search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டேனியல் அனி போப்"

    அறம் படத்தை இயக்கிய கோபி நயினார் இயக்கத்தில் ஜெய் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Jai #AishwaryaRajesh
    அறம் படத்தின் வெற்றியை தொடர்ந்து அறம் படத்தின் இரண்டாம் பாகத்தை கோபி நயினார் இயக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், அதற்கு முன்பாக வடசென்னை பின்னணியில் புதிய படமொன்றை இயக்குகிறார் கோபி. இந்த படத்தில் நாயகனாக ஜெய் நடிக்கிறார்.

    ஜெய் ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. குத்துச் சண்டையை மையப்படுத்தி இந்த படம் உருவாகுவதாக முன்னதாக கூறப்பட்ட நிலையில், வட சென்னையில் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களின் திறமை மற்றும் அந்த பகுதியில் வாழும் இளைஞர்களின் கால்பந்தாட்ட திறமையை மையப்படுத்தி இந்த படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.



    காமெடி நடிகர் டேனியல் அனி போப் மற்றும் கல்லூரி வினோத் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை முடித்த பிறகு அடுத்த ஆண்டு அறம் படத்தின் இரண்டாம் பாகத்தை கோபி நயினார் இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது. #Jai #AishwaryaRajesh #GopiNainar 

    பிச்சுமணி இயக்கத்தில் ஜெய் - ரெபா மோனிகா ஜான் நடிப்பில் உருவாகி இருக்கும் `ஜருகண்டி' படத்தின் முன்னோட்டம். #Jarugandi #Jai
    ஷ்ரத்தா என்டர்டெயின்மெண்ட் சார்பில் பத்ரி கஸ்தூரி மற்றும் ஷிவேதா குரூப் சார்பில் நடிகர் நிதின் சத்யா இணைந்து தயாரித்துள்ள படம் `ஜருகண்டி'.

    ஜெய் - ரெபா மோனிகா ஜான் நாயகன், நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் டேனியல் அனி போப், அமித் குமார் திவாரி, இளவரசு, போஸ் வெங்கட் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

    இசை - போபோ சசி, ஒளிப்பதிவு - ஆர்.டி.ராஜசேகர், படத்தொகுப்பு - பிரவீன்.கே.எல்., கலை - ‌ரேமியன் ரெமி, சண்டைபயிற்சி - டான் அசோக், நடன இயக்குநர் - அஜய் ராஜ், உடை வடிவமைப்பாளர் - ஷில்பா உம்மிட்டி, தயாரிப்பு - பத்ரி கஸ்தூரி, நிதின் சத்யா, இயக்கம் - பிச்சுமணி. இவர் இயக்குநர் வெங்கட் பிரபவிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார்.



    படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் பிச்சுமணி பேசியதாவது, 

    வேறு கதைக்கு வைத்த தலைப்பை, இந்த படத்திற்கு வைக்க சொல்லி உற்சாகப்படுத்தினார் வெங்கட்பிரபு. அனைவருமே படத்தில் விரும்பி நடித்தார்கள். போபோசிஸ் இசையில், பிரவீண்.கே.எல் படத்தொகுப்பில் படம் சிறப்பாக வந்துள்ளது. படத்தின் திரைக்கதை வேகமாக நகரும் வகையில் இருக்கும். வேகம், ரன், ஸ்பீடு என பல பெயர்கள் வந்துவிட்டது. அடுத்ததாக ஜருகண்டி வரப்போகிறது. 

    நமக்கு தேவைனு வரும் போது நாம் ஒரு விஷயத்தை நியாயப்படுத்துவோம். அந்த வகையில் லோன் வாங்கி கஷ்டப்படும் ஒருவரை மையப்படுத்தி படத்தை படம் படத்தின் கதை நகரும் என்றார். #Jarugandi #Jai

    அறம் படத்தை இயக்கிய கோபி நயினார் அடுத்ததாக இயக்கவிருக்கும் புதிய படத்தில் நடிகர் ஜெய் - டேனியல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Jai #DanielAnniePope
    கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான அறம் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. 
    இந்த நிலையில், அறம் படத்தின் அடுத்த பாகத்தை இயக்கப் போவதாகவும் கோபி நயினார் அறிவித்தார்.

    அறம் 2 மூலம் கோபி நயினார் - நயன்தாரா மீண்டும் இணையவிருக்கின்றனர். அறம் 2 படப்பிடிப்பு அடுத்த ஆண்டு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இதற்கிடையே கோபி தனது அடுத்த படத்தை துவங்கியிருக்கிறார். இந்த படத்தில் நாயகனாக ஜெய் நடிக்கிறார். முன்னதாக இந்த கதையில் நடிக்க ஆர்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், சில தவிர்க்க முடியாத காரணங்களால் ஆர்யா இந்த படத்தில் ஒப்பந்தமாகவில்லை. வடசென்னையில் நடக்கும் குத்துச் சண்டையை மையப்படுத்தி படம் உருவாகுவதாக கூறப்படுகிறது.

    பிக்பாஸ் 2-வது சீசனில் பங்கேற்ற காமெடி நடிகர் டேனியல் அனி போப் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதனை டேனியல் அவரது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

    இதுகுறித்து டேனியல் கூறியிருப்பதாவது, 

    எனது அடுத்த படத்தில் மீண்டும் ஜெய்யுடன் இணைவதில் மகிழ்ச்சி. அறம் படத்தின் இயக்குநர் கோபி நயினார் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கியது. என்று குறிப்பிட்டுள்ளார். #Jai #DanielAnniePope #GopiNainar

    நிதின் சத்யா தயாரிப்பில் பிச்சுமணி இயக்கத்தில் ஜெய் - ரெபா மோனிகா ஜான் நடிப்பில் உருவாகி இருக்கும் `ஜருகண்டி' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #Jarugandi #Jai
    வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய பிச்சுமணி இயக்கியிருக்கும் படம் ஜருகண்டி. ஜெய் - ரெபா மோனிகா ஜான் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் ரோபோ சங்கர், டேனியல் அனி போப், அமித் குமார் திவாரி, இளவரசு, போஸ் வெங்கட் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

    நடிகர் நிதின் சத்யா இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகி இருக்கிறார். நமக்கு தேவைனு வரும் போது நாம் ஒரு விஷயத்தை நியாயப்படுத்துவோம். அந்த வகையில் லோன் வாங்கி கஷ்டப்படும் ஒருவரை மையப்படுத்தி படத்தின் கதை நகர்கிறது. 

    போபோசிஸ் இசையில் படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், படம் வருகிற 
    செப்டம்பர் 28-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. 

    அதேநோளில் தான் மணிரத்னமின் செக்கச்சிவந்த வானம் படமும், பா.ரஞ்சித் தயாரித்துள்ள பரியேறும் பெருமாள் படமும் ரிலீசாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. #Jarugandi #Jai

    நிதின் சத்யா தயாரிப்பில் பிச்சுமணி இயக்கத்தில் ஜெய் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜருகண்டி படத்தில் லோன் வாங்கி கஷ்டப்படும் கதாபாத்திரத்தில் ஜெய் நடித்துள்ளதாக தெரிகிறது. #Jarugandi #Jai
    வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய பிச்சுமணி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ஜருகண்டி. ஜெய் - ரெபா மோனிகா ஜான் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் ரோபோ சங்கர், டேனியல் அனி போப், அமித் குமார் திவாரி, இளவரசு, போஸ் வெங்கட் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்தை நடிகர் நிதின் சத்யா தயாரித்துள்ளார். இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நிதின் சத்யா பேசுகையில், 

    பிச்சுமணியை சென்னை 28 படத்தில் இருந்தே தெரியும். மங்காத்தா, சரோஜா என பல படங்களில் அவரது வேலை பிடித்துப் போனது. படத்தை சரியாக 46 நாட்களில் முடித்துவிட்டோம். ஜெய் உட்பட அனைவருமே நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்கள். அனைவருமே நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்கள். படத்தை விரைவில் சென்சாருக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளோம். சிங்கம்-3 படத்திற்கு பிறகு இந்த படத்தில் நடித்திருக்கிறேன் என்றார்.



    படத்தின் இயக்குநர் பிச்சுமணி பேசியதாவது, 

    வேறு கதைக்கு வைத்த தலைப்பை, இந்த படத்திற்கு வைக்க சொல்லி உற்சாகப்படுத்தினார் வெங்கட்பிரபு. அனைவருமே படத்தில் விரும்பி நடித்தார்கள். போபோசிஸ் இசையில், பிரவீண்.கே.எல் படத்தொகுப்பில் படம் சிறப்பாக வந்துள்ளது. படத்தின் திரைக்கதை வேகமாக நகரும் வகையில் இருக்கும். வேகம், ரன், ஸ்பீடு என பல பெயர்கள் வந்துவிட்டது. அடுத்ததாக ஜருகண்டி வரப்போகிறது. 

    நமக்கு தேவைனு வரும் போது நாம் ஒரு விஷயத்தை நியாயப்படுத்துவோம். அந்த வகையில் லோன் வாங்கி கஷ்டப்படும் ஒருவரை மையப்படுத்தி படத்தை படம் படத்தின் கதை நகரும் என்றார். #Jarugandi #Jai

    ×