search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுத்தப்படுத்தும் பணி"

    டெங்கு, பன்றிக்காய்ச்சலை தடுக்க சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் சுகாதாரத்தை பேணும் வகையில் நாளை சுத்தப்படுத்தும் பணி நடைபெற உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். #Dengue #Swineflu #MinisterVijayabaskar
    சென்னை:

    தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை தலைமை செயலகத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    பன்றிக்காய்ச்சல், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை அழைத்து விரிவாக ஆலோசித்தார்.



    இதைத் தொடர்ந்து சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் சுகாதாரத்தை பேணும் வகையில் சுத்தப்படுத்தும் பணி நடைபெற உள்ளது. ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்களும் நாளை ஒவ்வொரு தொகுதிக்கும் சென்று ஆய்வு செய்கின்றனர். காய்ச்சலுக்காக சிகிச்சை அளிக்கப்படும் சிறப்பு வார்டுகளையும் ஆய்வு செய்கின்றனர். நடமாடும் மருத்துவ குழுக்கள் மூலமும் கிராமம் கிராமமாக கண்காணிக்க உள்ளனர்.

    டெங்கு, பன்றிக்காய்ச்சலை குணப்படுத்தக்கூடிய மாத்திரைகள் அரசு ஆஸ்பத்திரிகளில் தேவையான அளவு உள்ளது. எனவே காய்ச்சல் வந்தால் உடனடியாக சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

    தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ஏற்கெனவே 17 விருதுகள் கிடைத்துள்ளன. இப்போது மேலும் 2 விருதுகள் கிடைத்துள்ளது. தாய்-சேய் நலம் மற்றும் முதல்-அமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக டெல்லியில் விருது வழங்கப்பட்டது. அதை முதல்-அமைச்சரிடம் வழங்கி இன்று வாழ்த்து பெற்றோம்.

    இதே போல் சுகாதாரம், குடிநீர், மருத்துவ செயல்பாடு உள்ளிட்ட 34 அளவீடுகளை கொண்டு கணக்கிட்டதில் இந்திய அளவில் நாகை மாவட்டம் தேர்ந்தெடுக்கப்பட்டு நிதி ஆயோக் துணைத்தலைவர் கையால் நாகை கலெக்டர் விருது பெற்றுள்ளார். இதற்காக ரூ.2 லட்சத்துக்கான காசோலையும், நினைவு பரிசும் கிடைத்துள்ளது. இதன் மூலம் மக்கள் நல்வாழ்வுத்துறை 19 விருதுகளை பெற்றுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #Dengue #Swineflu #MinisterVijayabaskar

    விழுப்புரம் பணிமனையில் தண்டவாளத்தை சுத்தப்படுத்தும் பணி நடைபெறுவதால் இன்று (செவ்வாய்க்கிழமை), நாளை மற்றும் நாளை மறுநாள் கீழ்க்கண்ட ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #SouthernRailway
    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    விழுப்புரம் பணிமனையில் தண்டவாளத்தை சுத்தப்படுத்தும் பணி நடைபெறுவதால் இன்று (செவ்வாய்க்கிழமை), நாளை (புதன்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) கீழ்க்கண்ட ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    * சென்னை எழும்பூர்-புதுச்சேரி-எழும்பூர் பயணிகள் ரெயில் (வண்டி எண்:56037/56038), திண்டிவனம்-புதுச்சேரி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    * திருப்பதி-புதுச்சேரி-திருப்பதி பயணிகள் ரெயில் (56041/56042), திண்டிவனம்-புதுச்சேரி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    * எழும்பூர்-மதுரை வைகை எக்ஸ்பிரஸ் (12635), மதியம் 1.40 மணிக்கு புறப்படும் ரெயில், 2 மணி நேரம் தாமதமாக 3.40 மணிக்கு இன்று எழும்பூரில் இருந்து புறப்படும்.

    * எழும்பூர்-காரைக்குடி பல்லவன் எக்ஸ்பிரஸ் (12605), மதியம் 3.45 மணிக்கு புறப்படும் ரெயில், 30 நிமிடம் தாமதமாக 4.15 மணிக்கு இன்று எழும்பூரில் இருந்து புறப்படும்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. #Tamilnews 
    ×