search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோலாகலம்"

    • இன்று திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது
    • திருவிழா ஏற்பாடுகளை தக்கார் ஜெகநாதன், செயல்அலுவலர் மணிகண்டன் செய்தனர்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், ஊட்டி புதுஅக்ரகாரம் வேணுகோபாலசுவாமி கோவிவில் ஜெயந்தி விழா கோலாகலமாக நடை பெற்றது. அப்போது சுவாமிக்கு திருமஞ்சனம், திருவாராதனம் நடத்தப்பட்டது. மாலையில் பெருமாள் முக்கிய வீதிகள் வழியாக வீதிஉலா வந்து அருள்பாலித்தார்.

    பின்னர் உறியடி உற்சவம்சிறப்பாக நடந்தது. இன்று ) திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடு களை தர்கார் ஜெகநாதன், ஆய்வர் ஹேமலதா, செயல் அலுவலர் மணிகண்டன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • ஆடி மாதம் 1 தேதி அன்று சிறப்பு பூஜைகள் செய்து ஊர் முக்கி யஸ்தர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டு காளைகளுக்கு மாலை சந்தனமிட்டு எருதாட்டம் நடத்தப்படுவது வழக்கம்.
    • விழாவில் கலந்து கொண்ட நூற்றுக்கணக்கான இளைஞர்கள் காளைகளைப் பிடித்து கோவிலை சுற்றி வலம் வந்தனர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகில் உள்ள பெரியாம்பட்டியில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 1 தேதி அன்று சிறப்பு பூஜைகள் செய்து ஊர் முக்கி யஸ்தர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டு காளைகளுக்கு மாலை சந்தனமிட்டு எருதாட்டம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் பல்வேறு ஊர்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 50க்கும் மேற்பட்ட காளைகளை தாரமங்கலம் சந்தைப் ேபட்டை பகுதியில் கட்டி வைத்து காளைகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டு பெரியாம்பட்டியில் உள்ள செல்வ விநாயகர் கோவில் வளாகத்திற்கு கொண்டுவரப்பட்டது.

    இங்கு நேற்று பகல் 1 மணி அளவில் தொடங்கிய எருதாட்டம் மாலை 5 மணி வரை நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட நூற்றுக்கணக்கான இளைஞர்கள் காளைகளைப் பிடித்து கோவிலை சுற்றி வலம் வந்தனர்.

    எரு தாட்டத்தை காண பெரியாம்பட்டி புளிய மரத்து காடு நங்கிரிபட்டி ஏரிக்காடு சீராய் கடை மேட்டுக்காடு சிக்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கா னோர் திரண்டு வந்து பார்வையிட்டனர். எருதுகள் பொதுமக்கள் கூட்டத்தில் புகுந்த போது பெருமாள்.(60 )என்ற முதியவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    • ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம் அதன்படி சேலத்தில் உள்ள அம்மன்கோவில்களில் கடந்த சில நாட்களாக ஆடித்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • பொங்கல் வைத்து, அலகு குத்திவந்து பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

    சேலம்:

    ஆடி மாதம் அம்மன் மாதம் என்பார்கள். ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம் அதன்படி சேலத்தில் உள்ள அம்மன்கோவில்களில் கடந்த சில நாட்களாக ஆடித்திருவிழா கோலாகலமாக கொண்டா டப்பட்டு வருகிறது.

    எடப்பாடி மேட்டுத் தெரு மாரியம்மன் ஆலயத்தில் திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி நேற்று தீ குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் தீ குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.


    சேலம் மாநகரில் உள்ள அனைத்து மாரியம்மன் கோவில்களுக்கும் தாய் கோவிலாக கோட்டை மாரியம்மன் கோவில் விளங்குகிறது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் கடந்த மாதம் 26-ந் தேதி பூச்சாட்டுதலுடன்ஆடித் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து கோவிலில் தினமும் அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.

    கடந்த 8-ந் தேதி சக்தி அழைத்தல் நிகழ்ச்சியும், தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான பொங்கல் வைத்தல் நேற்று முன்தினம் தொடங்கியது. கடந்த 2 நாட்களாக சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து விடிய, விடிய பொங்கல் வைத்து அம்மனை வழி பட்டனர்.

    இதற்காக கோவில் பின்புறம் சிறப்பு வசதி செய்யப்பட்டிருந்தது. மேலும், பக்தர்கள் சிலர் மாவிளக்கு மற்றும் பூங்கரகம் எடுத்து வந்து அம்மனை வழிபட்டனர். இன்றும் ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்கள் வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர். தீச்சட்டி எடுத்தல், அலகு குத்துதல், முளைப்பாரி எடுத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். நாளையும் (வெள்ளிக்கிழமை) கோவிலில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தப்படுகிறது.

    சேலம் அம்மாபேட்டை செங்குந்தர் மாரியம்மன் கோவிலில் நேற்று தீமிதி விழா நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும், பெண்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்து வந்தும் அம்மனை வழிபட்டனர். அம்மாப்பேட்டை பலப்பட்டறை மாரியம்மன் கோவிலிலும் தீ மிதித்தல் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்கள் அலகு குத்தி கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். மேலும், குகை மாரியம்மன், காளியம்மன் கோவிலிலும் நேற்று இரவு தீ மிதிவிழா நடந்தது. இதில், விரதம் இருந்த பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    செவ்வாய்பேட்டை மாரியம்மன், நெத்திமேடு தண்ணீர் பந்தல் காளியம்மன், அன்னதானப்பட்டி மாரியம்மன், சின்னக்கடைவீதி சின்ன மாரியம்மன், அய்யந்திருமாளிகை மாரியம்மன் உள்பட பல்வேறு அம்மன் கோவில்களிலும் நேற்று சிறப்பு அலங்காரம் செய்து பூஜை நடந்தது. அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர்.

    வண்டி வேடிக்கை

    சேலம் குகை ஸ்ரீமாரியம்மன், காளியம்மன் கோயிலில் நடக்கும் வண்டி வேடிக்கை நிகழ்ச்சி 100 வருடங்களுக்கு மேலாக மக்களிடையே மிகவும் புகழ்பெற்றுவிளங்கி வருகிறது. இந்த ஆண்டு ஆடித்திருவிழாவில் வண்டி வேடிக்கை நிகழ்ச்சி இன்று மாலை நடக்கிறது. இதில் கண்ணைக் கவரும் வண்ண மின் விளக்குகளால், அலங்கரிக்கப்பட்ட தேர்களில் கடவுள் வேடமணிந்தவர்கள், மக்கள் கூட்டத்தில் வலம் வந்து ஆசி வழங்குவார்கள். சேலம் மாநகரின் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், வண்டி வேடிக்கை நிகழ்ச்சியை, குழந்தைகளுடன் கண்டுகளிப்பர். இதையொட்டி குகை பகுதியில் இன்று கூடுதல் போலீசார் பாதுகப்புக்கு நிறுத்தப்பட்டு உள்ளனர்.

    ×