search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேவே கவுடா"

    • தேவ கவுடாவிடம் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நலம் விசாரித்தார்.
    • இந்தச் சந்திப்பின்போது குமாரசாமி உடன் இருந்தார்.

    பெங்களூரு:

    முன்னாள் பிரதமர் தேவ கவுடா உடல்நலக் குறைவால் பெங்களூரு பத்மநாப நகரில் உள்ள தனது வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். அவரை முதல் மந்திரி பசவராஜ் பொம்மை, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, முன்னாள் முதல் மந்திரி எடியூரப்பா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

    இந்நிலையில், தேவ கவுடாவை அவரது இல்லத்தில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். மேலும் தேவ கவுடா விரைவாக குணம் அடைந்து வழக்கமான பணிகளில் ஈடுபட விரும்புவதாக கூறி வாழ்த்து தெரிவித்தார். இந்தச் சந்திப்பின்போது குமாரசாமி உடன் இருந்தார்.


    காவேரி மருத்துவமனைக்கு இன்று வருகை தந்த முன்னாள் பிரதமர் தேவே கவுடா, கருணாநிதியின் உடல்நலம் குறித்து ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் கேட்டறிந்தார். #KarunanidhiHealth #Karunanidhi
    சென்னை:

    தமிழக முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.கருணாநிதி வயோதிகம் சார்ந்த உடல்நலக்குறைவு காரணமாக வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார். பின்னர் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கடந்த மாதம் 27-ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

    மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் அவர் உடல்நிலை தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், முன்னாள் பிரதமர் தேவே கவுடா காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்து கருணாநிதியின் உடல்நிலை தொடர்பாக ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் கேட்டறிந்தார். 

    இதனை அடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கருணாநிதி நூறாண்டுகள் வரை நலமுடன் வாழ்வார்” என கூறினார்.
    ×