search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜோதிராதித்யா சிந்தியா"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மத்திய பிரதேசத்தில் நவம்பர் 17-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
    • அங்கு ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ், பா.ஜ.க. கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

    போபால்:

    மத்திய பிரதேசம் மாநிலத்தில் நவம்பர் 17-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

    இந்நிலையில், விமானப் போக்குவரத்துத் துறை மந்திரி ஜோதிராதித்யா சிந்தியா, முதல் மந்திரி பதவிக்கான போட்டியில் நான் இல்லை என தெரிவித்தார்.

    இதுதொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்திற்கு சிந்தியா அளித்துள்ள பேட்டியில், காங்கிரசிடம் அதிகாரத்திற்காக போட்டியிடுபவர்கள் உள்ளனர், அவர்களுக்கு குழுக்கள் உள்ளன, அவர்கள் முதலமைச்சராக திட்டம் தீட்டுகிறார்கள். தேர்தலுக்கு முன் காங்கிரசிடம் முதல் மந்திரி என்று கூறிக்கொள்ளும் 8 தலைவர்கள் உள்ளனர்.

    பா.ஜ.க. என்பது தொண்டர்களின் கட்சி. நாம் அனைவரும் காரியகர்த்தாக்கள், அப்படியே இருப்போம். மத்தியப் பிரதேசத்தில் ஒட்டுமொத்த பா.ஜ.க.வும் பிரதமர் தலைமையில் தேர்தலில் போராடுகிறது. நான் இந்தப் போட்டியில் (முதல் மந்திரி பதவிக்கு) இல்லை. நான் ஒரு சேவகன். நான் பந்தயத்தில் இல்லை என தெரிவித்தார்.

    • காங்கிரஸ் உள்கட்சி நிலைமை தெளிவாக வெளியே தெரிகிறது.
    • காங்கிரசுடனான 50 ஆண்டுகால தொடர்பை முடித்துக் கொண்டுள்ளார்.

    குவாலியர்:

    காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த ஜோதிராதித்யா சிந்தியா விமானப் போக்குவரத்து அமைச்சராக பொறுப்பு வகித்து வருகிறார். மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் வெள்ளம் பாதித்த பகுதிகளை இன்று அவர் பார்வையிட்டார். முன்னதாக அவரிடம் குலாம்நபி ஆசாத் காங்கிரசில் இருந்து விலகியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர்.

    அதற்கு பதில் அளித்த அவர், காங்கிரசில் உள்கட்சி நிலைமை பல ஆண்டுகளாக தெளிவாக வெளியே தெரிகிறது என்றார். மூத்த தலைவரான ஆசாத், காங்கிரசுடனான தனது 50 ஆண்டு கால தொடர்பை முடித்துக் கொண்டு அதில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

    ×