search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சதாப் கான்"

    செஞ்சூரியனில் நடைபெற்ற தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான கடைசி டி20 போட்டியில் பாகிஸ்தான் 27 ரன் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. #SAvPAK
    தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வந்தது. முதல் இரண்டு ஆட்டத்திலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று செஞ்சூரியனில் நடைபெற்றது.

    டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்கள் பாபர் ஆசம் (23), பகர் சமான் (17) ஓரளவு ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த முகமது ரிஸ்வான் 26 ரன்களும், கேப்டன் சோயிப் மாலிக் 18 ரன்களும் சேர்த்தனர்.

    சுழற்பந்து வீச்சாளர் சதாப் கான் 8 பந்தில் 3 சிக்சருடன் 22 ரன்கள் விளாச, பாகிஸ்தான் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் சேர்த்தது. தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் ஹென்ரிக்ஸ் 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    பின்னர் 169 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் ஹென்ரிக்ஸ் (5), மலன் (2) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த டஸ்சன் 35 பந்தில் 41 ரன்கள் சேர்த்தார்.


    டஸ்சன்

    அதன்பின் முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஆல்-ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் 29 பந்தில் 55 ரன்கள் விளாசினாலும், தென்ஆப்பிரிக்காவால் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.

    இதனால் பாகிஸ்தான் 27 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணி சார்பில் முகமது அமிர் 3 விக்கெட்டும் சதாப் கான், பஹீம் அஷ்ரப் தலா இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினர்.
    அபு தாபியில் நடைபெற்று வரும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு 267 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து. #PAKvNZ
    பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி அபு தாபியில் நடைபெற்று வருகிறது. நியூசிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. ஜார்க் வொர்க்கர், கொலின் முன்றோ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். வொர்க்கர் 1 ரன்னிலும், கொலின் முன்றோ 29 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    அதன்பின் வந்த கேப்டன் கேன் வில்லியம்சன் 27 ரன்கள் எடுத்த நிலையில் சதாப் கான் பந்தில் வெளியேறினார். இதனால் நியூசிலாந்து 78 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டை இழந்தது. 4-வது விக்கெட்டுக்கு ராஸ் டெய்லர் உடன் விக்கெட் கீப்பர் டாம் லாதம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நியூசிலாந்தை சரிவில் இருந்து மீட்டது. இருவரும் அரைசதம் கடந்தனர்.

    நியூசிலாந்து அணி 41.2 ஓவரில் 208 ரன்கள் எடுத்திருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. டாம் லாதம் 64 பந்தில் 68 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். இதே ஓவரில் நிக்கோல்ஸ் (0), கொலின் டி கிராண்ட்ஹோம் (0) ஆகியோரை சதாப் கான் வீழ்த்தினார். அடுத்த ஒவரில் ராஸ் டெய்லர் 80 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.



    இதனால் 4 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்திருந்த நியூசிலாந்து 210 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுக்களை இழந்தது. அதன்பின் வந்த டிம் சவுத்தி (20), இஷ் சோதி (24) ரன்கள் அடிக்க நியூசிலாந்து 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 266 ரன்கள் குவித்தது. ஷஹீன் அப்ரிடீ, சதாப் கான் ஆகியோர் தலா நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

    பின்னர் 267 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் பேட்டிங் செய்து வருகிறது.
    ஆசிய கோப்பையில் இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது. பாகிஸ்தான் அணியில் முகமது அமிர் சேர்க்கப்பட்டுள்ளார். #AsiaCup2018 #INDvPAK
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் தற்போது ‘சூப்பர் 4’ சுற்று நடைபெற்று வருகிறது. இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. துபாயில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார். இந்திய அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. பாகிஸ்தான் அணியில் முகமது அமிர், சதாப் கான் சேர்க்கப்பட்டுள்ளனர்.
    ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஹாங் காங் அணி 116 ரன்னில் சுருண்டது #AsiaCup2018 #HKvPAK #PAKvHK
    இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங் காங் அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் நேற்று (15.09.2018) ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொடங்கியது. தொடக்க ஆட்டத்தில் வங்காள தேசம் இலங்கையை வீழ்த்தியது.

    இன்றைய 2-வது நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் - ஹாங் காங் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற ஹாங் காங் அணி கேப்டன் பேட்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி ஹாங் காங் அணியின் நிஜாகட் கான், அன்ஷுமான் ராத் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். நிஜாகட் கான் 11 பந்தில் 13 ரன்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆனார். ராத் 34 பந்தில் 19 ரன்கள் சேர்த்தார். அதன்பின் வந்த ஹயத் 7 ரன்னிலும், கார்ட்டெர் 2 ரன்னிலும் வெளியேறினார்கள்.


    ரன்அவுட் ஆகிய ஹாங் காங் தொடக்க பேட்ஸ்மேன்

    ஒரு கட்டத்தில் ஹாங் காங் 44 ரன்கள் எடுப்பதற்குள் ஐந்து விக்கெட்டுக்களை இழந்து திணறியது. 6-வது விக்கெட்டுக்க சின்சிட் ஷா உடன் ஐஜாஸ் கான் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 53 ரன்கள் எடுத்தது. ஐஜாஸ் கான் 97 ரன்கள் எடுத்திருக்கும்போது 27 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அவர் ஆட்டமிழந்ததும் அடுத்து வந்த மெக்கென்சி (0), அஃப்ஜல் (0) ரன்ஏதும் எடுக்காமல் அடுத்தடுத்தும், கின்சிட் ஷா 26 ரன்னிலும் வெளியேற ஹாங் காங் 99 ரன்களுக்குள் 9 விக்கெட்டுக்களை இழந்தது.


    சதாப் கான்

    கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த நவாஸ் (9), நதீம் அகமது (9) 17 ரன்கள் சேர்க்க ஹாங் காங் 35.1 ஓவரில் 116 எடுத்து ஆல்அவுட் ஆனது. பாகிஸ்தான் அணி சார்பில் உஸ்மான் கான் 3 விக்கெட்டும், ஹசன் அலி, சதாப் கான் தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் 117 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களம் இறங்க இருக்கிறது.
    ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் ஸ்பின்னர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்று பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது தெரிவித்துள்ளார். #AsiaCup2018
    இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம், ஆப்கானிஸ்தான், ஹாங் காங் அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற சனிக்கிழமை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தொடங்குகிறது. 19-ந்தேதி இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் நடக்கிறது. கடைசியாக இரு அணிகளும் மோதிய ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்று சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றியது.

    இந்நிலையில் ஆசிய கோப்பையில் ஸ்பின்னர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்று பாகிஸ்தான் அணி கேப்டன் சர்பிராஸ் அகமது தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சர்பிராஸ் அகமது கூறுகையில் ‘‘எங்களுடைய முன்னேற்பாடுகள் (preparation) மிகவும் சிறப்பாக உள்ளது. இந்தியா உடன் மோதுவதற்கு கிடைக்கும் ஓய்வு நாட்களை சிறப்பாக மாற்ற முயற்சி செய்வோம்.

    இந்தியாவிற்கு எதிராக நாங்கள் விளையாடும் ஒவ்வொரு போட்டியும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்தியாவிற்கு எதிரான ஆட்டம் எங்களுக்கு முதல் பெரிய ஆட்டம். அதனால் உத்வேகத்தை அதிகரிக்க முயற்சி செய்வோம். இந்தியாவிற்கு எதிராக முழுத்திறமையை வெளிப்படுத்துவோம்.



    பெரிய தொடரின்போது உத்வேகம் முக்கியமானது. உத்வேகம்தான் முக்கியமான ரோலாக இருக்கும். அணி அதிகமான நம்பிக்கையில் உள்ளது. மனஉறுதியும் சிறப்பாக உள்ளது. ஆக, முதல் போட்டியில் இருந்தே உத்வேகத்தை அதிகரித்து, அதை கடைசி வரை கொண்டு செல்வோம்.

    ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆடுகளத்தை பார்த்தீர்கள் என்றால், பொதுவாகவே ஸ்லோ பிட்ச் ஆகத்தான் இருக்கும். ஆகவே, ஸ்பின்னர்கள் முக்கிய துருப்புச் சீட்டாக இருப்பார்கள். நாங்கள் முதலில் பேட்டிங் செய்தால், 300 ரன்களுக்கு மேல் டார்கெட் நிர்ணயிக்க வேண்டும். அப்படி செய்தால், எங்களது பந்து வீச்சாளர்கள் எதிரணியை சாய்த்து விடுவார்கள்’’ என்றார்.
    4-வது ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வேயை 155-ல் சுருட்டி 244 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது பாகிஸ்தான். #ZIMvPAK #FakharZaman
    ஜிம்பாப்வே - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 4-வது ஒருநாள் போட்டி புலவாயோவில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த பாகிஸ்தான் 50 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 399 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர்கள் இமாம்-உல்-ஹக் 113 ரன்களும், பகர் சமான் 210 ரன்களும் குவித்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 42 ஓவரில் 304 ரன்கள் குவித்தது.

    பின்னர் 400 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ஜிம்பாப்வே களம் இறங்கியது. பாகிஸ்தானின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஜிம்பாப்வே அணி 155 ரன்னில் சுருண்டது.



    இந்த அணியின் டொனால்டு டிரிபானோ அதிகபட்சமாக 44 ரன்கள் சேர்த்தார். சிகும்புரா 37 ரன்களும், பீட்டர் மூர் 20 ரன்களும், மசகட்சா 22 ரன்களும் சேர்த்தனர். பாகிஸ்தான் அணி சாரபில் சுழற்பந்து வீச்சாளர் சதாப் கான் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் பாகிஸ்தான் 4-0 என முன்னிலைப் பெற்றுள்ளது. #ZIMvPAK #FakharZaman #ShadabKhan #ImamulHaq
    வரலாற்று சிறப்புமிக்க டெஸ்டில் அயர்லாந்துக்கு எதிராக பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 310 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது. #IREvPAK
    அயர்லாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் டெஸ்ட் தொடங்கியது. மழைக் காரணமாக முதல்நாள் ஆட்டம் முழுவதும் தடைபட்டது.

    நேற்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. டாஸ் வென்ற அயர்லாந்து அணி பீல்டிங் தேர்வு செய்தது. அசார் அலி, இமாம்-உல்-ஹக் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். அசார் அலி 4 ரன்னிலும், இமாம்-உல்-ஹக் 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    அதன்பின் வந்த ஹரிஸ் சோஹைல் 31 ரன்னும், ஆசாத் ஷபிக் 62 ரன்னும் எடுக்க 2-வது நாள் ஆட்டம் முடிவில் பாகிஸ்தான் 6 விக்கெட் இழப்பிற்கு 268 ரன்கள் எடுத்தது. சதாப் கான் 52 ரன்னுடனும், ஃபஹீம் அஷ்ரப் 61 ரன்னுடனும் களத்தில் நின்றிருந்தனர்.


    சதாப் கான்

    இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய சதாப் கான் 55 ரன்னிலும், பஹீம் அஷ்ரப் 83 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இவர்கள் அவுட்டானதும் பாகிஸ்தான் 9 விக்கெட் இழப்பிற்கு 310 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய அயர்லாந்துக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் ஜாய்ஸ் 4 ரன்னிலும், போட்டர்பீல்டு 2 ரன்னிலும், பால்பிரைனி டக்அவுட்டிலும் அடுத்தடுத்து வெளியேறினார்கள். 3-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை அயர்லாந்து 6.1 ஓவரில் 5 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டை இழந்துள்ளது.
    ×