search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தண்ணீர் லாரி மோதல்"

    பழைய வண்ணாரப்பேட்டையில் தண்ணீர் லாரி மோதி பெண் பலியான சம்பவம் குறித்து காசிமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ராயபுரம்:

    பழைய வண்ணாரப் பேட்டை கழிவுநீர் ஏற்றும் நிலையம் கல்லறை சாலையில் உள்ளது. நேற்று மதியம் இதன் அருகே ஒரு பெண் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின் நோக்கி வந்த ஒரு குடிநீர் லாரி அவர்மீது மோதியது. இதில் அந்த பெண், லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி உயிர் இழந்தார்.

    அவர் யார் என்று தெரியவில்லை. சுமார் 50 வயது மதிக்கத்தக்க அந்த பெண் மஞ்சள் நிற சேலையும், சிவப்பு நிற ஜாக்கெட்டும் அணிந்து இருந்தார். அவர் வைத்திருந்த பையில் காய்கறிகளும், துணிகளும் இருந்தன.

    லாரியை ஓட்டிய கிளீனர் அஜித்குமார் (20) கைது செய்யப்பட்டார். காசிமேடு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    கீழ்ப்பாக்கத்தில் தண்ணீர் லாரி மோதி பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவத்தையடுத்து அண்ணா சதுக்கம் போக்குவரத்து போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். #Accident
    சென்னை:

    சென்னை கீழ்ப்பாக்கம் மண்டபம் ரோடு முதல் தெருவை சேர்ந்தவர் ஓமன் மேத்யூ. இவரது மகள் ஜெமீமா அச்சு மேத்யூ (12).

    இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தார். இன்று காலை 7.30 மணி அளவில் தனது சித்தப்பாவுடன் ஜெமீமா மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த தண்ணீர் லாரி மோதியது. இதில் ஜெமீமா தவறி கீழே விழுந்து லாரியின் அடியில் சிக்கினார்.

    இதில் சம்பவ இடத்திலேயே அவர் உடல் நசுங்கி பலியானார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் அண்ணா சதுக்கம் போக்குவரத்து போலீசார் விரைந்து சென்று மாணவியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    பள்ளி சென்ற மாணவி சீருடையுடன் விபத்தில் பலியான சம்பவம் அவரது உறவினர்களை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது. #Accident

    கொல்கத்தா சர்வதேச விமான நிலையத்தில் கத்தார் ஏர்வேஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தபோது தண்ணீர் லாரி மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. #QatarAirwaysPlane #KolkataAirport
    கொல்கத்தா:

    கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை 3.15 மணியளவில் கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று  103 பயணிகளை ஏற்றிக்கொண்டு தோகாவிற்கு புறப்பட தயாராகிக் கொண்டிருந்தது.

    அப்போது தண்ணீர் லாரி ஒன்று விமானத்தின் லேன்டிங் கியர் அருகில் எதிர்பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில் விமானத்தின் வயிற்றுப்பகுதியில் சேதம் அடைந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் எந்தவித சேதமும் ஏற்படவில்லை. விபத்துக்குள்ளான விமானம் புறப்படாது என்று அறிவிக்கப்பட்டு, பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

    முதற்கட்ட விசாரணையில் தண்ணீர் லாரியின் பிரேக் சரியாக வேலை செய்யாததால் இந்த அசம்பாவிதம் நடைபெற்றுள்ளது என்று இந்திய விமான நிலையங்கள் ஆணையம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    103 பயணிகள் அருகில் உள்ள ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நாளை காலை 3 மணிக்கு தோகா புறப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானம் பறப்பதற்கு சற்றுமுன் இந்த விபத்து ஏற்பட்டதால் விமானிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். #QatarAirwaysPlane #KolkataAirport
    கொளத்தூர் அருகே தண்ணீர் லாரி மோதி 1½ வயது சிறுவன் பலியானான். அவனது உடலை தூக்கியபடி சிறுவனின் தாய் லாரியை விரட்டிச்சென்ற காட்சி அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.
    மாதவரம்:

    வில்லிவாக்கம் வடக்கு ஜெகநாதபுரத்தில் வசித்து வருபவர் கலைவாணன். தள்ளுவண்டியில் வேர்க்கடலை வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களது 1½ வயது மகன் மோரிக்.

    தற்போது மகாலட்சுமி 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். இவர்களது சொந்த ஊர் திருவண்ணாமலை. கடந்த 2 வாரத்துக்கு முன்பு வில்லிவாக்கத்துக்கு வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு மகாலட்சுமி வீட்டின் எதிரே நின்று கொண்டு மகன் மோரிக்குக்கு சாப்பாடு கொடுத்தார். அப்போது சிறுவன் மோரிக் ஓடி விளையாடியபடி சாலை அருகே நின்றான்.

    அந்த நேரத்தில் அந்த வழியாக வந்த தண்ணீர் லாரி சாலையில் நின்ற மோரிக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயம் அடைந்த மோரிக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான்.

    இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மகாலட்சுமி மகன் உடலை தூக்கிக் கொண்டு விபத்து ஏற்படுத்திய லாரியை விரட்டியபடி ஓடினார். அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள் தண்ணீர் லாரியை மடக்கி பிடித்தனர்.

    ஆத்திரமடைந்த பொதுமக்கள் லாரியின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். லாரி டிரைவர் உத்திரமேரூரை சேர்ந்த மணிகண்டனையும் தாக்கினர்.

    திருமங்கலம் போக்குவரத்து போலீசார் மணிகண்டனை மீட்டு கைது செய்தனர். சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மகாலட்சுமி மகனின் உடலை தூக்கியபடி லாரியை பின்தொடர்ந்து செல்லும் பரிதாப காட்சி அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    ×