற்பனைத்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டிய அவசியம் குறித்து அலுவலர்களுக்கு கலெக்டர் சங்கீதா ஆலோசனை வழங்கினார்.

    இதில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். முடிவில் மதுரை விற்பனைக் குழு மேலாளர் கோகிலா நன்றி கூறினார்.

    • அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயிற்சி மாவட்ட அளவில் நடைபெற்றது.
    • சொட்டு நீர் பாசனத்தில் டிஸ்க், வடிகட்டி, மெயின், சப் மெயின் பைப்புகள், பக்கவாட்டு குழாய்கள், சுத்தம் செய்யும் முறைகள் மற்றும் அமில சிகிச்சை பற்றியும் நீர் வழி உரபாசனம் குறித்தும் விளக்கம் அளித்தார்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ராமநாய்க்கன்பாளையம் கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயிற்சி மாவட்ட அளவில் நடைபெற்றது.

    அட்மா திட்ட தலைவர் டாக்டர் செழியன் தலைமை வகித்தார்.வேளாண்மை உதவி இயக்குனர் ஜானகி (பொறுப்பு) முன்னிலை வகித்தார். மேலும் வேளாண்மை அலுவலர் கவுதமன் வேளாண்மை - உழவர் நலத்துறை மூலம் செயல்படும் திட்டங்கள் மானியங்கள் குறித்து விளக்கமளித்தார்.

    சொட்டு நீர் பாசன நிறுவனத்தை சேர்ந்த சுந்தரேசன் சொட்டு நீர் பாசனத்தில் டிஸ்க், . வடிகட்டி, மெயின், சப் மெயின் பைப்புகள், பக்கவாட்டு குழாய்கள், சுத்தம் செய்யும் முறைகள் மற்றும் அமில சிகிச்சை பற்றியும் நீர் வழி உரபாசனம் குறித்தும் விளக்கம் அளித்தார்.

    வட்டார தொழில்நுட்ப மேலாளா் சுமித்ரா, உதவி தொழில்நுட்ப மேலாளர் தமிழ்ச்செல்வி, திலகவதி மற்றும் பாலு, செல்வம், முன்னோடி விவசாயி ஆகியோர் கலந்து கொண்டனர். பயிற்சியின் முடிவில் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை, உணவு வழங்கப்பட்டது.

    ×