search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசிய பங்கு சந்தை"

    • ஜனவரி மாதம் சென்செக்ஸ் முதல்முறையாக 73 ஆயிரம் புள்ளிகளை தொட்டது
    • நேற்று இந்திய பங்கு சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது

    இன்று, இந்திய பங்கு சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது.

    மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், வர்த்தகத்தின் இறுதி நேர நிலவரப்படி, 1000 புள்ளிகள் சரிந்து 70,419 எனும் அளவில் வர்த்தகமாகியது.

    தேசிய பங்கு சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி, வர்த்தகத்தின் இறுதி நேர நிலவரப்படி 341 புள்ளிகள் சரிந்து 21,255 எனும் அளவில் வர்த்தகமாகியது.

    2024 ஜனவரி மாதம், சென்செக்ஸ், அதன் வரலாற்றில் முதல்முறையாக 73,000 புள்ளிகளை தொட்டது குறிப்பிடத்தக்கது.

    நேற்று (ஜனவரி 22) திங்கட்கிழமையாக இருந்தும், உத்தர பிரதேச மாநில அயோத்தியா நகரில், இந்துக்களின் கடவுளான பகவான் ஸ்ரீஇராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.

    இதையொட்டி, நேற்று பங்கு சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

    இம்மாதத்தின் முதல் சில நாட்களில் புதிய உச்சங்களை தொட்ட பங்கு சந்தை அதே நிலையில் நீடிக்க முடியாமல் தள்ளாடியது.

    ஜனவரி 23 செவ்வாய்கிழமையான இன்று பெரும் சரிவை சந்தித்தது.

    இம்மாதம், இந்திய பங்கு சந்தையில் முதலீடு செய்திருந்த எஃப்ஐஐ (FII) எனும் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் பெருமளவு முதலீட்டை திரும்ப பெற்று கொண்டதன் காரணமாக இந்த சரிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    பங்குகளின் விலை, சந்தை நிலவரத்தை பொறுத்து மாறுபடும் என்பதால் தகுந்த பங்கு சந்தை வல்லுனர்களின் ஆலோசனைப்படி பங்குகளில் முதலீடு செய்து வருவது முதலீட்டாளர்களுக்கு பயன் தரும் என பொருளாதார நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

    • நிஃப்டி 22,115 எனும் புதிய உயரத்தை எட்டியது
    • சென்செக்ஸ் 73,402 எனும் புதிய உயரத்தை எட்டியது

    ஜனவரி 15, இந்திய பங்கு சந்தை முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சிகரமான நாளாக அமைந்தது.

    பங்கு சந்தையில் பதிவு பெற்ற முக்கிய நிறுவனங்களான ஹெச்டிஎஃப்சி வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இன்ஃபோசிஸ் ஆகியவற்றின் பங்குகள் உயர்வை தொட்டன.

    நிறுவனங்களின் நம்பிக்கையூட்டும் காலாண்டு வருவாய், அமெரிக்க ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பு எதிர்பார்ப்பு, நேர்மறையான உலக பொருளாதார குறியீடுகள், மக்களவை தேர்தலுக்கு பிறகு நிலையான ஆட்சி அமைய கூடிய சாத்தியக்கூறு உள்ளிட்டவை பங்கு சந்தையின் ஏற்றத்திற்கு காரணமாக சொல்லப்படுகிறது.

    தேசிய பங்கு சந்தையின் (NSE) குறியீட்டு எண்ணான நிஃப்டி (Nifty), 22,053 என தொடங்கி முதல் முறையாக 22,115 எனும் புதிய உயரத்தை எட்டி, 22,097 எனும் அளவில் நிறைவடைந்தது.

    மும்பை பங்கு சந்தையின் (BSE) குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் (Sensex), 73,049 என தொடங்கி முதல் முறையாக 73,402 எனும் புதிய உயரத்தை எட்டி 73,327 எனும் அளவில் நிறைவடைந்தது.

    இன்றைய வர்த்தகத்தில் முதலீட்டாளர்களுக்கு சுமார் 3 லட்சம் கோடி லாபம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சந்தையில் முதலீடு சுமார் ரூ.82 லட்சம் கோடியாக அதிகரித்தது
    • 5 பங்குகள் முதலீட்டாளர்களுக்கு லாபம் தருவதில் முன்னிலை வகித்தன

    கடந்த 2023ல் இந்திய பங்கு சந்தை சுமார் 20 சதவீதம் முதலீட்டாளர்களுக்கு லாபத்தை தந்தது.

    சந்தை மூலதன மதிப்பின்படி அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் ஹாங்காங் நாடுகளின் பங்கு சந்தைக்கு அடுத்த இடத்தில் இந்தியா உருவெடுத்தது.

    மியூச்சுவல் ஃபண்டுகளின் பெருக்கம், அயல்நாட்டு முதலீடு அதிகரிப்பு, பொருளாதார நிலையில் வளர்ச்சி, கார்ப்பரேட் நிறுவனங்களின் வருவாய் அதிகரிப்பு உள்ளிட்டவை இதற்கு காரணங்களாக சொல்லப்படுகின்றன.

    சந்தை முதலீடு சுமார் ரூ.82 லட்சம் கோடி எனும் அளவில் அதிகரித்தது.

    2023ல் சென்செக்ஸ் குறியீட்டில் 5 பங்குகள் மிக அதிக லாபம் ஈட்டி தந்தன.

    பெருமளவு உயர்வை கண்ட பங்குகள்:

    1. டாடா மோட்டார்ஸ் (Tata Motors) - 102 சதவீதம்

    2. என்டிபிசி லிமிடெட் (NTPC) - 96 சதவீதம்

    3. லார்சன் அண்ட் டூப்ரோ லிமிடெட் (L&T) - 69 சதவீதம்

    4. பவர் க்ரிட் கார்ப்பரேஷன் (Power Grid) - 55 சதவீதம்

    5. அல்ட்ரா டெக் சிமென்ட் (Ultra Tech Cement) - 51 சதவீதம்

    பங்குகளின் விலை, சந்தை நிலவரத்தை பொறுத்து மாறுபடும் என்பதால் தகுந்த பங்கு சந்தை வல்லுனர்களின் ஆலோசனைப்படி பங்குகளில் முதலீடு செய்து வருவது முதலீட்டாளர்களுக்கு பயன் தரும் என பொருளாதார நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

    • அந்நிய முதலீட்டாளர்கள் பெறுமளவில் இந்திய பங்குகளில் முதலீடு செய்கின்றனர்
    • முதல் முறையாக மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண் 70 ஆயிரத்தை தாண்டியது

    கோவிட் பெருந்தொற்று பரவலை தடுக்க கொண்டு வரப்பட்ட ஊரடங்கு காலகட்டத்தில் பலருக்கு தொழில் முடக்கமும் வேலை இழக்கும் நிலையும் ஏற்பட்டது. இதனால் வருவாயை அதிகரிக்க பலர் இந்திய பங்கு சந்தைகளில் பணத்தை முதலீடு செய்ய தொடங்கினர்.

    2020 வரை சீரான அளவில் இருந்து வந்த முதலீட்டாளர் எண்ணிக்கை, அதற்கு பிறகு அதிகரிக்க தொடங்கியது. இதனால் பங்கு சந்தையில் பல முன்னணி பங்குகள் அதிக விலைக்கு வர்த்தகம் ஆக தொடங்கி தற்போது வரை முதலீடுகள் அதிகரித்து வருகின்றன.

    உலகளாவிய பொருளாதார மந்த நிலை, சீன பொருளாதார சரிவு, அமெரிக்க-ரஷிய உறவில் சீர்கேடு, ரஷிய-உக்ரைன் போர், இஸ்ரேல்-ஹமாஸ் போர் என பல காரணிகள் இருந்தாலும் இந்திய பங்கு சந்தையில் முதலீடு செய்ய அந்நிய முதலீட்டாளர்களும், இந்திய முதலீட்டாளர்களும் தொடர்ந்து விருப்பம் காட்டி வருகிறார்கள்.

    கடந்த மாதம், 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் மூன்றில் மத்தியில் ஆளும் பா.ஜ.க.வும், தெலுங்கானாவில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியும் வென்றது.

    இப்பின்னணியில், வார முதல் நாளான இன்று இந்திய பங்கு சந்தையில், வர்த்தக துவக்கத்திலேயே மும்பை பங்கு சந்தையின் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் (Sensex) 69,825 எனும் அளவில் வர்த்தகமானது.

    சிறிது நேரத்தில் முதல் முறையாக 70,048 எனும் புதிய உச்சத்தை தொட்டது.

    கடந்த வாரம் மத்திய ரிசர்வ் வங்கி அடுத்த காலாண்டிற்கான இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தி குறித்த தங்கள் கணிப்பை அதிகரித்து அறிக்கை வெளியிட்டது. இத்துடன் உலகளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதும், இந்திய பொருளாதாரத்தின் வலுவான உள்கட்டமைப்பும், இந்திய தொழில் நிறுவனங்களில் நிகர லாபம் அதிகரித்திருப்பதும் பங்கு சந்தையின் உயர்வுக்கு காரணங்களாக கூறப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இஸ்ரேல் பாலஸ்தீன போரில் இதுவரை 500 பேர் உயிரிழந்துள்ளனர்
    • இரு தரப்பிற்கும் பல உலக நாடுகள் ஆதரவு தெரிவிக்கின்றன

    கடந்த சனிக்கிழமை காலை, பாலஸ்தீனத்தின் ஹமாஸ் பயங்கரவாதிகள் அமைப்பு, இஸ்ரேல் மீது 5000க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஒரே நேரத்தில் வீசி, தரை வழியாகவும் மற்றும் நீர் வழியாகவும் பல வழி தாக்குதலை நடத்தியது. இதற்கு பதிலடியாக ஹமாஸ் அமைப்பினர் மீது போர் தொடுத்தள்ளதாக கூறி இஸ்ரேல் பெரும் தாக்குதலை நடத்தி வருகிறது. தற்போது வரை இரு தரப்பிலும் 500க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் நடைபெற்றுள்ளது.

    இந்நிலையில் இந்த போரின் தாக்கம் இந்திய பங்கு சந்தையிலும் இன்று எதிரொலித்தது.

    திங்கட்கிழமை காலை வர்த்தகத்தில் இந்தியாவின் மும்பை பங்கு சந்தையின் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் (Sensex) 500 புள்ளிகள் வரை சரிந்து 65,434 எனும் அளவை எட்டியது. பிறகு சற்று மேலெழுந்து 65,769 அளவை எட்டியுள்ளது.

    தற்போது 65,576 எனும் அளவை தொட்ட நிலையில் வர்த்தகம் நடைபெறுகிறது.

    தேசிய பங்கு சந்தையின் குறியீட்டு எண்ணான நிஃப்டி (Nifty) 142 புள்ளிகள் சரிந்து 19,510 எனும் அளவை எட்டியது. தற்போது 19,529 எனும் அளவை தொட்ட நிலையில் வர்த்தகம் நடைபெறுகிறது.

    இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஜெர்மனி, இந்தியா மற்றும் கனடா உட்பட பல நாடுகள் இருந்து வருகின்ற நிலையில், ஈரான், கத்தார் மற்றும் லெபனான் ஆகிய நாடுகள் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன.

    கோவிட்-19 பெருந்தொற்றின் விளைவாக 2020 மற்றும் 2021 வருடங்களில் சரிந்திருந்த உலக பொருளாதாரம் பிறகு மெல்ல மீண்டு எழ ஆரம்பித்த நிலையில் ரஷிய உக்ரைன் போரினால் மீண்டும் சற்று நலிவடைய ஆரம்பித்தது.

    இந்நிலையில், இஸ்ரேல் பாலஸ்தீன போரில் பல நாடுகளும் பங்கு பெற ஆரம்பித்தால் உலக பொருளாதாரம் மீண்டும் சரிவை நோக்கி செல்லும் அபாயம் உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

    ×