search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிவன் கோவிலில்"

    • கந்தர்வகோட்டைசிவன் கோவிலில் பாலாலயம்
    • விழாவை முன்னிட்டு சிறப்பு யாகங்களும் வழிபாடுகளும் கோவில் குருக்கள் சுரேஷ் சிவாச்சாரியார் தலைமையில் நடைபெற்றது.

    கந்தர்வகோட்டை,  

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அமராவதி உடனுறை ஆபத் சகா ஈஸ்வரர் கோவில் விமான கோபுர கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கோவில் வளாகத்தில் பாலாலய விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு சிறப்பு யாகங்களும் வழிபாடுகளும் கோவில் குருக்கள் சுரேஷ் சிவாச்சாரியார் தலைமையில் நடைபெற்றது. விழாவில் கந்தர்வகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ராஜா, கவிதா சிவா மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    வேலாயுதம்பாளையம் சிவன் கோவில்களில் நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேக - ஆராதனை

    வேலாயுதம்பாளையம், 

    கரூர் மாவட்டம் திருக்காடுதுறையில் உள்ள மாதேஸ்வரி அம்பிகை உடனுறை மாதேஸ்வரன் கோவிலில் உள்ள நந்தி பெருமானுக்கும், தவுட்டுப்பாளையம் அருகே நன்செய் புகளூரில் உள்ள பாகவல்லிஅம்பிகை சமேத மேகபாலீஸ்வரர் கோவிலில் உள்ள நந்தி பெருமானுக்கும், புரட்டாசி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி, மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், கரும்புச்சாறு, விபூதி உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுவாமி ரிஷப வாகனத்தில் கோவிலை மூன்று முறை வலம் வந்தார். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் நந்தி பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    அதேபோல் புன்னம் சத்திரம் அருகே புன்னம் பகுதியில் உள்ள புன்னைவனநாதர் உடனுறை புன்னைவன நாயகி கோவிலில் உள்ள நந்தி பெருமான் , செங்கல் மலை ஈஸ்வரன் கோவில்,குந்தாணிபாளையம் நத்தமேடு ஈஸ்வரன் கோவிலில் உள்ள நந்தி பெருமான் மற்றும் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் சிவன் கோவில்களில் புரட்டாசி மாத வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பெருமான் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
    • சுவாமி மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் சனி மகா பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் மற்றும் நந்தியம்பெருமானுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமி மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதைத்தொடர்ந்து பிரதோஷ நாயகர்கள் அலங்கரிக்கப்பட்டு திருமுறைகள், சிவபுராணம் முழங்க கோவிலில் பிரகார பிரதட்சணம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பிரதோஷ வழிபாட்டு குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர். இதேபோல் தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி சவுந்திரநாயகி அம்மன் உடனுறை பசுபதீஸ்வரர் கோவில், கோடாலி கருப்பூர் மீனாட்சி அம்மன் உடனுறை சொக்கநாதர் கோவில், நாயகனைப்பிரியாள் மரகதவல்லி தாயார் உடனுறை மார்க்க சகாயேஸ்வரர் கோவில், மதனத்தூர் ராமலிங்கேஸ்வரர் கோவில், அருள்மொழி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்களில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    சிவன் கோவிலில் பைரவாஷ்டமி வழிபாடு நடைபெற்றது

    அரியலூர்:

    அரியலூர் அரியலூர் மாவட்டம், தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவாஷ்டமி வழிபாடு நடைபெற்றது.

    பைரவாஷ்டமியை முன்னிட்டு விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன், கால பைரவர் ஆகிய தெய்வங்களுக்கு மஞ்சள் பொடி, மாப்பொடி, வில்வப்பொடி, அருகம்புல் பொடி, நெல்லி முள்ளி பொடி, சந்தனம், பன்னீர், பஞ்சாமிர்தம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சுவாமி, அம்பாள், பைரவர் பக்தர்களுக்கு அருள்பாலித்து காட்சி தந்தனர். பின்னர் பைரவருக்கு ஷோடச உபசாரங்கள் நடைபெற்றன. தொடர்ந்து மங்கள ஆரத்தி நடைபெற்றது. பைரவருக்கு சிவபுராணம் பைரவாஷ்டோத்திரம் உள்ளிட்ட பல்வேறு பதிகங்களை பாடி பக்தர்கள் வழிபாடு செய்தனர். பைரவருக்கு வடை மாலை அணிவித்து வழிபாடு செய்யப்பட்டது. பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை பைரவர் வழிபாட்டு குழுவினர் செய்திருந்தனர்.

    • சிவன் கோவில்களில் பைரவ வழிபாடு நடைபெற்றது
    • 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது

    கரூர்:

    கரூர் தவிட்டுப்பாளையம் அருகே நன்செய் புகழூரில் உள்ள மேகபாலீஸ்வரர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. வேலாயுதம்பாளையம் அருகே தோட்டக்குறிச்சியில் சேங்கல் மலை அடிவாரத்தில் பிரசித்தி பெற்ற பைரவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் தேய் பிறை அஷ்டமியையொட்டி பைரவருக்கு பால், தயிர், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதேபோல் நொய்யல், வேலாயுதம் பாளையம் பகுதிகளில் உள்ள அனைத்து சிவன்கோவில்களிலும் உள்ள காலபைரவருக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    • சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது
    • 8 வகையான வாசனை திரவியங்களால் நடைபெற்றது

    கரூர்

    தவுட்டுப்பாளையம் அருகே நன்செய் புகழூரில் உள்ள மேக பாலீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    இதேபோல் வேலாயுதம்பாளையம் அருகே காகிதபுரம் குடியிருப்பு காசிவிஸ்வநாதர் கோவிலில் உள்ள நந்திபகவானுக்கும், பால், பழம், விபூதி, சந்தனம் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல் நொய்யல், வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவன்கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.

    • சிவன் கோவிலில் ஆடி மாத பிரதோஷ விழா நடைபெற்றது
    • 18 வகையான மூலிகைகளால் அபிஷேக ஆராதனை

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழம் பெருமை வாய்ந்த புகழ்பெற்ற பெரிய நாயகி அம்பாளுடன் உரை அரங்குலநாதர் சோழர் காலத்து சுயம்புலிங்க சிவன் கோயில் உள்ளது. கோவிலில் ஆடி மாத பிரதோஷ விழாவை முன்னிட்டு சிவன் சன்னதியில் உள்ள நந்தி பகவானுக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள் திரவிய பொடி உள்ளிட்ட 18 வகையான மூலிகைகளால் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு, பல்வேறு பூக்களால் அலங்காரம் செய்து மூலஸ் தானத்தில் உள்ள சுயம்புலிங்க சிவபெருமான், பெரி யநாயகி அம்பாளுக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க தீபாராதனை காண்பித்து காலை வாகனத்தில் எழுந்தரு செய்து, பக்தர்கள் சிவ சிவ ஹர ஹர கோசத்துடன் மூன்று முறை பிரகார உலா நடைபெற்றது. தொடர்ந்து நந்தி பகவானுக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மகா தீபம் காட்டினர்.

    நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதேபோல் காசிக்கு வீசம் கூட என் று அழைக்கப்படும் திருவுடையார்பட்டி திருமூலநாதர் திரிபுரசுந்தரி அம்பாள் கோவில் திருக்கட்டளை சோம சுந்தரேஸ்வரர் மங்களநாயகம் கோவில் பாழையூர் பழங்கரை புராதன ஈஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிரதோஷ விழா நடைபெற்றது .

    ×