search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செவித்திறன்"

    • காவல் துறை தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 515 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன.
    • மாணவன் விக்கி மாவட்ட கலெக்டரிடம் விருதுகளை காண்பித்து வாழ்த்துகளை பெற்றார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில், மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமையில் மக்கள்குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முதியோர்உதவித்தொகை, வீட்டுமனை பட்டாக் கோருதல், விதவை உதவித்தொகை, சாலை வசதி, ஆதரவற்றோர் உதவித்தொகை, பாட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனுதவி கோருதல், ஏரி, குளம் தூர் வாருதல், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், நில அளவை தொடர்பான மனுக்கள், வேளாண் உழவர் நலத்துறை சார்ந்த திட்டம் மற்றும் காவல் துறை தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 515 மனுக்கள் பொதுமக்க ளிடமிருந்து பெறப்பட்டன.

    இதேபோல் மாற்றுத்திற னாளிகளிடமிருந்து 31 மனுக்களும்என மொத்தம் 546 மனுக்கள் தொடர்புடைய அலுவலர்களுக்கு அனுப் பப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார். தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள தேவபாண்ட லம் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் விக்கி 1 கிலோ மீட்டர் முட்டி போட்டுக் கொண்டு12.36 நிமிடத்தில் 2 கைகளிலும் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்து, வேல்ட் புக் ஆப்ரெக்கார்ட் நிறுவனம் உலக சாதனை விருது வழங்கியதை தொடர்ந்து, மாணவன் விக்கி மாவட்ட கலெக்டரிடம் விருதுகளை காண்பித்து வாழ்த்துகளை பெற்றார்.

    சின்னசேலம் வட்டம் எருக்கம்பட்டு கிராமத்தை சேர்ந்த ராஜா 14.9.2021 அன்று ஆதிதிராவிடர் அல்லாத பிற இனத்தவரால் வன்கொடுமைக்கு ஆளாக் கப்பட்டு இறந்ததை தொடர்ந்து, அவருடைய மனை விபிரியா வுக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1995 திருத்தவிதிகள் 2016 பிரிவு 46(1)ன் கீழ் மேல்வாழப்பாடி அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட நடுநிலைப் பள்ளி யில் காலியாக உள்ள சமை யலர் பணிக்கான ஆணை யினையும், மாற்றுத்திற னாளிநலத்துறை சார்பில் செவித்திறன் குறை யுடை யோருக்கு காதொலி கருவி 3 ேபர்களுக்கு தலா ரூ.4ஆயிரம் மதிப்பீட்டிலும் வழங்கினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்திய நாராயணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், கலெக்டரின் நேர்முகஉதவியாளர் (வேளாண்மை) விஜயராக வன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கவியரசு, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்பிரமணி, தனித்துணைகலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ராஜலட்சுமி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் தியாகராஜன், அனைத்துத் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள்கலந்து கொண்டனர்.

    • ஈரோடு மாவட்ட செவித்திறன் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் காத்திருக்கப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இதையடுத்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் துறை நல அலுவலர் பூங்கோதை அங்கு வந்து அவர்களிடம் கோரிக்கை குறித்து விசாரித்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட செவித்திறன் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் சங்கத்தின் தலைவர் மோகன்குமார் தலைமையில் 200-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்தனர்.

    அவர்கள் அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்பில் ஒரு சதவீதம் வேலை வழங்க வேண்டும். வறுமை கோட்டின் கீழ் உள்ள எங்களுக்கு தொகுப்பு வீடு வழங்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் வழங்க முகாம் அமைக்க வேண்டும். மாதாந்திர உதவி தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்.

    வாரிசு அடிப்படையில் காது கேளாத மாற்றுத்தி றனாளிகளுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும். ஆவின் பாலகம் அமைத்து கொடுக்க வேண்டும். அனைத்து அரசு அலுவலகங்கள் கல்வி நிறுவனங்களில் சைகை மொழியை அமல்படுத்தி அரசாணை வெளியிட வேண்டும்.

    அனைத்து கல்வி நிறுவனங்களில் அனுபவம் மிக்க சைகை மொழி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகங்களில் அனுபவம் வாய்ந்த சைகை மொழி பெயர்ப்பாளரை நியமிக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி காத்திருக்கப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் துறை நல அலுவலர் பூங்கோதை அங்கு வந்து அவர்களிடம் கோரிக்கை குறித்து விசாரித்தார்.

    அப்போது கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கலெக்டர் அலுவலகத்திற்கு காரில் வந்து இறங்கினார். அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த செவித்திறன் குன்றிய மாற்றுத்திறனாளிகளை சந்தித்து கோரிக்கை குறித்து கேட்டு அறிந்தார். தொடர்ந்து அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் அமர்ந்து உள்ளனர்.

    ×