search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுழற்கோப்பை"

    • மதுரையில் கலைஞர் நூற்றாண்டு விழா கிரிக்கெட் போட்டி நடந்தது
    • வெற்றி பெற்ற அணிக்கு கவுன்சிலர் காளிதாஸ் சுழற் கோப்பை வழங்கினார்.

    மதுரை

    மதுரை பாண்டி கோவில் அருகே சுற்றுச்சாலையில் உள்ள கலைஞர் திடலில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா மற்றும் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விழாவை முன்னிட்டு மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் மதுரை மாவட்டத்தில் உள்ள 32 அணிகள் மோதின. இதில் முதல் பரிசினை மதுரை காமராஜர்புரம் ரேயான்சிசி அணி வெற்றி பெற்றது.

    இந்த அணிக்கு கவுன்சிலர் காளிதாஸ் சுழல் கோப்பை மற்றும் ரொக்க பரிசினை வழங்கினார். இதனையடுத்து 2-வது பரிசாக மதுரை ஒத்தக்கடை ஸ்போர்ட்ஸ் வேர்டு அணியும், 3-வது பரிசினை ஏ.பி.டி. பாய்ஸ் அணியும், 4-வது பரிசினை மதுரை அரசரடி யு.சி.வார்யர்ஸ் அணி வென்றது. முன்னதாக போட்டியை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மணிமாறன் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். இதில் பாலா, உதயா, கார்த்திக், முத்துமணி, வழக்கறிஞர் மகேந்திரன், நாகேந்திரன், முகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழக சுற்றுலா அமைச்சர். கா.ராமசந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
    • ஜே.எஸ்.எஸ் கல்லூரிக்கு சுழற் கோப்பை வழங்கப்பட்டது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி தாவரவியல் பூங்காவில் 125-வது மலர் கண்காட்டி கடந்த 19-ந்தேதி தொடங்கியது.

    இது 5 நாட்கள் தொடர்ந்து நடந்தது. இந்த நிலையில் ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நிறைவு விழா நேற்று நடந்தது.

    இதில் மாவட்ட கலெக்டர்அம்ரித் தலைமை தாங்கினார். தமிழக சுற்றுலா அமைச்சர். கா.ராமசந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

    ஊட்டி மலர் கண்காட்சி நிறைவு விழா நிகழ்ச்சியில் சிறந்த மருத்துவ செடிகள் வளர்ப்புக்காக, ஜே.எஸ்.எஸ் கல்லூரிக்கு சுழற் கோப்பை வழங்கப்பட்டது. இதனை கல்லூரி பேராசிரியர்கள் சண்முகம், ராமு ஆகியோர் பெற்று கொண்டனர்.

    • 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களிலிருந்து 436 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • மாணவ- மாணவிகளுக்கு சுழற்கோப்பை உட்பட 230 வகையான பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கல்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த கருப்பம்புலம் அகரம் மெட்ரிக் பள்ளியில் வாய்மேடு இலக்குவனார் சதுரங்க பயிற்சி மையம், நாகை மாவட்ட சதுரங்க கழகம் ஆகியவற்றின் சார்பில் மாநில அளவிலான சதுரங்க போட்டி நடந்தது.

    இதில் தஞ்சை, நாகை, திருவாரூர், தேனி உட்பட 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து 9 முதல் 19 வயது வரையிலான 436 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 10 பிரிவுகளில் நடந்த போட்டிகளை அகரம் மெட்ரிக் பள்ளி நிறுவனரும், முன்னாள் எம்.பி.யுமான பி.வி.ராஜேந்திரன் தொடக்கி வைத்தார்.

    போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சுழற்கோப்பை உட்பட 230 வகையான பரிசுகள், சான்றிதழ்களை பள்ளி செயலாளர் மகேஸ்வரி விவேக் வெங்கட்ராமன், வேதநாயகி, ராஜேந்திரன் ஆகியோர் வழங்கினர்.

    செஸ் கழக மாநில இணை செயலாளர் பாலகுணசேகரன், தலைவா் விஜயன், செயலாளர் சுந்தர்ராஜ், பொருளாளர் அருண்குமார் உட்பட பயிற்சியாளர்கள் நடுவர்களாக இருந்து போட்டியை நடத்தினர்.

    அகரம் பள்ளி முதல்வர் வெற்றிச்செல்வி வரவேற்றார். செஸ் கழக இணை செயலர் மணிமொழி நன்றி கூறினார்.

    • பெண்கள் பிரிவில் 12 அணிகளும், ஆண்கள் பிரிவில் 28 அணிகளும் பங்குபெற்றனர்.
    • போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அடுத்த நாடியம் ஊடையகாடு கிராமத்தில் முத்துமாரி அம்மன் கோவில் திடலில் ராகவன் நினைவாக மாபெரும் ஆண்கள் மற்றும் பெண்கள் கபடி போட்டி நடைபெற்றது. போட்டியில் பெண்கள் பிரிவில் 12 அணிகளும், ஆண்கள் பிரிவில் 28 அணிகளும் பங்குபெற்றனர். போட்டியை நிமல் ராகவன் ஒருங்கிணைத்து நடத்தினார். போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.

    ஆண்கள் கபடி போட்டியில் முதல் பரிசை திருவாரூர் மாவட்டம் வடுவூர் அணியினரும், 2-ம் பரிசை ராமநாதபுரம் மாவட்டம் முல்லை வெண்புறா அணியும், 3-ம் பரிசை ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைகுடி அணியும், 4-ம் பரிசை ராமநாதபுரம் மாவட்டம் பாசிப்பட்டினம் அணியினரும் வென்று பரிசு மற்றும் சுழற்கோப்பைகள் பெற்றனர்.

    இதேபோல, பெண்கள் கபடி போட்டியில் முதல் பரிசை மதுரை மாவட்டம் சித்தம்பட்டி அணியினரும், 2-ம் பரிசை கட்டகுடி ஸ்போர்ட்ஸ் கிளப் அணியினரும், 3-ம் பரிசை தஞ்சை மாவட்டம் தென்னமநாடு தென்னவன் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியினரும், 4-ம் பரிசை திருவாரூர் மாவட்டம் நன்னிலம் செல்வம் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியினரும் வென்று பரிசு மற்றும் சுழற்கோப்பை பெற்றனர். நிறைவாக முன்னாள் மாநில கபடி வீரர் வெண்புறா சடகோபன் நன்றி கூறினார்.

    • கபடி போட்டியில் தஞ்சை,நாகை,திருவாரூர் மயிலாடுதுறை,காரைக்காலில் இருந்து 30-க்கும் மேற்பட்ட அணிகள் பங்குபெற்றனர்.
    • வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுதொகையும்,சுழற்கோப்பையும் வழங்கபட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா வடமழை மணக்காட்டில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி 99-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வடமழை மா.சு.மணிநினைவு கபாடி கழகம் நடத்திய கபடி போட்டி நடைபெற்றது. போட்டியினை தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் தொடக்கி வைத்தார். தி.மு.க. கிளை செயலாளர் செந்தில் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில்தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் சதாசிவம்உள்ளிட்ட ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். கபடி போட்டியில் தஞ்சை,நாகை,திருவாரூர் மயிலாடுதுறை,காரைக்காலில் இருந்து 30-க்கும் மேற்பட்ட அணிகள் பங்குபெற்றனர்.

    போட்டிகளில் முதல் பரிசு ரூ. 30,099 நாகப்பட்டினம் அணியினரும், இரண்டாவது பரிசு ரூ. 25,099 ஆறுகாட்டுத்துறை அணியினரும், மூன்றாவது பரிசு ரூ. 20,099 வடமழை மா.சு.மணி நினைவு கபாடி கழகத்தினரும், நான்காம் பரிசு ரூ. 15,099 அக்கரைப்பேட்டை அணியிணரும் பெற்றனர். வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுத் தொகையோடு சுழற்கோப்பையும் வழங்கபட்டது. விழாவின் முடிவில் கவி இளவரசன் நன்றி கூறினார்.

    ×