search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெங்கு அறிகுறி"

    • சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்
    • வீடுகளின் சுற்றுப்பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள உத்தரவு

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் நல்ல நீரில் வளரக்கூடிய கொசுக்கள் மூலம் டெங்கு காய்ச்சல் பாதிப்பு சிலருக்கு ஏற்பட்டு வருகிறது.

    வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர காய்ச்சல் பிரிவில் வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 7 பேர் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மேலும் காய்ச்சல் சிகிச்சை பிரிவு வாடில் 20-க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    வேலூர் மாவட்டத்தில் டெங்கு கொசு கட்டுப்படுத்த வீடு வீடாக கொசு ஒழிப்பு பணிகள் நடந்து வருகிறது. பல்வேறு இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படு வதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    குழந்தைகளுக்கு காய்ச்சல் பாதிப்புகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வேண்டும். காய்ச்சல் தொடர்ந்து இருந்தால் ரத்த மாதிரி பரிசோதனை செய்து டெங்கு அறிகுறி உள்ளதா என்பதை கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.

    விட்டு விட்டு மழை பெய்து வருவதால் நல்ல நீரில் வளரக்கூடிய கொசுக்கள் மூலம் டெங்கு பரவி விடும்.பொது மக்கள் தங்களது வீடுகளில் பழைய பிளாஸ்டிக் டயர், தேங்காய் சிரட்டை போன்றவற்றில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

    ×