search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை மெரினா"

    • மெரினா கடற்கரையில் நள்ளிரவு 1 மணி வரை பொது மக்களுக்கு அனுமதி.
    • சென்னை கடற்கரை சாலையில் வாகன போக்குவரத்துக்கு தடை.

    புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக சென்னை கடற்கரையில் பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். குறிப்பாக, மெரினா, எலியட்ஸ் உள்ளிட்ட கடற்கரையில் புத்தாண்டை கொண்டாடுவதற்காக பொது மக்களின் வருகை அதிகரித்து வருகிறது.

    மெரினா கடற்கரையில் நள்ளிரவு 1 மணி வரை பொது மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டை கொண்டாட பொது மக்கள் கூட்டம் கூட்டமாக கடற்கரைகளுக்கு திரண்டுள்ளனர்.

    சென்னை கடற்கரை சாலையில் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரை சாலைக்குள் நுழையும் அனைவரையும் காவல்துறையினர் சோதனை செய்கின்றனர்

    கடற்கரை சாலையில் பாதுகாப்பு பணியில் நூற்றுக் கணக்கில் குவிக்கப்பட்டுள்ளனர்.நகரம் முழுவதும் போக்குவரத்து நெரிசல்- சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கடற்கரை சாலையில் சுற்றுலா துறை சார்பில் கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    நாளை மாலை 6 மணி வரை போர் நினைவிடம் முதல் கலங்கரை விளக்கம் வரை சாலைகள் மூடப்பட்டுள்ளது. பெசன்ட் நகர் கடற்கரையில் ஆறாவது அவென்யூ சாலையும் மூடப்பட்டது.

    சென்னை மெரினா கடற்கரையில் ஜெயலலிதா நினைவிடம் கட்டுவதற்கு எதிரான வழக்கில் இருந்து நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் விலகியதால் வேறு அமர்வுக்கு மாற்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளது. #Jayalalithaa
    சென்னை:

    சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா சமாதியில் ரூ.50 கோடி செலவில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. இதை எதிர்த்து தேசிய மக்கள் கட்சித் தலைவர் எம்.எல்.ரவி, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனுவை நீதிபதி மணிக்குமார், நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு விசாரணை செய்து வந்தது. இன்று வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாக கூறினார். 

    இதனை அடுத்து, வழக்கை வேறு அமர்வுக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு, நீதிபதிகள் பரிந்துரைத்தனர்.
    ×