search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bullfight"

    • ஆடி மாதம் 1 தேதி அன்று சிறப்பு பூஜைகள் செய்து ஊர் முக்கி யஸ்தர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டு காளைகளுக்கு மாலை சந்தனமிட்டு எருதாட்டம் நடத்தப்படுவது வழக்கம்.
    • விழாவில் கலந்து கொண்ட நூற்றுக்கணக்கான இளைஞர்கள் காளைகளைப் பிடித்து கோவிலை சுற்றி வலம் வந்தனர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகில் உள்ள பெரியாம்பட்டியில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 1 தேதி அன்று சிறப்பு பூஜைகள் செய்து ஊர் முக்கி யஸ்தர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டு காளைகளுக்கு மாலை சந்தனமிட்டு எருதாட்டம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் பல்வேறு ஊர்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 50க்கும் மேற்பட்ட காளைகளை தாரமங்கலம் சந்தைப் ேபட்டை பகுதியில் கட்டி வைத்து காளைகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டு பெரியாம்பட்டியில் உள்ள செல்வ விநாயகர் கோவில் வளாகத்திற்கு கொண்டுவரப்பட்டது.

    இங்கு நேற்று பகல் 1 மணி அளவில் தொடங்கிய எருதாட்டம் மாலை 5 மணி வரை நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட நூற்றுக்கணக்கான இளைஞர்கள் காளைகளைப் பிடித்து கோவிலை சுற்றி வலம் வந்தனர்.

    எரு தாட்டத்தை காண பெரியாம்பட்டி புளிய மரத்து காடு நங்கிரிபட்டி ஏரிக்காடு சீராய் கடை மேட்டுக்காடு சிக்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கா னோர் திரண்டு வந்து பார்வையிட்டனர். எருதுகள் பொதுமக்கள் கூட்டத்தில் புகுந்த போது பெருமாள்.(60 )என்ற முதியவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    • பெரிய கருமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, ஆண்டுதோறும் எருதாட்டம் நடைபெறும்.
    • அதன்படி இந்த ஆண்டு கோவில் திருவிழாவையொட்டி நேற்று எருதாட்டம் நடைபெற்றது.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் ஊராட்சி ஒன்றியம் கருக்கல்வாடியில் பிரசித்தி பெற்ற பெரிய கருமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, ஆண்டுதோறும் எருதாட்டம் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு கோவில் திருவிழாவையொட்டி நேற்று எருதாட்டம் நடைபெற்றது.

    கோவில் வளாகத்தில் மாலை 3 மணிக்கு ேகாவில் மாடு அழைத்து வரப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து கருக்கல்வாடி, தாரமங்கலம், சின்னப்பம்பட்டி, முத்து நாயக்கன்பட்டி, இளம்பிள்ளை, அமரகுந்தி, முனியம்பட்டி, கொல்லப்பட்டி உள்ளிட்ட ஊர்களில் இருந்து 250-க்கும் மேற்பட்ட காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக களம் இறங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

    இந்த காளைகள் 3 முறை கோவிலை வலம் வர செய்து களத்தில் இறக்கி விடப்பட்டன. அந்த மாடுகள் முன்பு துணியால் செய்த பொம்மைகளை காண்பித்து இளைஞர்கள் விளையாட்டு காட்டினர்.

    இந்த எருதாட்டத்தை காண சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் குவிந்திருந்தனர். அவர்கள் எருதாட்டத்தை கண்டு ரசித்தனர்.

    ×