search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேங்கிய மழை நீர்"

    • கலெக்டர் பைக்கில் சென்று பார்வையிட்டார்
    • நிரந்தர தீர்வு காண வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தல்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட புதுப்பேட்டை சாலையில் ரெயில்வே தரைப்பாலம் உள்ளது. இதன் வழியாக நாட்டறம்பள்ளி, புதுப்பேட்டை உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தரைப்பாலத்தின் வழியாகத்தான் திருப்பத்தூர் வந்து செல்ல வேண்டும். திருப்பத்தூர் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக தரைப்பாலத்தில் எப்போது தண்ணீர் தேங்கிக்கொண்டே இருக்கும்.

    இதனால் அவ்வப்போது மோட்டார் பயன்படுத்தி தண்ணீரை வெளியேற்றி வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் திருப்பத்தூர் பகுதியில் பெய்த பலத்த மழையால் ரெயில்வே தாரைப்பாலத்தில் அளவுக்கு அதிகமான தண்ணீர் தேங்கி நின்றது.

    அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளிலும் பள்ளியிலும் மழைநீர் புகுந்தது. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

    அதைத்தொடர்ந்து நேற்று மாலை கலெக்டர் அமர்குஷ்வாஹா அப்பகுதிக்கு சென்று தரைப்பாலத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தரைப்பாலத்தில் தண்ணீர் தடையின்றி செல்லவும், அதற்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக அப்பகுதியில் கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது அந்த இடங்களுக்கு கார் செல்ல முடியவில்லை. இதனால் காரை நிறுத்திவிட்டு, மோட்டார் சைக்கிளை பெற்றுக்கொண்டு கலெக்டர் அதனை ஒட்டியவாறு சென்று அங்கு கால்வாய் ஏற்படுத்தினால் தண்ணீர் தடையின்றி செல்லுமா என ஆய்வு மேற்கொண்டார். மேலும் தண்ணீர் தங்கு தடையின்றி செல்வதற்கு பணிகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    இந்த ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர்முரளி, தாசில்தார் சிவப்பிரகாசம், நகராட்சி ஆணையர் ஜெயராமராஜா உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்

    • ரோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று 2-வது நாளாக மாலை நேரங்களில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து.
    • நள்ளிரவு வரை விட்டுவிட்டு பலத்த மழை பெய்தது. பெருந்துறையில் அதிகபட்சமாக 29 மில்லி மீட்டர் மழை பதிவாகியிருந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று 2-வது நாளாக மாலை நேரங்களில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து. நேற்று காலை வழக்கம் போல் வெயில் வாட்டி வதைத்தாலும் மாலையில் மழை பெய்ய தொடங்கியது. ஈரோடு நகரில் பகுதியில் சுமார் 30 நிமிடம் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    நகரின் முக்கியப் பகுதிகளான பிரப் ரோடு, ஈஸ்வரன் கோயில் வீதி, மணிக்கூண்டு, ஆர்.கே.வி.ரோடு, காளைமாடு சிலை, முனிசிபல் காலனி, வீரப்பன் சத்திரம், குமலன்குட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கியது. மாநகரில் தற்போது பல்வேறு இடங்களில் வளர்ச்சி திட்ட பணிகள் நடந்து வருகிறது.

    இதற்காக குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த குழிகளில் மழை நீர் தேங்கி நின்றது.இதனால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர். ஈரோடு வீரப்பன் சத்திரம், ராஜாஜி வீதியில் பெய்த மழை காரணமாக மழை நீர், கழிவு நீருடன் சேர்ந்து தெருக்களில் தேங்கி நின்றது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். இந்த பகுதியில் உள்ள சாக்கடைகளை தூர் வார வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதேபோல, ஈரோடு சுற்றுவட்டாரப் பகுதிகளான திண்டல், நசியனூர், வாய்க்கால்மேடு, பெருந்துறை, மொடக்குறிச்சி, கவுந்தப்பாடி, பவானி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு வரை விட்டுவிட்டு பலத்த மழை பெய்தது. பெருந்துறையில் அதிகபட்சமாக 29 மில்லி மீட்டர் மழை பதிவாகியிருந்தது.

    தொடர்ந்து இன்று காலையிலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    ஈரோடு –-17, பெருந்துறை – 29, மொடக்குறிச்சி –-20, பவானி –-6, கவுந்தப்பாடி – 3.4, மாவட்டத்தின் மொத்த மழையளவு 75.4 மி.மீ.

    ×