search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aramm"

    நயன்தாராவை வைத்து ‘அறம்’ என்ற வெற்றிப் படத்தை கொடுத்த இயக்குனர் கோபி நயினார், அடுத்ததாக போராட்ட வீரரின் வாழ்க்கை கதையை படமாக்க இருக்கிறார். #Aramm
    எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா என்று வரிசையாக தமிழில் வாழ்க்கை வரலாற்று படங்கள் உருவாகி வருகின்றன. இந்த வரிசையில் அறம் இயக்குனர் கோபி நயினார் பழங்குடியின சுதந்திர போராட்ட வீரரின் வாழ்க்கை கதையை படமாக்க உள்ளார்.

    வட இந்தியாவைச் சேர்ந்த பிர்சா முண்டா, நாட்டின் சுதந்திரத்துக்காகவும், பழங்குடி இன மக்களுக்காகவும் போராடி இளம் வயதிலேயே உயிர் நீத்தவர்.

    இவரது வாழ்க்கை வரலாற்றை இயக்கஇருப்பது குறித்து பேசிய கோபி நயினார், ‘ஆங்கிலேயர் ஆட்சியில் அவர்களுக்கு எதிராக பல செயல்களில் ஈடுபட்ட பிர்ஸா முண்டா, பற்றிய கதையை எழுதி முடித்துவிட்டேன்.

    சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் நடந்த கதைக்காக கடந்த 2 ஆண்டுகளாய் பல்வேறு ஆவணங்களை திரட்டி இருக்கிறேன். இது ஒரு பெரிய பட்ஜெட் படமாக இருக்கும்’ என தெரிவித்துள்ளார்.

    உச்ச நட்சத்திரம் ஒருவரை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
    அறம் படத்தை இயக்கிய கோபி நயினார் இயக்கத்தில் ஜெய் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Jai #AishwaryaRajesh
    அறம் படத்தின் வெற்றியை தொடர்ந்து அறம் படத்தின் இரண்டாம் பாகத்தை கோபி நயினார் இயக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், அதற்கு முன்பாக வடசென்னை பின்னணியில் புதிய படமொன்றை இயக்குகிறார் கோபி. இந்த படத்தில் நாயகனாக ஜெய் நடிக்கிறார்.

    ஜெய் ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. குத்துச் சண்டையை மையப்படுத்தி இந்த படம் உருவாகுவதாக முன்னதாக கூறப்பட்ட நிலையில், வட சென்னையில் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களின் திறமை மற்றும் அந்த பகுதியில் வாழும் இளைஞர்களின் கால்பந்தாட்ட திறமையை மையப்படுத்தி இந்த படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.



    காமெடி நடிகர் டேனியல் அனி போப் மற்றும் கல்லூரி வினோத் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை முடித்த பிறகு அடுத்த ஆண்டு அறம் படத்தின் இரண்டாம் பாகத்தை கோபி நயினார் இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது. #Jai #AishwaryaRajesh #GopiNainar 

    அறம் படத்தை இயக்கிய கோபி நயினார் அடுத்ததாக இயக்கவிருக்கும் புதிய படத்தில் நடிகர் ஜெய் - டேனியல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #Jai #DanielAnniePope
    கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான அறம் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. 
    இந்த நிலையில், அறம் படத்தின் அடுத்த பாகத்தை இயக்கப் போவதாகவும் கோபி நயினார் அறிவித்தார்.

    அறம் 2 மூலம் கோபி நயினார் - நயன்தாரா மீண்டும் இணையவிருக்கின்றனர். அறம் 2 படப்பிடிப்பு அடுத்த ஆண்டு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இதற்கிடையே கோபி தனது அடுத்த படத்தை துவங்கியிருக்கிறார். இந்த படத்தில் நாயகனாக ஜெய் நடிக்கிறார். முன்னதாக இந்த கதையில் நடிக்க ஆர்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், சில தவிர்க்க முடியாத காரணங்களால் ஆர்யா இந்த படத்தில் ஒப்பந்தமாகவில்லை. வடசென்னையில் நடக்கும் குத்துச் சண்டையை மையப்படுத்தி படம் உருவாகுவதாக கூறப்படுகிறது.

    பிக்பாஸ் 2-வது சீசனில் பங்கேற்ற காமெடி நடிகர் டேனியல் அனி போப் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதனை டேனியல் அவரது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

    இதுகுறித்து டேனியல் கூறியிருப்பதாவது, 

    எனது அடுத்த படத்தில் மீண்டும் ஜெய்யுடன் இணைவதில் மகிழ்ச்சி. அறம் படத்தின் இயக்குநர் கோபி நயினார் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கியது. என்று குறிப்பிட்டுள்ளார். #Jai #DanielAnniePope #GopiNainar

    ×