சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது8 வகையான வாசனை திரவியங்களால் நடைபெற்றது
சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
Published on

கரூர்

தவுட்டுப்பாளையம் அருகே நன்செய் புகழூரில் உள்ள மேக பாலீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

இதேபோல் வேலாயுதம்பாளையம் அருகே காகிதபுரம் குடியிருப்பு காசிவிஸ்வநாதர் கோவிலில் உள்ள நந்திபகவானுக்கும், பால், பழம், விபூதி, சந்தனம் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் நொய்யல், வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவன்கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com