search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவோண விரதம்"

    • திருமாலுக்கு உரிய சிறந்த நட்சத்திரம் திருவோணம்.
    • வியாழக்கிழமை வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது.

    இன்று சந்திரனுக்குரிய திருவோண நாள். திருமாலுக்கு உரிய சிறந்த நட்சத்திரம் திருவோணம். இது வியாழக்கிழமை வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது. சந்திரனும், குருவும் சேர்வது யோகம் என்று கருதப்படுகிறது. இந்த யோக நாளில் விரதம் இருந்தால் சிறப்பான பலன் கிடைக்கும்.

    ஒவ்வொரு திருவோண நட்சத்திரத்திலும் விரதம் இருந்து திருமாலை வழிபடுவது பூர்வ ஜென்ம வினைகளை கூண்டோடு ஒழிக்கும். தமிழகத்தில் பல வைணவத் தலங்கள் திருவோணத்தின் சிறப்பை சொல்லும் தலங்களாக உள்ளன.

    கும்பகோணத்திற்கு அருகே உள்ள ஒப்பிலியப்பன் கோயில் போன்ற சில தலங்கள் திருவோணத்தின் சிறப்பை சொல்லும் தலங்களாகும்.

    இன்று எல்லா பெருமாள் கோவில்களிலும் திருவோண சிறப்பு வழிபாடுகளும் திருமஞ்சனமும் நடைபெறும். இன்று காலை திருவோண விரதத்தை தொடங்க வேண்டும். மாலையில் துளசி மாலையோடு சென்று அருகில் உள்ள பெருமாள் கோவிலில் விளக்கேற்றி தரிசனம் செய்துவிட்டு வீட்டிற்கு வந்து பூஜை அறையில் விளக்கேற்றி சுவாமியை வணங்கி பால் அல்லது பழம் நிவேதனம் செய்து விரதத்தை முடிக்கலாம்.

    திருவோண விரதம் இருப்பதால் சகல ஐஸ்வர்யங்களும் பெருகும். நல்ல புத்திக்கூர்மை ஏற்படும். திருவோண விரதம் இருப்பதால் சந்திர தோஷம் விலகுவதுடன், சந்தோஷமான மணவாழ்வு அமையும்.

    திருவோண விரதம் அன்று சொல்ல வேண்டிய பாசுரம்:

    `நான்ஏதும் உன்மாய மொன்றறியேன்

    நமன்தமர் பற்றி நலிந்திட்டு இந்த

    ஊனேபுகே யென்று மோதும் போது

    அங்கேதும் நான்உன்னை நினைக்க

    மாட்டேன்

    வானேய் வானவர் தங்களீசா!

    மதுரைப் பிறந்த மாமாயனே! என்

    ஆனாய்! நீஎன்னைக் காக்க வேண்டும்

    அரங்கத் தரவணைப் பள்ளியானே!'

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மகா சிவராத்திரியன்று ஐந்து சிறப்புகள் இணைந்து வருவது சிறப்பானது.
    • 300 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் ஜோதிட அதிசயம் என்கிறார்கள்.

    ஜோதிட சாஸ்திரங்களின்படி, இந்த ஆண்டு மகா சிவராத்திரி அன்று சர்வார்த்தி சித்தி யோகம், சிவ யோகம், திருவோண நட்சத்திரம், வெள்ளிக்கிழமை பிரதோஷம், மகா சிவராத்திரி என்ற ஐந்து சிறப்புகள் இணைந்து வருவது சிறப்பானது. இந்த நாளில் மகா சிவராத்திரி வருவது சிறப்பானது. இந்த மகா சிவராத்திரி நாளை தவற விடக்கூடாது. மகா சிவராத்திரி சுக்கிர வார பிரதோஷத்தில் வருவதால் பொருளாதாரச் சிக்கல்கள் தீர்ந்து செல்வ வளம் சேரும். மகா சிவராத்திரியில் விரதமிருந்து கண் விழித்து சிவதியானம் செய்திட எல்லா காரியங்களிலும் வெற்றி உண்டாகும்.

    இந்த ஆண்டு மார்ச் 8-ந் தேதி வெள்ளிக்கிழமை மகா சிவராத்திரி கொண்டாடப்பட உள்ளது. அன்று இரவு 8 மணிக்குத் தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை 4 கால பூஜைகள் அபிஷேகங்கள் நடைபெற உள்ளன. ஐந்து யோகங்கள் ஒன்று கூடும் சிறப்பு நிகழ்வும் ஜோதிட ரீதியாக நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது. இது 300 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் ஜோதிட அதிசயம் என்கிறார்கள்.

    சிவராத்திரி தினத்தன்று நடராஜர் உருவத்தில் சிவபெருமான் நடனம் ஆடியதாகக் கூறுவார்கள். இந்த நடனத் தோற்றம் இறைவனின் தத்துவத்தை உணர்ந்த பக்தன் உணர்ச்சியால் மெய்மறந்திருப்பதைப் பிரதிபலிக்கிறது.

    விழித்திருப்பது, தூங்குவது, ஆழ்ந்த தூக்கம் ஆகியவற்றை கடந்த நிலை வந்தால், மற்ற உணர்ச்சிகள் இந்த நிலையைப் பாதிக்காது. இந்த நிலையில் நித்தியஆனந்தத்தை உணருவதே உன்னதமானது. அதையே நடராஜரின் தோற்றம் பிரதிபலிக்கிறது. உடல் உள்ளம் ஆகியவற்றைச் சார்ந்த உணர்வுகளும், மனத்தின் எண்ணங்களும், புத்தியின் இயக்கமும் கட்டுப்படும் நிலையே பேரானந்தமானது. இதையே நடராஜரின் மெய் மறந்து கூத்தாடும் நிலையை உணர்த்துகிறது.

    நடராஜர் ஒரு காலை இருத்தியும், ஒரு காலை உயர்த்தியும் ஆடுவது, உலகப் பற்றுகளை மிதித்து அடக்கியும், உன்னதமான ஆன்மீக உணர்வுகளை உயர்த்தியும் வாழ்ந்தாலும் பேரானந்தம் தரும் என்பதை உணர்த்துகிறது. எனவே சிவராத்திரி தினத்தன்று மறக்காமல் நடராஜர் சன்னதியிலும் வழிபாடுகள் செய்ய வேண்டும்.

    ×