search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டேவிட் பெக்காம்"

    • திரைப்பிரபலங்கள் மற்றும் பல்வேறு நட்சத்திரங்கள் வந்திருந்தனர்.
    • அரையிறுதி போட்டியை நேரில் காண வந்திருந்தார்.

    இங்கிலாந்தை சேர்ந்த பிரபல முன்னாள் கால்பந்து வீரர் டேவிட் பெக்காம். உலகளவில் ரசிகர் பட்டாளம் கொண்ட டேவிட் பெக்காம் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த வகையில், நேற்று (நவம்பர் 15) நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியை நேரில் காண வந்திருந்தார்.

    மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. அரையிறுதி போட்டியை காண முன்னாள் வீரர்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் பல்வேறு நட்சத்திரங்கள் வந்திருந்தனர். பரபரப்பாக நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது.

    இந்த நிலையில், நேற்றைய போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவை டேவிட் பெக்காம் சந்தித்து பேசியுள்ளார். சந்திப்பின் போது, ரோகித் சர்மா ஜெர்சியை டேவிட் பெக்காமும், டேவிட் பெக்காமின் ஜெர்சியை ரோகித் சர்மாவும் அணிந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

    போன் பேசியபடியே கார் ஓட்டிய முன்னாள் இங்கிலாந்து கால்பந்து அணி கேப்டன் டேவிட் பெக்காமுக்கு 6 மாதம் டிரைவிங் செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது. #DavidBeckham
    இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் டேவிட் பெக்காம். தலைசிறந்த முன்னாள் கால்பந்து வீரரான பெக்காம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 21-ந்தேதி கார் ஓட்டிக்கொண்டிருக்கும்போது போன் பேசியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இதுகுறித்து ப்ரோம்லி மாஜிஸ்திரேட் கோர்ட் விசாரணை நடத்தி வந்தது. இந்த வழக்கில் ஏற்கனவே டேவிட் பெக்காம் குற்றவாளி என்று கோர்ட் அறிவித்திருந்தது.

    இந்நிலையில் இன்று அவருக்கு ஆறு மாதம் டிரைவிங் செய்ய கோர்ட் தடைவிதித்துள்ளது. இந்த வழக்கில் கடந்த மாதமே தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கும். டேவிட் பெக்காமல் நேரில் ஆஜராக வேண்டும் என்பதால் தீர்ப்பு தள்ளிப்போகி இன்று வழங்கப்பட்டுள்ளது.
    ×