search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டி.எஸ்.பி"

    • சங்ககிரி மோரூர் பிட் 1 கிராமம், என்.ஜி.ஏ ஸ்டீல் நிறுவனத்தில் சங்ககிரி போலீசார் சார்பில், வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
    • 50-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம் சங்ககிரி மோரூர் பிட் 1 கிராமம், என்.ஜி.ஏ ஸ்டீல் நிறுவனத்தில் சங்ககிரி போலீசார் சார்பில், வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சிக்கு சங்ககிரி டி.எஸ்.பி ஆரோக்யராஜ் தலைமை வகித்தார். அவர் பேசுகையில், சங்ககிரியில் பணியாற்றும் பீகார், ஒரிசா உள்ளிட்ட வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் வதந்திகளை நம்ப வேண்டாம். தேவையான பாதுகாப்பு உதவிகள் செய்யப்பட்டு உள்ளது. அதனால் எந்த விதமான அச்சுறுத்தலும் இல்லாமல் பணி செய்யலாம் என்றார்.

    இதில், சங்ககிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி, எஸ்.ஐ சுதாகரன், என்.ஜி.ஏ ஸ்டீல் நிறுவன சேர்மன் அன்பழகன், நிர்வாக இயக்குனர் ராஜராஜன் மற்றும் 50-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

    • பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலையில் உள்ள பாலசுப்பிரமணிய சாமி கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு தேர் திருவிழா நாளை நடைபெறுகிறது.
    • சப்- இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் மற்றும் போலீசார் கொண்ட குழுவினர், கபிலர்மலை ஒன்றிய செயலாளர் சண்முகம், விழா குழு தலைவர் ராமலிங்கம் மற்றும் விழா குழு உறுப்பினர்கள் ஆய்வு செய்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலையில் உள்ள பாலசுப்பிரமணிய சாமி கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு தேர் திருவிழா நாளை நடைபெறுகிறது.

    ஒவ்வொரு வருடமும் தைப்பூசத்தன்று நாமக்கல் மாவட்டம் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி, இளநீர் காவடி, மயில் காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகளை அங்கிருந்து கபிலர்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் கிரிவலப்பாதை வழியாக நடந்து சென்று, மலை உச்சியில் உள்ள பாலசுப்ரமணிய சாமிக்கு அபிஷேக ஆராதனை செய்வது வழக்கம்.

    அதேபோல் நாளையும், பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் பல்வேறு காவடிகளை எடுத்து

    வந்து சாமி தரிசனம் செய்வார்கள். மாலை 4 மணி

    அளவில், முதல் நாள் தேரோட்டம் நடைபெற உள்ளது. மறுநாள் (திங்கட்கி ழமை) 2-ம் நாள் தேரோட்டமும் நடைபெறுகிறது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய உள்ளனர். மேலும் கிரிவலப் பாதையை சுற்றி பல்வேறு வகையான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் போடப்பட்டு உள்ளன.

    விழாவை முன்னிட்டு கோவிலில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா என்பது குறித்தும், தேர் சென்று வரக்கூடிய பாதை, பக்தர்கள் செல்லும் பாதைகளில் பரமத்தி வேலூர் போலீஸ் டி.எஸ்.பி கலையரசன், போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் மற்றும் போலீசார் கொண்ட குழுவினர், கபிலர்மலை ஒன்றிய செயலாளர் சண்முகம், விழா குழு தலைவர் ராமலிங்கம் மற்றும் விழா குழு உறுப்பினர்கள் ஆய்வு செய்தனர்.

    தேரோட்டத்திற்கு வருகை தரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் வகையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட உள்ளனர்.

    • தைப்பூச திருநாள் தேரோட்டம் நடைபெறுவது நிறுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு தைப்பூச திருநாள் அன்று தேரோட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
    • இதையடுத்து கோவிலில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பரமத்திவேலூர் டி.எஸ்.பி கலையரசன் நேரில் ஆய்வு செய்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலையில் உள்ள பாலசுப்ரமணிய சாமி கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.

    கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்ததன் காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இதனால் தைப்பூச திருநாள் தேரோட்டம் நடைபெறுவது நிறுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு தைப்பூச திருநாள் அன்று தேரோட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கோவிலில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பரமத்திவேலூர் டி.எஸ்.பி கலையரசன் நேரில் ஆய்வு செய்தார். தேரோட்டம் நடைபெறும் வீதிகளில் உள்ள இடையூறு கள், மின்கம்பிகள் செல்லும் பாதை, கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தும் பகுதிகள், கூட்டத்தை கட்டுப்படுத்த தடுப்புகள் அமைத்தல் குறித்து போலீசாருக்கு ஆலோசனை வழங்கினார். ஆய்வின்போது இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ் (பரமத்தி), சுப்பிரமணியம் (ஜேடர்பாளையம்), தனிப்பி ரிவு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமணன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

    • நடிகர் விஜய் சேதுபதி இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் நடித்துள்ள படம் 'டி.எஸ்.பி'.
    • இப்படம் நேற்று முன்தினம் (02.12.2022) திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் நேற்று வெளியான படம் 'டி.எஸ்.பி'. விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை கார்த்திகேயன் சந்தானம் தயாரித்துள்ளார்.அனு கீர்த்தி நாயகியாக நடித்துள்ளார். நேற்று திரையரங்குகளில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நேற்று இப்படத்தின் வெற்றியை விஜய் சேதுபதி படக்குழுவுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

    டி.எஸ்.பி

    டி.எஸ்.பி

     

    இந்நிலையில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தை பலதரப்பட்ட மக்கள் கண்டுகளித்து கொண்டாடி வருகின்றனர். விஜய் சேதுபதியின் ரசிகர்கள், இளைஞர்கள் என அனைவரும் படத்தை பார்த்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.



    • நடிகர் விஜய் சேதுபதி இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் நடித்துள்ள படம் 'டி.எஸ்.பி'.
    • இப்படம் நேற்று (02.12.2022) திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

    இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் நேற்று வெளியான படம் 'டி.எஸ்.பி'. விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை கார்த்திகேயன் சந்தானம் தயாரித்துள்ளார்.அனு கீர்த்தி நாயகியாக நடித்துள்ளார். நேற்று திரையரங்குகளில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

     

    பட வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய விஜய் சேதுபதி

    பட வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய விஜய் சேதுபதி

    இந்நிலையில் இப்படத்தின் வெற்றியை விஜய் சேதுபதி படக்குழுவுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    • விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள 'டி.எஸ்.பி' திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • இப்படம் ரசிகர்களிடையே அதிக ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    மேயாத மான், பெண்குயின், பபூன், 777 சார்லி உள்ளிட்ட பல வெற்றி படங்களை தயாரித்த ஸ்டோன் பென்ச் நிறுவனம் தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் 'டி.எஸ்.பி' என்ற படத்தை தயாரித்துள்ளது. விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள இப்படத்தை வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா உள்ளிட்ட பல படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கியுள்ளார்.

    டி.எஸ்.பி

    டி.எஸ்.பி

     

    இப்படத்தில் அனு கீர்த்தி கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தின் போஸ்டர் மற்றும் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. சமீபத்தில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் கலந்துக் கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்.

    நாளை (டிசம்பர் 2) திரையரங்குகளில் வெளியாக இருக்கும் டி.எஸ்.பி திரைப்படத்தை காண ரசிகர்கள் ஆர்வம் காண்பித்து வருகிறார்கள். மேலும் திரையரங்குகளில் விழாகோலம் போல ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.

    • விஜய் சேதுபதி தற்போது இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் டி.எஸ்.பி படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படத்தின் செய்தியாளகர் சந்திப்பில் திரையுலகினர் பலரும் கலந்துக் கொண்டனர்.

    விஜய்சேதுபதி நடிப்பில் விக்ரம், மாமனிதன் படங்கள் அடுத்தடுத்து வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. மேலும் 3 இந்தி படங்கள், ஒரு தெலுங்கு படம் கைவசம் உள்ளன. தற்போது தமிழில் பொன்ராம் இயக்கத்தில் கார்த்திகேயன் சந்தானம் தயாரித்துள்ள 'டி.எஸ்.பி' படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அனு கீர்த்தி நாயகியாக நடித்துள்ளார். இப்படம் டிசம்பர் 2-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

     

    விஜய் சேதுபதி - டி.எஸ்.பி

    விஜய் சேதுபதி - டி.எஸ்.பி

    இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் விஜய்சேதுபதி கூறும்போது, "நான் வணிக படங்களில் அதிகமாக நடிப்பது இல்லை. பொன்ராம் இயக்கும் படத்தில் நடிப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. ஆனால் அவர் சொன்ன கதை என்னை ஈர்த்தது. என்னை முழுவதுமாக மாற்றி விட்டார். இந்த படத்தில் நடித்தது எனக்கு புது அனுபவமாக இருந்தது. கமல்ஹாசன் என்னை வாழ்த்தியது மகிழ்ச்சியாக உள்ளது. சினிமாவில் எதை புதுமையாக செய்ய நினைத்தாலும் அதற்கு பெரிய ஊக்கமாக கமல்ஹாசன் இருக்கிறார். அவர் செய்த சாதனைகள் இன்னும் பல தலைமுறைகள் கடந்தும் பேசப்படும். சினிமாவில் சாதிக்க பலருக்கும் ஊக்கமாக இருக்கிறார்" என்றார்.

    ×