என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தியாகிகள் தினம்"
- தியாகிகள் தினத்தையொட்டி இன்று காலை சரியாக 11 மணிக்கு சென்னையில் உள்ள அனைத்து சிக்னல்களும் நிறுத்தப்பட்டன.
- அஞ்சலி செலுத்திய பிறகு சிக்னல்கள் வழக்கம் போல் இயங்கியதும் வாகன ஓட்டிகள் சென்றனர்.
சென்னை:
இந்திய சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டு உயிர் தியாகம் செய்த சுதந்திர போராட்ட வீரர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 30-ந் தேதி தியாகிகள் தினம் கொண்டாடப்படுகிறது.
உயிர் தியாகம் செய்த சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று காலை 11 மணி முதல் 11.02 மணி வரை 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அந்த நேரத்தில் சென்னை நகரின் போக்குவரத்து 2 நிமிடங்கள் நிறுத்தப்படும் என்றும் இதற்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு தரும்படியும் போலீசார் ஏற்கனவே கேட்டுக் கொண்டனர்.
இதைத்தொடர்ந்து தியாகிகள் தினத்தையொட்டி இன்று காலை சரியாக 11 மணிக்கு சென்னையில் உள்ள அனைத்து சிக்னல்களும் நிறுத்தப்பட்டன. அனைத்து வாகனங்களும் அப்படியே நின்றன. வாகன ஓட்டிகள் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.
பின்னர் சிக்னல்கள் வழக்கம் போல் இயங்கியதும் வாகன ஓட்டிகள் சென்றனர்.
ஸ்பென்சர் சிக்னல், வேப்பேரி, அண்ணாசிலை, சென்ட்ரல், எழும்பூர் பாத்தியன் சாலை, தேனாம்பேட்டை, புரசைவாக்கம் டவுட்டன், அடையாறு, கோயம்பேடு உள்ளிட்ட அனைத்து சிக்னல்களிலும் வாகன ஓட்டிகள் 2 நிமிடம் மறைந்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தி சென்றனர்.
- முன்னாள் அமைச்சர் பங்கேற்பு
- விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
வந்தவாசி:
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த வல்லம் கிராமத்தில் இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி சார்பில் உழவர் தியாகிகள் தினம் முன்னிட்டு விவசாயிகள் மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மாநிலத் தலைவர் வேட்டவலம் மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக அதிமுக திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளர் தூசி கே.மோகன் முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு விவசாயிகளின் போராட்டத்திற்காக உயிர் நீத்த உழவர் தியாகிகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் டி.கே.பி.மணி, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பாஸ்கர் ரெட்டியார் முன்னாள் எம்.எல்.ஏ. அன்பழகன், குணசீலன் ஒன்றிய செயலாளர் அர்ஜுனன் லோகேஸ்வரன் பச்சையப்பன் தங்கராஜ் செல்வராஜ் மகேந்திரன் அரங்கநாதன் துரை திருமூலன் வந்தவாசி நகர செயலாளர் பாஷா உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்