search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தினத்தந்தி"

    இலங்கையில் தமிழ் வாசகர்களை சென்றடையும் வகையில் கொழும்பு நகரில் ‘தினத்தந்தி’ இன்று (வியாழக் கிழமை) முதல் வெளியாகிறது. இது ‘தினத்தந்தி’யின் 18-வது பதிப்பு ஆகும். #DailyThanthi #NewsPaper #SriLanka
    கொழும்பு:

    தமிழ் பத்திரிகைகளில் அதிக வாசகர்களை கொண்டு சிறப்பான இடத்தை ‘தினத்தந்தி’ பிடித்து இருக்கிறது.

    ‘தினத்தந்தி’ ஏற்கனவே சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை, வேலூர், கடலூர், ஈரோடு, நாகர்கோவில், தஞ்சை, திண்டுக்கல், புதுச்சேரி, பெங்களூரு, மும்பை மற்றும் திருப்பூர் ஆகிய நகரங்களில் இருந்து வெளியாகிறது.

    ‘தினத்தந்தி’யின் முதலாவது சர்வதேச பதிப்பு ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் தொடங்கப்பட்டது. அங்குள்ள தமிழர்களின் பேராதரவை பெற்ற ‘தினத்தந்தி’, தனது 2-வது சர்வதேச பதிப்பை இலங்கையில் வெளியிடுகிறது.



    இது ‘தினத்தந்தி’யின் 18-வது பதிப்பு ஆகும்.

    இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் தமிழர்கள் அதிகமாக வசிக்கிறார்கள். இலங்கை அரசிலும் தமிழர்கள் இடம் பெற்று உள்ளனர். அங்கு தொழில், வர்த்தகம் போன்ற பல்வேறு துறைகளில் தமிழர்கள் சிறந்து விளங்குகிறார்கள்.

    இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே அரசியல், வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் நெருக்கமான உறவு நிலவுகிறது. இலங்கையில் வசிக்கும் தமிழர்களின் நீண்ட கால கனவை பூர்த்தி செய்யும் வகையில் ‘தினத்தந்தி’ தனது புதிய பதிப்பை இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து வெளியிடுகிறது.

    இலங்கையில் அதிசிறந்த ஊடக சேவையாற்றி வரும் எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் நிறுவனத்தின் வெளியீடான ‘வீரகேசரி’ தமிழ் நாளிதழுடன் இணைந்து ‘தினத்தந்தி’ வெளியாகிறது.

    பாரம்பரியம் மிக்க ‘வீர கேசரி’ 1930-ம் ஆண்டு இந்தியாவை சேர்ந்த சுப்பிர மணியம் செட்டியாரால் தொடங்கப்பட்டு, கடந்த 89 ஆண்டுகளாக இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களுக்கு நாள்தோறும் செய்திகளை வழங்கி வருகிறது. ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனாரால் 1942-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘தினத்தந்தி’, தனது பவள விழாவை சிறப்பாக கொண்டாடி, 77 ஆண்டுகளாக தமிழ் மக்களின் இதயத்துடிப்பாக விளங்கி வருகிறது. எல்லைகளை தாண்டி ‘தினத்தந்தி’ தனது இலங்கை பதிப்பை ‘வீரகேசரி’யுடன் இணைந்து வெளியிடுகிறது.

    ‘தினத்தந்தி’ இலங்கை பதிப்பின் இதழ் இன்று (வியாழக்கிழமை) முதல் வெளியாகிறது.

    ‘தினத்தந்தி’ இலங்கை பதிப்பின் மூலம் தமிழகம் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள செய்திகள் இலங்கை மக்களுக்கு தாமதம் இன்றி உடனுக்குடன் கிடைக்கும். #DailyThanthi #NewsPaper #SriLanka
    கிராமங்களில் கல்வி வளர ‘தினத்தந்தி’ முக்கிய பங்காற்றி வருகிறது என்று காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா தெரிவித்தார். #DailyThanthi #KancheepuramCollector
    சென்னை:


    கல்வி பணியில் சீரிய முயற்சியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வரும் ‘தினத்தந்தி’, எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வுகளில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெறும் மாணவ-மாணவிகளுக்கு ரொக்கப்பரிசும் வழங்கி சிறப்பித்து வந்தது.

    அதேபோல், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு மற்றும் தினத்தந்தியின் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டு வந்தது. மேலும், மேற்படிப்பில் என்ன பாடப்பிரிவை தேர்வு செய்து படிக்கலாம்? என்பதை மாணவர்கள், பெற்றோர்கள் தெரிந்துகொள்வதற்கு ஏதுவாக ‘வெற்றி நிச்சயம்’ என்ற நிகழ்ச்சியும் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது.



    இப்படியாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்திவரும் ‘தினத்தந்தி’, கடந்த 2014-15-ம் கல்வி ஆண்டு முதல் ‘தினந்தந்தி கல்வி நிதி திட்டத்தை’ அறிமுகப்படுத்தியது. அதன்படி, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவ-மாணவிகளின் மேல்படிப்புக்கு ‘தினத்தந்தி’ நிதி உதவி அளித்து வருகிறது.

    இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் 2 மாவட்டங்கள் என மொத்தம் 34 மாவட்டங்களில் தலா 10 மாணவர்கள் வீதம் 340 மாணவ- மாணவிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். அவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.34 லட்சம் வழங்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் 2017-18-ம் கல்வியாண்டில் தினத்தந்தி கல்வி நிதி திட்டத்தின் கீழ் தலா ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசு பெற தகுதிபெற்றுள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களை சேர்ந்த எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்ற 30 மாணவ- மாணவிகளின் பெயர் விவரம் வருமாறு:-

    சென்னை மாவட்டம்

    1) மு.மணிமொழி, தூயமேரி மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பெரம்பூர்.

    2) த.திருசவுமியா, சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பெரம்பூர்.

    3) வே.பிரியதர்ஷினி, சிறுவர் தோட்டம் மேல்நிலைப்பள்ளி, மயிலாப்பூர்.

    4) சி.ஹேமலதா, சி.எஸ்.ஐ. தூய அகஸ்டின் மெட்ரிக் உயர்நிலைப்பள்ளி, தியாகராயநகர்.

    5) ம.பத்மபிரியா, முருகதனுஷ்கோடி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வண்ணாரப்பேட்டை.

    6) கு.பவித்ரா, ஸ்ரீஅஹோபிலமத் ஓரியண்டல் மேல்நிலைப்பள்ளி, மேற்கு மாம்பலம்.

    7) அ.திவ்யதர்ஷினி, ஹோலி ஏஞ்சல்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி, தியாகராயநகர்.

    8) க.சுகன்யா, கொ.சி.சங்கரலிங்க நாடார் மேல்நிலைப்பள்ளி, வண்ணாரப்பேட்டை.

    9) சு.துர்கா, சிங்காரம்பிள்ளை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வில்லிவாக்கம்.

    10) உ.கார்த்திகா பிரீத்தி, தனலட்சுமி மேல்நிலைப்பள்ளி, ராயபுரம்.

    திருவள்ளூர் மாவட்டம்

    1) கே.ஆர்.தனுஷ்யா, அரசு மேல்நிலைப்பள்ளி, புச்சிரெட்டிப்பள்ளி.

    2) ச.அரசு, எம்.ஆர். மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, மேட்டுக்குப்பம்.

    3) ரா.ஸ்ரீநிதி, அரசு மேல் நிலைப்பள்ளி, கவரப்பேட்டை.

    4) ச.ஜெயலட்சுமி, ஆசிரியர் மங்கலங்கிழார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, அம்மையார்க்குப்பம்.

    5) கி.புவியா, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருத்தணி.

    6) ச.காயத்ரி, தளபதி கே.விநாயகம் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, திருத்தணி.

    7) பா.கார்த்திக், தி.மு.கி.வா. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அம்மையார்க்குப்பம்.

    8) மு.ஈஸ்வரி, அரசு மேல் நிலைப்பள்ளி, புச்சிரெட்டிப்பள்ளி.

    9) மு.டில்லிபாபு, தி.மு. கி.வா. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அம்மையார்க் குப்பம்.

    10) செ.நிர்மல், அரசு மேல்நிலைப்பள்ளி, சுண்ணாம்புக்குளம்.

    காஞ்சீபுரம் மாவட்டம்

    1) மு.வித்யா, புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளி, முகலிவாக்கம்.

    2) ம.மிதுன்கண்ணா, தேசியா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, கண்ணமங்கலம்.

    3) மு.காயத்ரி, அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி, அய்யன்பேட்டை.

    4) செ.லினிஷா, செயின்ட் மேரீஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீபெரும்புதூர்.

    5) ப.தயாநந்தினி, செயின்ட் ஜோசப் மெட்ரிக் உயர்நிலைப்பள்ளி, வாலாஜாபாத்.

    6) சு.லோகேஷ்வரி, எஸ்.எஸ்.கே.வி. பெண்கள் மேல்நிலைப்பள்ளி, காஞ்சீபுரம்.

    7) க.தமிழ்வளவன், அந்திரசன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, காஞ்சீபுரம்.

    8) ஸ்ரீ.ஜலஸ்ரீ, செயின்ட் ஜோசப் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, செங்கல்பட்டு.

    9) க.ஜெயஸ்ரீ, புனித டொமினிக் ஆங்கிலோ இந்தியன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பரங்கிமலை.

    10) ஆ.சந்தியா, அரசினர் மேல்நிலைப்பள்ளி, மேடவாக்கம்.

    தினத்தந்தி கல்வி நிதி வழங்கும் விழா சென்னை குரோம்பேட்டை ரெயில் நிலையம் அருகே உள்ள எஸ்.சி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. இதில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, 30 மாணவ-மாணவிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசை வழங்கினார். அதைத் தொடர்ந்து அவர் பேசியதாவது:-

    தினத்தந்தி கல்வி நிதி திட்டத்தில் 2-வது முறையாக நான் கலந்துகொண்டு, மாணவ-மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு வழங்குகிறேன். இதை நான் ஒரு பெரும் பாக்கியமாக கருதுகிறேன். கல்வி தான் முக்கியம். கல்வி கிடைத்துவிட்டால் வாழ்க்கையில் எல்லாவித முன்னேற்றத்துக்கும் நாம் செல்லலாம்.

    அந்த வகையில் பவளவிழா கண்ட தினத்தந்தி நிறுவனம், 56 ஆண்டுகளாக மாணவர்களுக்கு இதுபோல் கல்வி நிதி உதவி வழங்கி சமூக தொண்டு செய்து வருகிறது. கல்வி பணியை இதுபோல் நேரடியாக செய்வது மட்டுமல்லாமல், மறைமுகமாகவும் பல்வேறு உதவிகளை தினத்தந்தி செய்துவருகிறது.

    கிராமங்களில் முன்பெல்லாம் பத்திரிகை என்றாலே அது தினத்தந்தி தான். அதன்பிறகு தான் மற்ற பத்திரிகைகள் சென்றடைந்தன. முதலில் கிராமங்களை சென்றடைந்து, அங்கு கல்வி வளர முக்கிய பங்காற்றியது ‘தினத்தந்தி’ தான். நான் பிறந்த கிராமத்தில் அனைத்து டீக்கடைகளிலும் தினத்தந்தி பேப்பர் தான் இருந்தது.

    நான் கல்லூரி படிக்கும் காலங்களில் தேசிய முதியோர் கல்வி தொடர்பாக கிராமப் புறங்களுக்கு சென்று அறிவொளி இயக்கத்தோடு இணைந்து முதியோர்களுக்கு வாசித்து, எழுதி பழக கற்றுக்கொடுப்போம். அப்போது முதற்கட்டமாக ‘தினத்தந்தி’ பத்திரிகையை கொடுத்து வாசிக்க கற்றுக்கொடுப்போம். அது ஏனென்றால் மற்ற பத்திரிகைகளை காட்டிலும் தினத்தந்தியில் எழுத்துகள் பெரிதாகவும், எளிதில் புரியும்படியும் இருக்கும். அந்த அளவு கிராமப்புற மக்களுக்கு தங்களுடைய பங்களிப்பை தினத்தந்தி செய்துவருகிறது.

    மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு விதமான திட்டங்களை தினத்தந்தி தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. மாணவ- மாணவிகளும் தங்களுடைய கல்வித்தரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில், தினத்தந்தி சென்னை மேலாளர் ஆர்.சதீஷ்குமார் வரவேற்புரையாற்றினார். இதில் காஞ்சீபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜே.ஆஞ்சலோ இருதயசாமி, பள்ளி செயலாளர் வி.சந்தானம், தாளாளர் கிருஷ்சந்தானம் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியில் பள்ளி முதல்வர் பேபி சரோஜா நன்றி கூறினார். #DailyThanthi #KancheepuramCollector

    ×