search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவாரூர் விபத்து"

    • தனியார் பள்ளி வேன் ஒன்று திருவாரூரில் இருந்து பள்ளி மாணவர்களை ஏற்றுவதற்காக அகரத்தநல்லூர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது.
    • திடீரென மோட்டார் சைக்கிளும், பள்ளி வேனும் நேருக்கு நேர் மோதியது. இதில் மாணவர்கள் இருவரும் படுகாயம் அடைந்தனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் அருகே சேங்காலிபுரத்தை சேர்ந்தவர் ஞானசேகரனின் மகன் ஜெகநாதன் (வயது 19). மணக்கால் அய்யம்பேட்டையை சேர்ந்த ஆனந்தன் மகன் (18) இவர்கள் இருவரும் நாகப்பட்டினத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்று வருகின்றனர். ஜெகநாதன் பிஎஸ்சி பயர் அண்ட் சேப்டி 3-ம் ஆண்டும், விக்னேஷ் கம்ப்யூட்டர் சயின்ஸ் 2-ம் ஆண்டும் படித்து வந்தனர்.

    இந்நிலையில் இன்று காலை இருவரும் கல்லூரிக்கு சேங்காலிபுரம் பகுதியில் இருந்து ஒரே மோட்டார்சைக்கிளில் சென்றனர். அப்போது தனியார் பள்ளி வேன் ஒன்று திருவாரூரில் இருந்து பள்ளி மாணவர்களை ஏற்றுவதற்காக அகரத்தநல்லூர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென மோட்டார் சைக்கிளும், பள்ளி வேனும் நேருக்கு நேர் மோதியது. இதில் மாணவர்கள் இருவரும் படுகாயம் அடைந்தனர்.

    உடனே அக்கம் பக்கத்தினர் அவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இருவரும் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

    மேலும் பள்ளி வேனில் இருந்த 2 பள்ளி மாணவர்கள் சிறுகாயத்துடன் உயிர் தப்பினர்.

    இந்த விபத்து தொடர்பாக திருவாரூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • கட்டுமான பணிக்காக நீட்டி விடப்பட்டிருந்த இரும்பு கம்பியில் குமாரின் உடல் சிக்கி, அவரது வயிறு மற்றும் தொடை பகுதியில் பலமாக குத்தியது.
    • மோட்டார் சைக்கிளுடன் பள்ளத்தில் விழுந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அடுத்த பனங்குடி கிராமத்தை சேர்ந்தவர் குமார் (வயது 50). இவர் நன்னிலம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி தேன்மொழி (38). மகள் ஓவியலட்சுமி (17). கல்லூரி முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று குமார் அவரது மனைவி மற்றும் மகளுடன் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக பனங்குடியில் இருந்து திருவாரூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். பின், பொருட்கள் வாங்கிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு திருவாரூர்-மயிலாடுதுறை சாலையில் வந்து கொண்டிருந்தார்.

    அப்போது விசலூர் என்ற இடத்தில் செல்லும்போது, அங்கு நெடுஞ்சாலையில் பாலம் கட்டும் பணிக்காக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் எதிர்பாராதவிதமாக குமார் மோட்டார் சைக்கிளுடன் நிலைதடுமாறி விழுந்தார்.

    இதில் கட்டுமான பணிக்காக நீட்டி விடப்பட்டிருந்த இரும்பு கம்பியில் குமாரின் உடல் சிக்கி, அவரது வயிறு மற்றும் தொடை பகுதியில் பலமாக குத்தியது. இதில் குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    மேலும், அவரது மகளுக்கு இரு கால்களிலும் எலும்பு முறிவும், மனைவி தேன்மொழிக்கு முகம், கை, கால்களில் பலத்த காயங்களுடன் உள்ளே கிடந்துள்ளார்.

    அவ்வழியாக சென்றவர்கள் உடனடியாக அவர்களை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, நன்னிலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும், இந்த பாலம் கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தில் எவ்வித அறிவிப்பு பலகையோ, சாலை தடுப்புகள் வைக்காததும், அப்பகுதியில் மின் விளக்கு வசதிகள் இல்லாததுமே காரணம் எனக்கூறி அப்பகுதி மக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர், போராட்டம் கைவிடப்பட்டது.

    மோட்டார் சைக்கிளுடன் பள்ளத்தில் விழுந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • வேளுக்குடி பகுதியில் வந்தபோது எதிரே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை ஓரத்தில் இருந்த புளியமரத்தின் மீது வேகமாக மோதியது.
    • சந்திரா, கணபதி ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

    திருவாரூர்:

    நாகை மாவட்டம் பெருங்கடம்பனூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சின்னையன் மனைவி சந்திரா (வயது 70).

    இவர் தனது உறவினர்களான கணபதி (42) அவரது மகன் சந்தோஷ் (16), ராமச்சந்திரன், அவரது மனைவி விஜயலட்சுமி உள்பட 7 பேருடன் தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூரில் உள்ள குலதெய்வம் கோவில் திருவிழாவிற்காக சென்றனர்.

    அங்கு திருவிழாவை முடித்து விட்டு மீண்டும் இன்று அங்கிருந்து பெருங்கடம்பனூருக்கு காரில் புறப்பட்டனர். காரை ராமச்சந்திரன் ஓட்டினார்.

    அந்த கார் திருவாரூர் அருகே உள்ள வேளுக்குடி பகுதியில் வந்தபோது எதிரே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை ஓரத்தில் இருந்த புளியமரத்தின் மீது வேகமாக மோதியது. இதில் சந்திரா, கணபதி ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

    இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த ராமச்சந்திரன், அவரது மனைவி விஜயலட்சுமி, அவர்களது குழந்தை ஜெய்ஹரி சாதனா உள்பட 4 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

    அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து கூத்தாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×