search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிஎஸ்பி விஷ்ணுபிரியா"

    போலீஸ் துணை சூப்பிரண்டு விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சி.பி.ஐ. மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று கோவை கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. #DSPVishnupriya #CBI #Investigation
    கோவை:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு போலீஸ் துணை சூப்பிரண்டாக (டி.எஸ்.பி.) இருந்தவர் விஷ்ணுபிரியா. இவர் 2015-ம் ஆண்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கில் விசாரணை அதிகாரியாக விஷ்ணுபிரியா இருந்தார். உயர் அதிகாரிகள் அவருக்கு கொடுத்த அழுத்தம் காரணமாக தான் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று குற்றச்சாட்டு எழுந்தது.

    இதையடுத்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. ஆனால் சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணையில் திருப்தி இல்லை என்றும், இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்றும் விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    அதை விசாரித்த ஐகோர்ட்டு, விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரித்து, கோவை தலைமை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. அதை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. சுப்ரீம் கோர்ட்டும் ஐகோர்ட்டு அளித்த உத்தரவை உறுதி செய்தது.

    இதையடுத்து விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி ஏப்ரல் மாதம் கோவை தலைமை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தனர்.

    அதில், விஷ்ணுபிரியா, உயர் அதிகாரிகள் அழுத்தம் காரணமாக தான் தற்கொலை செய்து கொண்டார் என்பதற்கு எவ்வித முகாந்திரமும் இல்லை. எனவே இந்த வழக்கை கைவிடுவதாக கூறப்பட்டு இருந்தது. சி.பி.ஐ. அளித்த அறிக்கைக்கு எதிராக விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி, கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.

    இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சி.பி.ஐ. தாக்கல் செய்த அறிக்கையை தள்ளுபடி செய்ததுடன், விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை மீண்டும் சி.பி.ஐ. விசாரித்து 6 மாதத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், உயர் அதிகாரிகள் உள்பட 7 பேரிடமும் விசாரணை நடத்த விஷ்ணுபிரியாவின் தந்தை ரவியின் வக்கீலுக்கு அனுமதி அளித்தும் உத்தரவிட்டார். #DSPVishnupriya #CBI #Investigation 
    கோவை கோர்ட்டில் நடைபெற்று வந்த டி.எஸ்.பி.விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கில் சிபிஐக்கு கால அவகாசம் வழங்கி விசாரணையை வரும் 15-ந்தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். #DSPVishnupriya #CBI
    கோவை:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் டி.எஸ்.பி.யாக பணியாற்றியவர் விஷ்ணுபிரியா. இவர் 2015-ம் ஆண்டு செப்டம்பர் 18-ந்தேதி முகாம் அலுவலகத்தில் தூக்கு போட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.

    உயர் அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டதாக புகார் செய்யப்பட்டது. இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. பல கட்ட விசாரணைக்கு பின்னர் இந்த வழக்கில் குற்றவாளிகள் யாரும் இல்லை எனவும், இந்த வழக்கை கைவிடுவதாகவும் கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் சி.பி.ஐ. கடந்த ஏப்ரல் 16-ந்தேதி அறிக்கை தாக்கல் செய்தது.



    சி.பி.ஐ. அறிக்கைக்கு டி.எஸ்.பி. விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி எதிர்ப்பு தெரிவித்தார். மீண்டும் வழக்கை விசாரிக்க வலியுறுத்தினார்.

    இதனையடுத்து இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி நடராஜன் வழக்கை விசாரித்தார். அப்போது சி.பி.ஐ. தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. நீதிபதி கால அவகாசம் வழங்கி விசாரணையை வரும் 15-ந்தேதிக்கு ஒத்தி வைத்தார்.

    மேலும் இந்த வழக்கில் மேலும் அவகாசம் வழங்க முடியாது என்றும் உத்தரவிட்டார். #DSPVishnupriya #CBI

    தற்கொலை செய்துகொண்ட டி.எஸ்.பி. விஷ்ணுபிரியாவின் தந்தையிடம் சி.பி.ஐ. அறிக்கையை ஒப்படைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். #DSPVishnuPriya #CBIReport
    கோவை:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டி.எஸ்.பி.யாக பணியாற்றி வந்தவர் விஷ்ணுபிரியா. இவர் கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தனது முகாம் அலுவலகத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    உயர் அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக தான் வி‌ஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

    இதில் யாரும் குற்றவாளிகள் இல்லை. எனவே வழக்கை கைவிடுவதாக சி.பி.ஐ. அறிவித்தது. இது தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் கோவை தலைமை குற்றவியல் கோர்ட்டில் சி.பி.ஐ. அறிக்கை தாக்கல் செய்தது.

    ஆனால் விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி இதனை ஏற்றுக் கொள்ளவில்லை. தனது மகள் சாவில் சந்தேகம் உள்ளது. எனவே சி.பி.ஐ. அறிக்கையை தங்களுக்கு தர வேண்டும் என ரவி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    இதனை விசாரித்த கோர்ட்டு சி.பி.ஐ. அறிக்கையை ரவிக்கு வழங்க உத்தரவிட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ. அதிகாரிகளின் அறிக்கையை கொடுக்காமல் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்த அறிக்கை ரவியிடம் வழங்கப்பட்டது.

    இந்த வழக்கு விசாரணையை வருகிற 9-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி துரைராஜ் உத்தரவிட்டார்.

    பின்னர் கோர்ட்டில் இருந்து தனது வக்கீல் அருண்மொழியுடன் விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி வெளியே வந்தார். இது குறித்து வக்கீல் அருண் மொழி கூறியதாவது-

    விஷ்ணு பிரியா மரணத்தில் நிறைய சந்தேகம் உள்ளது. எனவே சி.பி.ஐ. விசாரணை அறிக்கையை கேட்டு மனு தாக்கல் செய்தோம். சி.பி.ஐ. அதிகாரிகள் எந்த சாட்சிகளை விசாரித்தார்கள். என்னென்ன ஆவணம் கேட்டு இருந்தனர் என்பதை கண்டறிய சி.பி.ஐ. விசாரணை அறிக்கையை கேட்டு இருந்தோம். கோர்ட்டும் சி.பி.ஐ. அறிக்கை வழங்க உத்தரவிட்டது.

    ஆனால் போலீசார் சி.பி.ஐ. அறிக்கையை வழங்காமல் சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணை அறிக்கையை அளித்து உள்ளனர். மீண்டும் சி.பி.ஐ. அறிக்கையை வழங்க கேட்டு உள்ளோம். கோர்ட்டும் வழங்க உத்தரவிட்டு உள்ளது. விசாரணையை வருகிற 9-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்து உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார். #DSPVishnuPriya #CBIReport
    ×