ஊட்டி வேணுகோபால சுவாமி கோவிலில் ஜெயந்தி விழா கோலாகலம்

இன்று திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது திருவிழா ஏற்பாடுகளை தக்கார் ஜெகநாதன், செயல்அலுவலர் மணிகண்டன் செய்தனர்
ஊட்டி வேணுகோபால சுவாமி கோவிலில் ஜெயந்தி விழா கோலாகலம்
Published on

ஊட்டி,

நீலகிரி மாவட்டம், ஊட்டி புதுஅக்ரகாரம் வேணுகோபாலசுவாமி கோவிவில் ஜெயந்தி விழா கோலாகலமாக நடை பெற்றது. அப்போது சுவாமிக்கு திருமஞ்சனம், திருவாராதனம் நடத்தப்பட்டது. மாலையில் பெருமாள் முக்கிய வீதிகள் வழியாக வீதிஉலா வந்து அருள்பாலித்தார்.

பின்னர் உறியடி உற்சவம்சிறப்பாக நடந்தது. இன்று ) திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.

விழாவிற்கான ஏற்பாடு களை தர்கார் ஜெகநாதன், ஆய்வர் ஹேமலதா, செயல் அலுவலர் மணிகண்டன் ஆகியோர் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com