என் மலர்
நீங்கள் தேடியது "rail service change"
- புத்தாண்டை முன்னிட்டு, புறநகர் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- நாளை ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயங்கும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
சென்னை:
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்குச் செல்லும் லட்சக்கணக்கான பயணிகள் தினமும் ரெயில் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர்.
சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, வேளச்சேரி, கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட வழித்தடங்களில் நாள்தோறும் புறநகர் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ரெயில் சேவையை மாற்றம் செய்து ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் சென்னை சென்ட்ரல்-அரக்கோணம், சென்னை சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி/சூலூர்பேட்டை மற்றும் சென்னை கடற்கரை-செங்கல்பட்டு பிரிவுகளில் புறநகர் ரெயில் சேவைகள் நாளை ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயங்கும் என தெரிவித்துள்ளது.
விழுப்புரம் பணிமனையில் தண்டவாளத்தை சுத்தப்படுத்தும் பணி நடைபெறுவதால் இன்று (செவ்வாய்க்கிழமை), நாளை மற்றும் நாளை மறுநாள் கீழ்க்கண்ட ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #SouthernRailway
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
விழுப்புரம் பணிமனையில் தண்டவாளத்தை சுத்தப்படுத்தும் பணி நடைபெறுவதால் இன்று (செவ்வாய்க்கிழமை), நாளை (புதன்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) கீழ்க்கண்ட ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
* சென்னை எழும்பூர்-புதுச்சேரி-எழும்பூர் பயணிகள் ரெயில் (வண்டி எண்:56037/56038), திண்டிவனம்-புதுச்சேரி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
* திருப்பதி-புதுச்சேரி-திருப்பதி பயணிகள் ரெயில் (56041/56042), திண்டிவனம்-புதுச்சேரி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
* எழும்பூர்-மதுரை வைகை எக்ஸ்பிரஸ் (12635), மதியம் 1.40 மணிக்கு புறப்படும் ரெயில், 2 மணி நேரம் தாமதமாக 3.40 மணிக்கு இன்று எழும்பூரில் இருந்து புறப்படும்.
* எழும்பூர்-காரைக்குடி பல்லவன் எக்ஸ்பிரஸ் (12605), மதியம் 3.45 மணிக்கு புறப்படும் ரெயில், 30 நிமிடம் தாமதமாக 4.15 மணிக்கு இன்று எழும்பூரில் இருந்து புறப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. #Tamilnews
தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
விழுப்புரம் பணிமனையில் தண்டவாளத்தை சுத்தப்படுத்தும் பணி நடைபெறுவதால் இன்று (செவ்வாய்க்கிழமை), நாளை (புதன்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) கீழ்க்கண்ட ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
* சென்னை எழும்பூர்-புதுச்சேரி-எழும்பூர் பயணிகள் ரெயில் (வண்டி எண்:56037/56038), திண்டிவனம்-புதுச்சேரி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
* திருப்பதி-புதுச்சேரி-திருப்பதி பயணிகள் ரெயில் (56041/56042), திண்டிவனம்-புதுச்சேரி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
* எழும்பூர்-மதுரை வைகை எக்ஸ்பிரஸ் (12635), மதியம் 1.40 மணிக்கு புறப்படும் ரெயில், 2 மணி நேரம் தாமதமாக 3.40 மணிக்கு இன்று எழும்பூரில் இருந்து புறப்படும்.
* எழும்பூர்-காரைக்குடி பல்லவன் எக்ஸ்பிரஸ் (12605), மதியம் 3.45 மணிக்கு புறப்படும் ரெயில், 30 நிமிடம் தாமதமாக 4.15 மணிக்கு இன்று எழும்பூரில் இருந்து புறப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. #Tamilnews






